எத்தனையோ இரவுகளில் உன்
நினைவுகளுக்கு முற்று புள்ளி
வைக்க நினைக்கிறன்..
ஆனால் அத்தனை முற்றுப்புள்ளிகளும்
மீண்டு தொடக்க புள்ளிகளாய் மாறி
என்னை தொல்லை செய்ய துவங்குகிறது…

இதையும் படிக்கலாமே:
நினைவின் வலிகள் – காதல் கவிதை
காதல் என்பது காதலிக்கும் சமயத்திலும் சரி, காதலில் தோல்வியுற்ற சமயத்திலும் சரி ஒரு விதமான தொல்லையை கொடுத்துக்கொண்டே தான் இருக்கும். மேலே உள்ள கவிதை என்பது காதலிப்பவர்களுக்கும் காதலில் தோற்றவருக்கும் பொருந்தும். அது தான் காதல் கவிதைகளில் உள்ள ஒரு அற்புதம். ஏன் என்றால் காதலிப்பவர்கள் தூக்கத்தை காதல் தொல்லை செய்யும். ஆனால் அதில் ஒரு இன்பம் இருக்கும். அதே போல காதலில் தோற்றவர்களின் தூக்கத்தையும் காதல் தொல்லை செய்யும் ஆனால் அதில் துன்பம் மட்டுமே இருக்கும்.
எத்தனை முறை நாம் காதலை மறக்க முயற்சித்தாலும் அத்தனை முறையும் நம்மை முந்திக்கொண்டு காதல் நம் கண் முன்னே வந்து நிற்கும். அது தான் காதலின் வேகம். அந்த அளவிற்கு அது வேகமாய் இருப்பதால் தானோ என்னவோ உலகம் எப்படி மாறினாலும் அதற்கு ஏற்றார் போல காதலும் மாறி இன்றளவும் அது அப்படியே பல உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

இது போன்ற மேலும் பல காதல் கவிதைகள், அன்பு சார்ந்த கவிதைகள், அன்னை கவிதைகள், காதல் மெசேஜ், காதல் sms போன்றவரை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.