சர்க்கரையோடு எப்போதும் இந்த 1 பொருள் சேர்ந்து இருந்தால், வீட்டு பெண்களின் கையில் எப்போதும் பணப்புழக்கம் தாறுமாறாக புரளும்.

sugar1
- Advertisement -

வீட்டுப் பெண்கள் என்பவர்கள் வீட்டின் மகாலட்சுமி அம்சம் பொரியந்தியவர்கள். இவர்களுடைய கையில் பணம் இல்லாமல் இருக்கக்கூடாது. வாஸ்தவம் தான். கணவர் வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கின்றார். ஆனால், மனைவியின் கையில் பணம் இருக்க வேண்டுமா, என்று சில ஆண்கள் கேள்வி கேட்கலாம். ஆனால், வீட்டை பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை பெண்கள் இடத்தில் உள்ளது.

பெண்கள் வீட்டை பொறுப்போடு பார்த்துக் கொள்ளக்கூடிய நிம்மதியால் தானே ஆண்கள் வெளியில் சென்று நிம்மதியாக வேலை பார்க்கிறார்கள். ஆகவே, அவர்களுடைய செலவிற்கும், வீட்டு செலவுக்கு தேவையான பணத்தை குடும்ப தலைவியிடம் கொடுத்து வைப்பது தான் நியாயம். இப்படி குடும்ப தலைவியின் கையில் வரக்கூடிய பணத்தை அவர்கள் அனாவசியமாக செலவு செய்யக்கூடாது. அவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பெண்களின் கையில் பணம் புரள செய்ய வேண்டிய பரிகாரம்:
சரிங்க, பெண்களின் கையில் நிறைய பணம் புரள வேண்டும் என்றால் அவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம். அதற்கும் ஒரு வழி ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. வளர்பிறை வெள்ளிக்கிழமையாக ஒரு வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை என்றாலே வீடு சுத்தபத்தமாக இருக்கும்.

பூஜை அறை அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். குலதெய்வத்தையும் மகாலட்சுமியையும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அல்லது இரவு 8.00 மணியிலிருந்து 9.00 மணிக்குள் இந்த இரண்டு நேரத்தில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சர்க்கரை நாம் எல்லோரும் வீட்டிலும் இருக்கக்கூடிய ஒரு பொருள். அந்த சர்க்கரையை ஒரு சிறிய கிண்ணத்தில் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். 3 கைப்பிடி அளவு சர்க்கரை இருந்தால் கூட போதும். கூடவே கிராம்பு 3, லவங்க பட்டை 1 துண்டு, இந்த 2 பொருட்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். கிண்ணத்தில் அழகாக சர்க்கரையை பரப்பி, அதன் மேலே கிராம்பையும், லவங்கத்தையும் வைத்து பூஜை அறையில் வைத்து வெள்ளிக்கிழமை பூஜை செய்யுங்கள். மகாலட்சுமியே மனதார வேண்டி கேட்டுக்கொள்ளுங்கள். பணப்பழக்கம் அதிகரிக்க வேண்டும் என்று.

பூஜை நிறைவடைந்த பிறகு இந்த கிண்ணத்தில் இருக்கும் சர்க்கரை கிராம்பு லவங்கப்பட்டை இதை அப்படியே கொண்டு போய் சமையலறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். இந்த கிண்ணம் உங்கள் சமையலறையில் இருக்கும் வரை வீட்டுப் பெண்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். நன்றாக நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இந்த பூஜை, இந்த பரிகாரத்தை மேலே சொல்லப்பட்டுள்ள குறிப்பிட்ட அந்த இரண்டு மணி நேரத்தில் செய்தால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: எந்நேரமும் உங்களிடம் சண்டை போட்டு எரிச்சல் படும் உங்க வாழ்கை துணை உங்கள் வசம் ஆக ஏழு கிராம்பு உங்களிடம் இருந்தா போதும். கணவன் மனைவி அன்னோன்யமாக வாழ எளிய பரிகாரம்.

மாதம் ஒருமுறை இந்த கிண்ணத்தில் இருக்கும் பொருட்களை எல்லாம் செடி கொடிகளுக்கு கீழே கொட்டி விட்டு, மீண்டும் அந்த கிண்ணத்தில் புதிய பொருட்களை வைத்து, பூஜை செய்து சமையலறையில் கொண்டு போய் அந்த கிண்ணத்தை வைக்க வேண்டும். பரிகாரத்தை செய்த மூன்றை மாதங்களில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -