நினைத்தது நிறைவேற மந்திரம்

vishnu manthiram
- Advertisement -

நாம் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுவாகவே ஆவோம். நம்முடைய எண்ணமும் செயலும் எதை நோக்கி பயணிக்கிறதோ அது தான் நமக்கு நடக்கும். ஆகையால் தான் நம் முன்னோர்கள் எண்ணம் நன்றாக இருந்தால் நடப்பவை யாவும் நன்றாக இருக்கும் என்று சொல்லி வைத்தார்கள். நம்முடைய எண்ணத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதை யாராலும் மறுக்க முடியாது.

அப்படியான உங்கள் எண்ணங்களுடன் தினமும் இந்த மந்திரத்தை சொல்லி இப்படி செய்தால் போதும். நீங்கள் நினைத்தயாவும் நிச்சயம் கைக் கூடும். அது என்ன மந்திரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

நினைத்தது நிறைவேற மந்திரம்

முதலில் உங்களுடைய தேவை எதுவோ அதை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு அது நடந்தே தீர வேண்டும் என்று ஆணித்தரமாக நீங்கள் நம்ப வேண்டும். அத்துடன் அது நடப்பதற்கான முயற்சிகள் அனைத்தையும் எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் எடுக்க வேண்டும். இது தான் அனைத்திற்குமான முதல் படி.

அடுத்து நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது வேலை, திருமணம், படிப்பு, வீடு கட்டுவது போன்ற எதுவாக இருந்தாலும் உறங்குவதற்கு முன்பு கடைசியாக அதை மனதில் நினைத்து அது எனக்கு நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அதே போல் காலை எழுந்தவுடன் படுக்கையை விட்டு எழும் முன்பே இரவு நினைத்ததை மீண்டும் ஒரு முறை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இது உங்களுடைய வேண்டுதல் பலிக்க இரண்டாவது படி.

- Advertisement -

இப்போது உங்கள் வேண்டுதலுக்கான இந்த மந்திரத்தையும் பார்ப்போம். அனைவருக்கும் காலையில் குளித்து முடித்த பிறகு நெற்றியில் குங்குமம் சந்தனம் விபூதி போன்ற ஏதேனும் ஒன்று வைக்கும் பழக்கம் இருக்கும். அப்படி நீங்கள் எதை வைப்பதாக இருந்தாலும் குறிப்பாக மஞ்சள் சந்தனம் இதற்கு உகந்தது. அதை வைக்கும் போது ஓம் நமோ நாராயண பகவதி என்ற இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே வைக்க வேண்டும்.

அதன் பிறகு இந்த சந்தனத்தையும் மஞ்சளையும் உங்கள் இடது கையில் நாடித்துடிப்பு கேட்கும் இடத்தில் இதே போல மந்திரத்தை சொல்லி வைத்துக் கொள்ளுங்கள். அப்படி மந்திரம் சொல்லி வைக்கும் போது உங்களுடைய அதே வேண்டுதலை மறுபடியும் சொல்லுங்கள். ஒரு நேரத்தில் ஒரு வேண்டுதலை மட்டும் வையுங்கள்.

இதையும் படிக்கலாமே: கஷ்டம் தீர வாராகி வழிபாடு

இது போல தொடர்ந்து 48 நாட்கள் செய்து வரும் போது நிச்சயம் உங்கள் வேண்டுதல் பலிப்பதற்கான யோகம் கிடைக்கும். அதை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு உங்களுடைய எண்ணங்களை ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -