வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருக்க இந்த காரியத்தை சரியாக செய்தாலே போதும் நீங்கள் ஆலயம் சென்று வணங்காமாலே தெய்வம் உங்கள் வீடு தேடி வந்து விடும்.

amman
- Advertisement -

இன்று பெரும்பாலானோர் கேட்கும் கேள்வி தெய்வம் எங்கள் வீட்டில் குடிக் கொண்டு இருக்கிறதா இல்லையா என்பது தான். தெய்வம் நம் வீட்டில் குடிக் கொண்டு இருக்க வேண்டுமென்றால் முதலில் நாம் அதற்குரிய வகையில் நடந்து கொள்கிறோமா என்பதை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் ஒரு சில குணங்களை சரி செய்து கொண்டாலே தெய்வம் நம்முடன் நிரந்தரமாக நிற்கும் என்று ஆன்மீகம் சொல்கிறது. அது என்ன என்பதை இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தெய்வம் இல்லாத இடம் என்று இன்று உலகில் எதுவும் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் வீட்டில் மட்டும் தெய்வம் இல்லாது போகுமா என்ன ஆனால் இங்கு நாம் யோசிக்க வேண்டியது  வீட்டில் தெய்வத்தின் அனுகிரகம் அங்கு இருக்கிறதா? என்பது தான் கேள்வி. இப்போது அந்தக் கேள்விக்கான பதிலை தான் தெரிந்து இந்த பதிவில் கொள்ள போகிறோம்.

- Advertisement -

வீட்டில் தெய்வ சக்தி இருப்பதை அறிய:
வீட்டில் இருப்பவர்கள் எப்போதும் மன நிறைவுடன் சண்டை சச்சரவு இன்றி, நோய் நொடிகள் ஏதும் இன்றி நல்ல முறையில் உழைத்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருந்தால் அந்த வீட்டில் தெய்வ அனுகிரகம் முழுமையாக நிறைந்திருக்கிறது என்று அர்த்தம்.

அடுத்து நாம் எதிர்பார்க்காத நேரத்தில் நல்ல விஷயங்களாகவே நடப்பது.  நாம் என்ன நினைக்கிறோமோ அது நடப்பது.  நமக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவை எல்லாமே நமக்கு கைகூடினால் அந்த இடத்தில் தெய்வத்தின் பரிபூரண ஆசீர்வாதம்  இருக்கிறது என்று பொருள்.

- Advertisement -

அதே போல் வீட்டில் நடக்கும் சிறு சிறு விஷயங்களை கூட பெரிது படுத்தாமல் ஒருவர் செய்யும் பிழையை மற்றொருவர் மன்னித்து அனுசரணையுடன் வாழ்வது மட்டுமின்றி, பிறர் செய்யும் தவறுகளை கூட பெரிது படுத்தாமல் அதை சரி செய்து அவர்களுடன் இணக்கமாக இருப்பதற்கான மனநிலை இருக்குமானால் அந்த இடத்தில் தெய்வம் நிறைந்து இருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு மனிதன் பிறர் குறைகளை பெரிது படுத்தாமல் அவற்றை சரி செய்து அவர்களுடன் வாழ முற்பட்டால் அந்த மனதானது தெளிவடைந்து விட்டது என்று அர்த்தம். தெளிவடைந்த ஒரு மனம் தெய்வம் குடிக்க கொண்டு இருக்கும் இடமாகவே சொல்லப்படுகிறது. இப்படி எண்ணங்கள் தெளிவாகி குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து நாம் நினைப்பவை அனைத்தும் கைக்கூட வேண்டும் என்றால் நம் மனம் முதலில் செம்மை அடைய வேண்டும். மனம் செம்மை அடைய வேண்டும் என்றால் நாம் நிச்சயம் மந்திரங்களை ஜெபிக்க வேண்டும்.

- Advertisement -

மனம் செம்மையானால் மந்திரம் அதை சபிக்க தேவையில்லை என்ற ஒரு பழமொழியே இருக்கிறது. நம்முடைய மனம் ஆனது கடவுளை நினைத்து ஜெபித்து செம்மை அடைந்து விட்டால், நீங்கள் ஆலயம் சென்று இறைவனை வணங்கி தான் அருளை பெற வேண்டும் என்று கிடையாது. நீங்கள் இருக்கும் இடம் தெய்வமே வந்து உங்களுக்கு அனுக்கிரகம் செய்யும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: இன்று இரவுக்குள் இந்த 1 பொருளை வாங்கி பூஜை அறையில் வைத்து விட்டால் போதும். ராம நவமையான இன்று, அந்த ராமரின் பரிபூரணமான ஆசீர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும்.

தெய்வ அனுக்கிரகம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை  தெரிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். தெய்வ அனுகிரகம் நமக்கு கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதும் இதன் மூலம் உங்களுக்கு ஓரளவிற்கு தெரிந்திருக்கும். இந்த விஷயங்களை நாம் கடைபிடித்து தெய்வம் அணுகிரகத்தை பெற்று நல்ல முறையில் வாழ்வோம் என்ற கருத்தோடு பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -