ஒன்பது நாளில் கடன் பிரச்சினை தீர பிள்ளையார் வழிபாடு

pillaiyar5
- Advertisement -

கடன் தொல்லை தாங்கவே முடியவில்லை. ஊரைவிட்டே ஓடிவிடலாம் போல இருக்கிறது என்று சில பேர் புலம்பி நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த அளவுக்கு பெரிய அளவில் கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட ஒரு விமோசனத்தை தரக்கூடிய பரிகாரம் இந்த விநாயகர் பரிகாரம். கடன் தொல்லை அல்லாமல் வேறு ஏதாவது காரியத்தடை இருக்கிறது. அந்த காரிய தடையை உடைக்கவும் இந்த வழிபாட்டு முறையை மேற்கொள்ளலாம்.

உதாரணத்திற்கு பெரிய அளவில் முயற்சி செய்தும் வேலையில்லாமல் இருப்பவர்கள். வீடு கட்டி அந்த காரியம் பாதியிலேயே தடைப்பட்டு நிற்பவர்கள். திருமணம் நிச்சயக்கப்பட்டிருக்கும். ஆனால் நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணம் நடக்குமா நடக்காதா என்ற சந்தேகத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஒன்பது நாள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால், உங்களுடைய முயற்சிகள் வெற்றி அடையும் காரிய தடை உடையும்.

- Advertisement -

கடன் தீர விநாயகர் வழிபாடு

இந்த வழிபாட்டிற்கு நீங்கள் சிரமப்பட்டு சேகரிக்க வேண்டிய ஒரு பொருள் சாணம், பசு மாட்டு சாணம். இந்த வழிபாட்டுக்கு பசு மாட்டு சாணம் கட்டாயமாக தேவை. அதிலும் கன்று போடாமல் இருக்கக்கூடிய பசுமாடு போடும் சாணம் கிடைத்தால் இன்னும் இன்னும் சிறப்பு. பசுமாடு வைத்து இருப்பவர்களிடம் கேட்டால் இந்த சாணத்தை எடுத்து வைத்துக் கொடுப்பார்கள்.

அந்த சாணத்தை கொண்டு வந்து உங்கள் கையால் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபாடு செய்யணும். வெற்றிலையின் மேல் அல்லது வாழை இலையிலோ மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து வழிபாடு செய்வது போலவே, இந்த சாணத்தை பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு குங்குமப்பொட்டு வைத்து எருக்கன் பூவை அதற்கு சூட்டி இந்த சாணப்பிள்ளையாரின் முன்பாக அமர்ந்து உங்களுடைய பிரார்த்தனையை வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த சாணத்தில் பிடித்து வைத்த பிள்ளையாருக்கு 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். 108 எருக்கன் பூ இருந்தால் அதில் அர்ச்சனை செய்வது சிறப்பு. முடியவில்லை என்றால் சாதாரண உதிரி புஷ்பங்களை வைத்து அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். அர்ச்சனையின் போது ‘ஓம் கம் கணபதயே நமஹ’ என்ற இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். ஏதாவது ஒரு கோரிக்கையை மனதில் நினைத்துக் கொண்டு இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

தினமும் பூஜை அறையில் இந்த வழிபாட்டை செய்யணும். தினமும் புது சாணத்தால் பிள்ளையாரை பிடித்து வைக்கணும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் பூஜை செய்த சாண பிள்ளையாரை அடுத்த நாள் எடுத்து செடி கொடிகளுக்கு கீழே அல்லது கால் படாத இடத்தில் போட்டு விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழிபாட்டை இடைவிடாது 9 நாட்கள் செய்து விட்டால் போதும். உங்களுடைய பிரச்சனைகளை அந்த விநாயகப் பெருமான் தீர்த்து வைப்பார்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நிறைவேற மந்திரம்

எளிமையான வழிபாடு சக்தி வாய்ந்த வழிபாடு. சக்தி வாய்ந்த மந்திரம். ஒன்பதே நாட்களில் நீங்கள் மனதில் நினைத்த கோரிக்கை நிச்சயம் நடந்தே தீரும். வாங்கிய கடனை திருப்பித் தர இந்த வழிபாட்டை மேற்கொண்டால் ஒன்பது நாட்களில் கடன் பிரச்சினையை தீர்க்க ஏதாவது ஒரு வழி கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -