15 நாட்களில் கடன் அடைய பரிகாரம்

bairavar2
- Advertisement -

வாங்கிய கடனை உடனே திருப்பிக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் குடும்பத்திற்கே அவமானம் ஏற்பட்டு விடும். தலைகுனிவு ஏற்பட்டு விடும் என்ற சூழ்நிலையில் நிறைய குடும்பங்கள் இருக்கிறது. அதுவும் குறிப்பிட்ட கெடு இருக்கும்போது, அந்த நாளுக்குள் கடனை திருப்பி தருவதற்குள் நம்முடைய உயிர் போய் திரும்பும்.

இன்றைய சூழ்நிலையில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல், ஊரை விட்டு ஓடக்கூடிய குடும்பங்களும், அவமானப்பட்டு தவறான முடிவுகளை எடுக்கக்கூடிய குடும்பங்களும் ஏராளம். உங்களுக்கும் இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், பின் சொல்லக் கூடிய இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை செய்யுங்கள். கூடிய சீக்கிரத்தில் உங்களுடைய கடன் பிரச்சனை தீரும். உங்களை கடன் பிரச்சனையிலிருந்து சீக்கிரத்தில் வெளி கொண்டு வரப் போகும் அந்த வழிபாடு என்ன. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

15 நாட்களில் கடன் தீர பரிகாரம்

முதலில் இந்த வழிபாடு செய்வதற்கு முன்பு முதல் மூன்று நாட்கள் நீங்கள் விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும். நாம் செய்யக்கூடிய வழிபாட்டில் எந்த தடைகளும் வரக்கூடாது என்று பிரார்த்தனை வைக்க வேண்டும். இந்த பதிவை நீங்கள் என்று படித்தாலும் அன்றிலிருந்தோ, அதற்கு மறுநாளில் இருந்தோ, இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

நாள் கிழமை எல்லாம் இதற்கு கணக்கு கிடையாது. நாளைக்கு விநாயகர் கோவிலுக்கு போங்க. மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி, ‘நான் கடன் தீர செய்ய போகும் பரிகாரம் எந்த தடையும் இல்லாமல் முழுமையாக நிறைவு பெற வேண்டும்’ என்று வேண்டி அந்த விநாயகரை 11 முறை சுற்றி வர வேண்டும். இந்த வழிபாட்டை மூன்று நாள் செய்யணும்.

- Advertisement -

மூன்று நாட்கள் கழித்து உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோயிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அங்கு பைரவர் சன்னிதி இருக்கும். இந்த வழிபாட்டை தொடர்ந்து 27 நாட்கள் மேற்கொள்ள வேண்டும். 15 நாட்களில் உங்களுடைய கஷ்டம் தீர்ந்தாலும், 27 நாட்களை தவறவிடக்கூடாது. தொடர்ந்து 27 நாட்கள் இந்த விளக்கை ஏற்றனும். மாலை 6 மணிக்கு மேல் தான் இந்த விளக்கை ஏற்ற வேண்டும்.

பைரவர் சன்னிதானத்திற்கு செல்லும் போதே வீட்டிலிருந்து இந்த முடிச்சை தயார் செய்யவும். 27 மிளகு எடுத்துக்கோங்க. அந்த மிளகை லேசாக பேப்பரில் வைத்து ஒன்றும் இரண்டுமாக நுணுக்கி கொள்ளுங்கள். வெள்ளை துணியில் இந்த மிளகை போட்டு சின்ன முடிச்சாக கட்டிக் கொள்ளவும். கோவிலுக்கு போகும் போது இந்த முடிச்சை எடுத்துட்டு போங்க.

- Advertisement -

பைரவர் சன்னிதானத்திற்கு முன்பாக ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, அந்த நல்லெண்ணெயில் இந்த மிளகுமூட்டையை போட்டு, அப்படியே தீபம் ஏற்றி, அந்த தீபத்திற்கு முன்பு ஐந்து நிமிடம் அமர்ந்து உங்களுக்கு தொல்லை கொடுத்து வரக்கூடிய அந்த ஒரு கடன் இருக்குதல்லவா, ‘இன்னாரிடம் கைநீட்டி கடன் வாங்கி விட்டேன். இந்த கடனை திருப்பிக் கொடுக்க எனக்கு ஒரு வழியை காட்டு பைரவா’ என்று அவர் பாதங்களை சரணடையுங்கள்.

தொடர்ந்து 27 நாள் இந்த விளக்கை ஏற்றி முடிப்பதற்குள் உங்களுக்கு அவமானத்தை தேடி தருவதாக அந்த இருந்த அந்த கடன் தொல்லை நீங்கும். ஏதாவது ஒரு விதத்தில் உங்கள் கஷ்டத்தை தீர்த்து வைக்க அந்த பைரவர் ஒரு வழியை காட்டிக் கொடுப்பான். இந்த பரிகாரத்தை சுலபமா நினைக்காதீங்க. நம்பிக்கை உள்ளவர்கள் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பரம்பரை பரம்பரையாக தொடரும் குடும்ப கஷ்டம் நீங்க பரிகாரம்

பகல் நேரத்தில் போய் தீபம் ஏற்றக்கூடாது. பைரவருக்கு மாலை 6 மணிக்கு மேல் தீபம் ஏற்றுவது சிறப்பு. முடிந்தால் காலை 6 மணிக்கு முன்பு இந்த தீபத்தை ஏற்றலாம். நம்பிக்கை உள்ளவர்கள் எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம் இந்த தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -