ஏழு நாட்களில், ஏழு வயதை குறைக்க மிக மிக எளிமையான அழகு குறிப்பு. பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் முகத்தில் சுருக்கம் தெரியவே தெரியாது.

face1
- Advertisement -

நம்முடைய முகத்தில் வயதான தோற்றத்தை வெளிப்படுத்துவது எது. முகத்தில் விழுந்திருக்கும் சுருக்கங்களும், ஆங்காங்கே தெரியும் கோடுகளும் தான். வாயை சுற்றி சில பேருக்கு கோடு விழுந்து கன்னம் தளர்ந்து வயதான தோற்றத்தை வெளிப்படுத்தும். சில பேருக்கு சிறு வயதிலேயே இந்த முகச்சுருக்கங்களும் கோடுகளும் முகத்தில் தெரிய தொடங்கும். இளமையாக இருப்பவர்கள், வயதான தோற்றத்தை தள்ளிப் போடவும், இந்த குறிப்பை பின்பற்றலாம். ஏற்கனவே உங்களுக்கு முகத்தில் சுருக்கங்கள் அதிகமாக இருக்கிறது, வயதான தோற்றம் தெரிகிறது, அதை குறைக்க வேண்டும் என்பவர்களும் இந்த குறிப்பை பின்பற்றலாம். மிக மிக எளிமையான இரண்டு அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

குறிப்பு 1:
இந்த குறிப்புக்கு அன்னாசி பூ, மற்றும் கிராம்பு நமக்கு தேவை. இந்த அன்னாச்சி பூவை நட்சத்திர சோம்பு என்றும் சிலர் சொல்லுவார்கள். 4 அன்னாசி பூ, 1 ஸ்பூன் கிராம்பு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில், 1 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, இந்த இரண்டு பொருட்களையும் போட்டு, நன்றாக கொதிக்க வையுங்கள்.

- Advertisement -

மிதமான தீயில் தண்ணீர் 15 நிமிடங்கள் கொதிக்கட்டும். தண்ணீர் நிறம் மாறி வந்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு, இந்த தண்ணீர் நன்றாக ஆறிய பின்பு வடிகட்டி, இந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால் 7ல் இருந்து 10 நாட்கள் கெட்டுப் போகாது.

தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த ஸ்ப்ரேவை முகம் கழுத்து பகுதிகளில் அடித்துக் கொண்டு, ஜென்டில் ஆக இரண்டு நிமிடம் மசாஜ் செய்து அப்படியே காய விட்டு விடுங்கள். முகம் கழுவ வேண்டும் என்று அவசியம் இல்லை. மறுநாள் காலை எழுந்து குளிர்ந்த தண்ணீரில் வழக்கம் போல உங்கள் முகத்தை கழுவிக்கொள்ளலாம்.

- Advertisement -

குறிப்பு 2:
காலையில் எழுந்து முகம் கழுவிய பின்பு இந்த மாஸ்கை போட வேண்டும். இதற்கு காய்ச்சாத பால் தேவையான அளவு, பழுத்த வாழைப்பழம் தேவையான அளவு,  தேவை. பழுத்த வாழைப்பழத்தை தோல் உரித்து  துண்டு துண்டுகளாக வெட்டி, கையிலே நன்றாக நசுக்கிக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அடிக்கக்கூடாது. கையாலேயே நசுக்க நசுக்க வாழைப்பழம் பஞ்சாமிர்தம் போல கொல கொலவென வந்துவிடும். இந்த வாழைப்பழத்தோடு தேவையான அளவு பால் ஊற்றி கலந்தால் ஒரு பேக் தயார்.

இந்த பேக்கை கழுவிய முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். கழுத்து பகுதியில் இருந்து இந்த மாஸ்கை போட்டுக்கோங்க. பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடுங்கள். ஏழு நாள் மேல் சொன்ன இந்த விஷயங்களை பின்பற்றி வர உங்களுடைய இழந்த இளமை மீண்டும் திரும்பவும் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

நீங்க ஏற்கனவே ரொம்ப தான் அழகா இருக்கீங்க அப்படின்னு சொன்னாலும், இந்த குறிப்பை பின்பற்றி வந்தால் உங்கள் அழகு ரொம்ப நாளைக்கு அப்படியே இருக்கும். சீக்கிரம் வயதான தோற்றத்தை பெறாமல் இருக்க வீட்டில் இருந்தபடியே இந்த இரண்டு எளிய அழகு குறிப்புகளை பின்பற்றினால் போதும்.

இந்த பேக் மட்டும் போட்டால் கிளியோபாட்ரா போல மாறிவிடலாமா என்று சந்தேகத்திற்குள் செல்ல வேண்டாம். உங்களுடைய ஆரோக்கியம் சீராக இருக்க, அழகு மேம்பட உங்களுடைய உணவுப் பழக்க வழக்கத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். தேவையான தண்ணீரை பருக வேண்டும். காய்கறிகள், கீரை வகைகள் இவைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். முக்கியமாக இரவு நல்ல தூக்கம் இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: குப்பையில் தூக்கிப் போடும் இந்த 1 பொருள் இருந்தால் போதும். உங்கள் தலையில் இருந்து ஒரு முடி கூட உதிர்ந்து இனி குப்பைக்கு போகவே போகாது.

எக்காரணத்தைக் கொண்டும் அதிகமான மன அழுத்தம் இருக்கக் கூடாது. நிறைவான சந்தோஷமும், நிறைவான மனநிறைவும், நிறைவான சாப்பாடும் ஒரு மனிதனுக்கு இறுந்து விட்டால், அவனுக்கு இளமை ஆயுள் முழுவதும் இருக்கும். உடலளவில் இருக்கக்கூடிய இளமை காலத்தின் கட்டாயத்தால் குறைந்தாலும், மனதளவில் இருக்கக்கூடிய இளமை 100 வயதானாலும் அப்படியே இருக்க ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மேல் சொன்ன அழகு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -