பல லட்சம் கடனையும் அடைக்கும் பச்சைக் கற்பூர பரிகாரம்

cash pachai karpooram
- Advertisement -

எப்போதுமே மனிதனின் இருக்கும் மிகப்பெரிய தேவையானது பணம் தான். இந்த பணத்தேவையை பூர்த்தி செய்ய தான் தன்னுடைய அனைத்து ஆசைகளையும் தியாகம் செய்து அந்த பணத்தை சம்பாதிக்கிறார்கள். அப்படி சம்பாதிக்கும் பணத்தினால் நிம்மதியாக இருக்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது. ஏனெனில் சம்பாதிக்கும் பணம் போதாமல் கடன் வாங்கும் சூழ்நிலையும் வருகிறது.

மாதம் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்தாலும் கடைசியில் கையில் தங்குவது எதுவுமே இல்லை. சேமிப்பு என்று எடுத்துக் கொண்டால் அதுவும் சிரமம் தான். இந்த நிலையில் கடன் தொல்லை வேறு, இப்படி முழுக்க முழுக்க பணம் சார்ந்த பிரச்சினைகளாலேயே மனிதன் நொந்து போய் விடுகிறான். அதை எல்லாம் சரி செய்ய ஒரு எளிமையான பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

கடன் அடைந்து தன வரவை அதிகரிக்க பச்சை கற்பூரம்


இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போக்கும் பொருள் பச்சைக் கற்பூரம் பச்சைக் கற்பூரத்திற்கு பொதுவாகவே பணத்தை ஈர்க்கும் தன்மை உண்டு. இந்த பச்சைக் கற்பூரமானது மகாலட்சுமி தாயாருக்கு உகந்த பொருளாக பார்க்கப்படுகிறது. இதை வைத்து பல பரிகார முறைகள் உள்ளது. அதில் இரண்டு பரிகாரம் முறைகள் இதோ.

தன வரவிற்கு பச்சை கற்பூரம்

பணம் தாராளமாக வரவும் வந்த பணம் கையில் தங்கவும் வீண்விரயம் ஆகாமல் சேமிப்பாக மாறவும் பச்சைக் கற்பூரத்தை இந்த முறையில் பயன்படுத்துங்கள். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று காலையில் இருந்து மதியத்திற்குள் செய்வது மிகவும் நல்லது.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு பட்டால் ஆன சிகப்பு நிற துணி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் பச்சை கற்பூரத்தை வைத்து முடிச்சாக கட்டி மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக வைத்து வணங்கிய பிறகு, அதை பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இந்த முடிச்சை வாரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இதன் மூலம் வீட்டில் பண வரவு அதிகரிக்கும் பணம் கையில் தங்கும்.

கடனடைய பச்சைக் கற்பூரம்

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்கு மேல் இரவு 11 மணிக்குள் எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இதற்கு ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முழுவதும் குங்குமத்தை கொட்டி நிரப்பி விடுங்கள். அதன் மேல் ஒரு அகலை வைத்து அதனுள் மூன்று கிராம்பு கொஞ்சம் பச்சை கற்பூரம் போட்டு விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இந்த பச்சை கற்பூரத்தை கொளுத்தி விடுங்கள். கிராம்பு பச்சை கற்பூரத்தில் நன்றாக எரிந்து கொசுக்க வேண்டும். இந்த தீ எரியும் பொழுது உங்களுடைய கடன் பிரச்சனை அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அது மட்டும் இன்றி பண தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரியாக வேண்டும் எனவும் வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை பூஜையறை, வரவேற்பறை என எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்து செய்யலாம். அதன் பிறகு எரிந்ததை வெளியே கொண்டு சென்று தட்டி விடுங்கள். அந்த அகலை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போல் தட்டில் இருக்கும் குங்குமத்தை நீங்கள் தினமும் நெற்றிக்கு திலகமாக இட்டுக் கொள்ளலாம் அல்லது அடுத்த முறை இந்த பரிகாரத்தை செய்ய பயன்படுத்தி கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: சுக்கிர தோஷம் நீங்க மொச்சை பரிகாரம்

இந்த இரண்டு பரிகாரங்களையும் தொடர்ந்து செய்து வர பணவரவு அதிகரிப்பதுடன் கடனும் முழுமையாக அடைந்து விடும் என்ற சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்வதோடு கடனை அடைப்பதற்கான முயற்சியினை தொடங்கினார் நல்ல முறையில் பணவரவு ஏற்பட்டு கடன் விரைவில் அடையும்.

- Advertisement -