வடகிழக்கு மூலையில் இந்த ஒரு பொருளை வைத்துப் பாருங்கள். வராத வருமானம், கூட வண்டி நிறைய வீடு தேடி வந்து சேரும்.

vasthu-money
- Advertisement -

நிரந்தர வருமானம் உங்களுக்கு கிடைக்க வேண்டுமா. அடுத்த மாத செலவுக்கு என்ன வழி, என்று யோசிக்க கூடிய நிலைமை உங்களுக்கு வரவே கூடாதா. உங்களுக்காக மட்டும் தான் இந்த பதிவு. சிலபேர் சில வேலைகளை ஸ்மார்டாக செய்துவிடுவார்கள். அதன் மூலம் அவர்களுக்கு நிரந்தர வருமானம் வந்து கொண்டே இருக்கும். சில பேர் எவ்வளவு தான் உழைத்தாலும் வருமானம் நிரந்தரமாக இருக்காது.

இந்த மாதம், வந்த வருமானம், அடுத்த மாதம் வருமா வராதா என்ற அச்சத்தில் இருப்பார்கள். உதாரணத்திற்கு அரசாங்க வேலை செய்பவர்களுக்கு மாதம் ஒன்றாம் தேதி ஆனால், கையில் டான்னு சம்பளம் வந்துவிடும். அவர்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் இந்த டார்கெட் அச்சீவ் பண்ணா தான் சம்பளம், இந்த மாதம் இவ்வளவு விற்பனை நடந்தால் தான் உங்களுக்கு இவ்வளவு கமிஷன், என்று வேலை பார்ப்பவர்களுடைய நிலைமை எல்லாம் ரொம்ப கஷ்டம்.

- Advertisement -

சில பிரைவேட் கம்பெனிகள் எல்லாம் எப்போதுதான் நம்மை வேலையை விட்டு தூக்கும் என்று சொல்லவே முடியாது. இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து எல்லாம் விடுபட்டு, நமக்கு என்று நிரந்தர வேலை, நமக்கென்று நிரந்தர தொழில், நமக்கென்று ஒரு நிரந்தர வருமானத்தை தேடிக்கொள்ள எல்லோருக்கும் ஆசை இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இந்த சின்ன பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும்.

நிரந்தரமான பண வரவை கொடுக்கும் 6 நெல்லிக்காய்கள்:
முதலில் ஆறு நெல்லிக்காய்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே இருக்கும் பல்பை வெட்டி எடுத்து விடுங்கள். உள்ளே இருக்கும் கொட்டை மட்டும் நமக்கு போதும். அந்த 6 கொட்டைகளை வெயிலில் காய வைத்து விட்டு, ஒரு வெள்ளை துணியில் வைத்து, முடிச்சாக கட்டி வீட்டின் வடகிழக்கு மூலையில் வைத்து விடுங்கள். பிறகு பாருங்கள் உங்களுக்கு வருமானம் எப்படி வருது என்று. நிரந்தர வருமானத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் தான் தேடி தேடி ஓட வேண்டும். உங்களுடைய ஓட்டத்தை வேகப்படுத்த, முயற்சிகளில் வரும் தடைகளை நீக்க பரிகாரம் கை கொடுக்கும்.

- Advertisement -

இந்த கொட்டைகள் அவ்வளவு எளிதில் கெட்டுப்போகாது. வருடத்திற்கு ஒருமுறை பழைய கொட்டைகளை கால்படாத இடத்தில் போட்டுவிட்டு, புதிய கொட்டைகளை வைத்துக் கொள்ளலாம். இதற்கு ஊதுவத்தி காண்பிக்க வேண்டும், கற்பூரம் காண்பிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. யார் கண்ணுக்கும் தெரியாமல் வடகிழக்கு மூலையில் அலமாரிக்கும் மேலே போட்டு வைத்தாலும் சரிதான். ஒரு ஆணியில் மாட்டி வைத்தாலும் சரிதான்.

இந்த வேலையில், இந்த தேதியில் நிச்சயம் உங்கள் கைக்கு இவ்வளவு தொகை வந்தே சேரும். அந்த அளவுக்கு நிரந்தரமான அதிர்ஷ்டமும், வருவாயும் கிடைக்க தாந்திரீகத்தில் சொல்லப்பட்ட எளிமையான பரிகாரம் இது. இதேபோல தினமும் காலையில் ஒரு நெல்லிக்காய்களை சாப்பிடக்கூடிய வழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுபவர்களுக்கு ஜோதிட ரீதியாக சுக்கிர அதிர்ஷ்ட யோகம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. கூடவே புதன் பகவானின் அருளும் முழுமையாக கிடைக்கும். திறமையாக செயல்பட்டு அதிர்ஷ்டம் பெறப்பட்டு வாழ்க்கையில் கொடி கட்டி பறக்க தொடங்கி விடுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருக்க இந்த காரியத்தை சரியாக செய்தாலே போதும் நீங்கள் ஆலயம் சென்று வணங்காமாலே தெய்வம் உங்கள் வீடு தேடி வந்து விடும்.

இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா. நெல்லிக்காய், நெல்லிக்காய் கொட்டை இவைகள் எல்லாமே பெருமாளின் அம்சமாக சொல்லப்பட்டுள்ளது. ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான தாந்திரீக பரிகாரம் உங்களுக்கு பிடித்திருந்தால், முழு நம்பிக்கை இருந்தால் செய்து பாருங்கள். நிச்சயம் நல்லது மட்டுமே நடக்கும் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -