ஒன்பது வாரம் முருகரை இப்படி கும்பிட்டால் சொந்த வீடு கட்டுவீங்க.

murugan2
- Advertisement -

சொந்த வீடு கட்ட வேண்டும். சொந்தமாக நிலம் வாங்க வேண்டும். வீடு வாங்க வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் முருகனை வழிபாடு செய்பவர்கள் எல்லோருக்கும் இந்த வரம் கிடைத்து விடுகிறதா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது, என்ற பதில் தான் வரும். ஆனால் முருகரை நீங்கள் பின் சொல்லும் முறைப்படி 9 வாரம் வழிபாடு செய்தால் நிச்சயம் உங்களுக்கு சொந்த வீடு கிடைக்கும். எப்படி தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படிக்கலாம்.

வீடு கட்ட முருகன் வழிபாடு

நம்மில் எல்லோருக்கும் தெரியும் சிறுவாபுரி முருகரை வழிபாடு செய்தால் சொந்த வீடு கிடைக்கும் என்பது. ஆனால் தொடர்ந்து 9 வாரம் எல்லோராலும் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாது. ஆகவே உங்க வீட்டின் பக்கத்தில் இருக்கும் ஒரு கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அது பழமையான கோவில் அல்லது இப்போதுதான் கட்டிய கோவில் எந்த கோவிலாக இருந்தாலும் சரிதான். அந்த கோவிலில் முருகனது சன்னிதானம் மட்டும் இருந்தால் போதும். 9 வாரம் செவ்வாய்க்கிழமை அந்த கோவிலுக்கு தொடர்ந்து நீங்கள் செல்ல வேண்டும். சென்று முருகரை வழிபாடு செய்ய வேண்டும். உங்களுடைய வசதியை பொறுத்து வழிபாடு செய்யலாம்.

நெய் விளக்கு, நல்லெண்ணெய் விளக்கு, பூ வாங்கி கொடுப்பது, தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்வது என்பது உங்களுடைய விருப்பம் தான். ஆனால் முருகன் கோவிலுக்கு சென்று, முருகனைப் பார்த்து என் வசதிக்கு தகுந்தபடி எப்படியாவது ஒரு சின்ன வீடாவது, நிலம் ஆவது வாங்க வேண்டும் முருகா அதற்கான ஒரு வழியை மட்டும் எனக்கு காட்டிக் கொடு, என்ற கோரிக்கையை முருகரிடம் வையுங்கள்.

- Advertisement -

உங்களுக்கே 50 வயது ஆகிவிட்டது கையில் எந்த சொத்து பத்தும் கிடையாது. இந்த வேண்டுதலை செய்யலாமா? செய்யலாம். நிச்சயம் உங்களாலும் சொந்த வீடு வாங்க முடியும். எப்படி தெரியுமா? நீங்கள் வைக்கும் வேண்டுதல் உங்களுடைய மகனை வீடு கட்ட செய்யும். உங்களுடைய மகளை வீடு கட்ட செய்யும். உங்களுடைய சந்ததியினர் மூலம் உங்களுக்கு நிச்சயமாக சொந்த வீடு கிடைக்கும்.

அந்த சொந்த வீட்டில் நீங்கள் அமரக்கூடிய வாய்ப்புகளை அந்த முருகப்பெருமான் தேடிக் கொடுப்பார். இவ்வளவு சுலபமான வழிபாட்டில் நிலத்துக்கு சொந்தக்காரன் ஆன, முருகப்பெருமானின் ஆசிர்வாதத்தை பெற முடியுமா. என்று சிலர் சிந்திக்கலாம். ஆனால் ஒன்பது வாரம் தவறவிடாமல் இந்த வழிபாட்டை நீங்கள் செய்துவிட்டால் நீங்களே ஒரு காகிதத்தில் எழுதி கூட வைத்துக் கொள்ளலாம். என்னுடைய கடைசி காலத்திற்கு முன்பாக சொந்த வீட்டில் நிச்சயமாக அமருவேன் என்று.

- Advertisement -

அந்த அளவுக்கு உங்களுக்கான பலன் கிடைக்கும். ஆனால் இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்ய வேண்டும். ஒன்பது வாரமும் நீங்கள் முருகனை போய் பார்க்கும் போது முருகன் தான் உங்களுடைய வாழ்க்கை. முருகன் தான் உங்களுடைய உலகம். முருகனிடம் சொல்லிவிட்டேன்.

இதையும் படிக்கலாமே: சனி பகவானுக்கு சுத்தமாக பிடிக்காதவர்கள் யார் யார் என்று தெரியுமா உங்களுக்கு?

இனி என்னுடைய வேண்டுதல் நிறைவேறி விடும் என்ற நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை நீங்கள் முழு மனதோடு செய்ய வேண்டும். நம்பிக்கை இல்லாமல் பரிகாரம் செய்வதன் மூலம் நிச்சயமாக பலன் பெற முடியாது. நம்பிக்கைதான் ஆயுதம் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -