இதை மட்டும் செய்தால் போதும். நீங்கள் 90ஸ் கிட்ஸ்களாக இருந்தால் கூட உங்களுக்கு நிச்சயம் திருமணம் நடக்கும்.

marriage
- Advertisement -

நம்மை விட சிறிய வயதில் இருப்பவர்களுக்கு கூட காலாகாலத்தில் கல்யாணம் நடக்குது. ஆனா எனக்கு ஏழு கழுதை வயதாகியும் இன்னும் ஒரு விஷேசம் இல்லை. இப்படி புலம்புகிறீர்களா நீங்கள். குறிப்பா இந்த, 90சில் பிறந்தவர்களுக்கு திருமணம் தள்ளிப் போகின்றது. எவ்வளவோ பரிகாரம் செய்து பார்த்திருப்பார்கள். எவ்வளவோ ஜோதிடர்களிடம் சென்று பரிகாரம் செய்திருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு திருமணம் நடக்காமல் கஷ்டப்பட்டு வருவார்கள். ஜாதக கட்டத்தில் தோஷம் இருந்தாலும் சரி, தோஷம் இல்லை என்றாலும் சரி முருகப்பெருமானை நினைத்து இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்து விடுங்கள். கவலையே படாதீங்க. கூடிய சீக்கிரத்தில் உங்களுக்கு திருமணம் நிச்சயம் நடக்கும்.

நீங்க 90ஸ் கிட்ஸ் இல்ல. உங்களுக்கு இப்பதான் திருமண வயது வந்திருக்கு. ஆனாலும், நிறைய வரன் பார்த்தும் எதுவும் செட் ஆகவில்லை என்றாலும் இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்யலாம் தவறு கிடையாது.

- Advertisement -

திருமணம் நடக்க செய்ய வேண்டிய முருகர் வழிபாடு:
செவ்வாய்க்கிழமை ஆனால் நேராக முருகன் கோவிலுக்கு செல்லுங்கள். இரண்டு மண் அகல் விளக்கை வாங்கி நெய் ஊற்றி தீபம் ஏற்றி மனதார வேண்டிக் கொள்ளுங்கள். எனக்கு கூடிய சீக்கிரம் நல்ல வாழ்க்கை துணை கிடைக்க வேண்டும் என்று. இந்த வழிபாடு செய்யும்போது முருகருக்கு முல்லைப்பூ அல்லது அரளி பூவை உங்கள் கையில் வாங்கி எடுத்துச் செல்ல வேண்டும். விளக்கு ஏற்றி வைத்துவிட்டு முருகனை ஆறு முறை வலம் வர வேண்டும்.

இந்த வழிபாட்டை இத்தனை வாரங்கள் தான் செய்ய வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது. உங்களுக்குத் திருமணம் நடக்கும் வரை செவ்வாய்க்கிழமை முருகர் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டாலே போதும். சீக்கிரம் உங்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைவது உறுதி. உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் சென்னைக்கு அருகில் இருந்தால் சிறுவாபுரி முருகரை ஒரு முறை போய் தரிசனம் செய்து வாருங்கள். திருமண தடை கூடிய சீக்கிரம் விலகிவிடும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு சின்ன விஷயம். நீங்கள் தண்ணீரை உங்கள் கையால் வீணாக்கவே கூடாது. எங்கேயாவது தண்ணீர் வீணாக வெளியே போகிறது என்றாலும் அதை பார்த்துக்கிட்டு சும்மா இருக்கக்கூடாது. உதாரணத்திற்கு ரோட்டு குழாயில் பைப் உடைந்து தண்ணீர் ஆறாக பாய்கிறது. அதை யாருமே கண்டு கொள்ளவில்லை என்றால் அந்த உடைந்த பைப்பை மூடுவதற்கு தேவையான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

ரோட்டோர குழாயில் தண்ணீர் சொட்டிக் கொண்டிருக்கிறது என்றால் அதை உங்கள் கையால் மூடிவிடுங்கள். தண்ணீர் வீணாக்காமல் நீங்கள் பார்த்துக் கொண்டால் சீக்கிரம் உங்களுக்கு திருமணம் நடக்கும். உங்கள் கையாலும் தண்ணீரை வீணாக்க கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை நீங்கள் அளவோடு தேவைக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

உங்கள் வீட்டின் அருகில் ஆறு, ஓடை இப்படி ஏதாவது ஓடுகின்ற நீர் நிலைகள் இருந்தால் அந்த இடத்தை பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த நீரோடை அருகில் சென்று பூமாதேவியை நினைத்து, இந்த மண்ணை நினைத்து மனதில் சிறிய அளவில் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இந்த பூமிக்கு என்னால் ஏதாவது கஷ்டம் நேர்ந்திருந்தால், அதை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்ளுங்கள்.

நம்மை அறியாமலேயே பூமிக்கு நாம் எவ்வளவு கஷ்டத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய சுயநலத்திற்காக. அதில் நம்முடைய பங்கும் இருக்கிறது அல்லவா. ஆகவே ஒரு மன்னிப்பு கேட்டுக்கொண்டு ஓடுகின்ற அந்த நீரோடையில் இரண்டு ஸ்பூன் தேனை ஊற்றி திருமணம் நடக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை செய்வதற்காகவே நீரோடையை தேடி செல்லலாம். ஜாக்கிரதையாக கவனத்தோடு இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் திருமண தடை விளக்கும். உங்களுக்கு நீரோடைக்கு செல்வதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது.

இதையும் படிக்கலாமே: சர்க்கரையோடு எப்போதும் இந்த 1 பொருள் சேர்ந்து இருந்தால், வீட்டு பெண்களின் கையில் எப்போதும் பணப்புழக்கம் தாறுமாறாக புரளும்.

உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் செடி கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரியுங்கள். அந்த தண்ணீரில் ஒரு சுட்டு தேன் விட்டு செடி கொடிகளுக்கு ஊற்றினால் கூட நன்மைதான். இந்த பரிகாரத்தினை செவ்வாய்க்கிழமை செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த பரிகாரங்களை செய்து பலன் பெரலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -