விருச்சிகம்:
முன்கோபம் மற்றும் நேர்மை குணத்தை அதிகம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, 04-10-2018 அன்று உங்கள் ராசியிலேயே குரு பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதன் காரணமாக உங்களுக்கு அவ்வப்போது உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும். எதிலும் சுறுசுறுப்பாக செயலாற்ற முடியாத நிலை ஏற்படும். இந்த ராசியினருக்கு ஏழரை சனியில் பாத சனி நடைபெறுவதால் நெருங்கியவர்களிடமே சண்டையிடும் நிலை ஏற்படக்கூடும். தம்பதிகள் பிரிந்து வாழக்கூடிய நிலையை ஏற்படுத்தும். பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எல்லாவற்றிலும் கடினமாக செயல்பட்டே விரும்பிய பயன்களை பெற முடியும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் துரோகங்களுக்கு ஆளாக கூடிய நிலை ஏற்படும். தொழில், வியாபாரங்களில் நல்ல வாய்ப்புகள் மிகவும் தாமதமாகவே கிடைக்கும். பணியாளர்கள், தொழிலாளர்களால் சிலருக்கு பிரச்சனைகள் உருவாகும். எவ்வளவு கடிமனமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன்களை விரைவில் பெற முடியாது. உங்களுக்கு மேல் உயர்பதவிகளிலிருப்பவர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். ஆடம்பர மற்றும் தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்ள வேண்டும்.
வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், ஞாபக மறதி, டென்ஷன் போன்றவை அடிக்கடி ஏற்படும். உடலையும் மனதையும் அமைதியாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். குறித்த நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவிற்கு இருக்கும். குடும்பத்தினர் சிலரின் ஆடம்பர செலவுகள் உங்களை கோபப்படுத்தும். புதிய வீடு, நிலம் வாங்குவதில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். பிறருக்கு கொடுத்த கடன்களை திரும்ப கேட்கும் போது சிலர் காவல் நிலையம், நீதிமன்றம் போன்றவற்றிற்கு செல்லும் நிலையையும் சிலருக்கு ஏற்படுத்தும். தொழில், வியாபாரங்களில் ஏற்ற இறக்கமான பலன்களையே பெறுவீர்கள். சக போட்டியாளர்களின் சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வியாபார ரீதியன பயணங்களை மேற்கொள்வது அவசியம் தானா என்பதை ஆலோசிக்க வேண்டும்.
உடன் பணிபுரிபவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகங்களில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு தாமதமாகும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தாங்கள் பேசும் போது கவமுடன் பேசுவதால் சர்ச்சைகளில் சிக்கி கொள்வதை தவிர்க்கலாம். விவசாயிகளுக்கு பயிர்களில் பூச்சிகளின் தொல்லையால் பாதிப்பு ஏற்படும். பெண்களுக்கு ஆரோக்கிய குறைவுகள் ஏற்படும். சிலருக்கு குழந்தை பிறப்பு தள்ளி போகும்.
பள்ளி, கல்லூரிகளில் பயில்பவர்கள் மனதை அலைபாயவிடாமல் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்
சிலருக்கு கை மற்றும் கால்களில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களால் தகுந்த சமயங்களில் ஆதாயங்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களில் சுமாரான நிலையே இருக்கும். பிறருக்கு பணத்தை கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொள்வதாலும், அவர்களின் அறிவுரைகளை கேட்பதாலும் நல்ல லாபங்களை தொழிலில் பெற முடியும்.
குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்
இக்காலங்களில் எதிலும் சற்று ஏற்ற இறக்கமான பலன்களையே பெற முடியும். உஷ்ணம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில் வியாபார முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து, சேர்ந்து வாழ்வார்கள். நன்கு சிந்தித்து புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது நல்லது.
குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்
உடலில் சோர்வு மற்றும் மந்த நிலை அதிகரிக்கும். முன்கோபத்தை குறைத்து செயலில் திறன்களை காட்ட வேண்டும். சுப காரிய முயற்சிகள் வெற்றியடையும். கொடுத்த கடன்கள் அனைத்தும் வட்டியுடன் வசூலாகும். கல்வியில் சிறக்க மாணவர்கள் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிறருடைய விடயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்
பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தேவையற்ற பொருட்களை வாங்கி வீண் செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடிய விரைவில் நடக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு வேறு சிறந்த இடங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை இருக்கும்.
குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை
உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியும். உறவினர்களிடம் சுமூகமான உறவு நீடிக்கும். எல்லாவற்றிலும் சற்று முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களிடம் வீண் அரட்டைகள் அடிப்பதை தவிர்க்க வேண்டும். நீங்கள் எதிர்பாரா வகையில் உங்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகள் கிடைக்க கூடும்.
குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்
பண வரவு சிறப்பாக இருக்கும். பிறந்த உறவினர்களும் நண்பர்களும் ஒன்று சேர்வார்கள். உடல் நிலை நன்றா இருக்கும். எதிர்பாராத சில செலவுகளை சந்திக்க நேரிடும். மாணவர்களின் மந்த நிலை நீங்கி கல்வியில் மிளிர்வார்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகிஸ்தர்கள் பணியில் திறம்பட செயல் பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.
பரிகாரம்
உங்கள் ஜென்ம ராசியிலேயே குரு பகவான் சஞ்சரிக்க போவதால் குருவின் அருளை பெறுவதற்கு வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வர வேண்டும். இந்த கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொள்வது நல்லது. பாத சனியின் கெடுபலன்கள் நீங்க சனிபகவானை சனிக்கிழமைகளில் வழிபட்டு வர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது சனியின் அருளை பெற்று தரும்.