5 பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் 5 எளிய பரிகாரங்கள்! காலம் கடந்து நிற்கும் இந்த சூட்சும பரிகாரங்கள் உங்களுக்கு தெரியுமா?

astro-pray
- Advertisement -

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கும். அந்த பிரச்சனைகளை நினைத்து பயந்து ஓடி விடாமல் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வார்கள் வாழ்க்கையை ஜெயிக்கிறார்கள். பழங்காலங்களில் எதிர்காலத்தை கணிக்கும் நபர்களை குறி சொல்பவர்கள் என்று கூறுவார்கள். இத்தகையவர்கள் குறி சொல்வது மட்டும் அல்லாமல் பிரச்சினைகளுக்கு பரிகாரம் கூறவும் செய்வார்கள். அத்தகைய எளிய பரிகாரங்களில் உங்களுடைய பிரச்சினைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரிகாரங்களும் அடங்கியுள்ளன. இத்தகைய சூட்சும பரிகாரங்களை பற்றிய 5 குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம். எந்த ஒரு பரிகாரத்தையும், நம்பிக்கையோடு செய்யும் போது தான் பயனளிக்கும். இந்த சில பரிகாரங்களும் அப்படித்தான். நம் பிரச்சனைகளுக்கு உரிய பரிகாரங்களை செய்து பயன்பெறலாமே!

பரிகாரம் 1:
ஏதோ ஒரு விஷயத்திற்காக நீங்கள் நம்பிக்கையோடு வெளியில் செல்லும் பொழுது அந்த விஷயம் தடை இல்லாமல் வெற்றி பெற வேண்டும் என்றால் மங்களகரமான பொருட்களில் ஒன்றாக இருக்கும் மஞ்சள் தூள் அல்லது மஞ்சள் கொம்பு ஒன்றை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

- Advertisement -

பரிகாரம் 2:
புதிதாக வீடு கட்டுகிறீர்கள் அல்லது வியாபாரம் செய்ய கடை பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள் குடிபுகும் பொழுது பூஜைகள் எல்லாம் செய்து முடித்த பின்பு ஒரு செம்பு அல்லது பித்தளை கலசம் ஒன்றில் 7 மஞ்சள் கொம்புகள், கொட்டை பாக்கு 7, சிறிய அளவிலான நாகர் ஏதேனும் உலோகத்தால் ஆனது 2, வெள்ளித் தகடு 1 சிறியது இது எல்லாம் போட்டு கலசத்தை மூடி காற்று புகாதவாறு செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை மேற்குத் திசையில் யாருடைய கண்களுக்கும் படாதபடி வைத்து விடுங்கள். ஒரு வருடம் இதை மாற்ற வேண்டிய அவசியமில்லை இவ்வாறு செய்ய அந்த புதிய இடத்தில் இருக்கும் திருஷ்டிகள் நமக்கு வந்து சேராது, அதனால் வரும் பாதிப்புகள் நீங்கும்.

பரிகாரம் 3:
வீட்டில் தீராத நோய்த்தொற்று காரணமாக யாராவது அவதிப்பட்டுக் கொண்டிருந்தால் அவர்களுக்கு இருக்கும் பீடையை நீக்க ஒரு சிறிய அளவிலான மண்சட்டியில் இனிப்பான மஞ்சள் நிற லட்டு ஒன்று வைத்து கொள்ளுங்கள். அதனுடன் முட்டை 1, ஒரு ரூபாய் நாணயங்கள் 2, கொஞ்சம் குங்குமம் போட்டு பாதிக்கப்பட்டவரை கிழக்கு நோக்கி அமர செய்து, மூன்று முறை அவர்களுடைய தலையில் வலது புறமாக மட்டும் சுற்றி நாற்சந்தியில் கொண்டு போய் போட்டு விடுங்கள். இதனால் அவர்களுக்கு பிடித்த நோய் விலகும்.

- Advertisement -

பரிகாரம் 4:
தீராத கடன் பிரச்சனை வாட்டி வதைத்துக் கொண்டிப்பவர்களுக்கு, எவ்வளவு பரிகாரம் செய்தும் நீங்க முடியாத இந்த பிரச்சனையை சுலபமாக நீக்க ஒன்னேகால் அடிக்கு ஒரு வெள்ளைத் துணியை கத்தரித்து எடுத்துக் கொள்ளுங்கள். நடுவில் ஒரு ரோஜா, பின்னர் அதன் நான்கு புறங்களிலும் சிகப்பு ரோஜா ஒன்றை இதே போல வைத்து கட்டிக் கொள்ளுங்கள். இதை மூன்று நதிகள் சங்கமிக்கும் ஓர் இடத்தில் கொண்டு போய் போட ஜாதக ரீதியான கடன் பிரச்சனைகள் முற்றிலும் ஒழியும்.

பரிகாரம் 5:
பணப்புழக்கம் அதிகரிக்க அரச மர வழிபாடு செய்வது ரொம்பவே நல்ல பலனை கொடுக்கும். சனிக்கிழமைகளில் 108 முறை அரச மரத்தை சுற்றி வலம் வந்து தூபம் காண்பித்து, விளக்கு ஏற்றி, இனிப்பு பண்டம் நிவேதனம் வைத்து 8 மணிக்குள் வழிபாட்டை முடித்து வந்தால் பணம் புழங்கும்.

- Advertisement -