பெண்களே நாளை வரக்கூடிய இந்த வெள்ளிக்கிழமையை யாரும் தவற விடாதீங்க! அப்படி தவற விட்டிங்கனா, பணக்கஷ்டத்தை தீர்த்துக் கொள்ள, நீங்கள் அடுத்த வருடம் வரைக்கும் தான் காத்திருக்க வேண்டும்.

mahalashmi
- Advertisement -

அப்படி என்ன நாளை அதிசயம் வாய்ந்த நாள். அப்படி என்று தானே கேட்கிறீங்க. நாளைய தினம் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை. அம்பாளுக்கு, மகாலட்சுமிக்கு, மிக மிக உகந்த இந்த நல்ல நாளை நாம் மீண்டும் பெற வேண்டும் என்றால், அடுத்த வருடம் ஆடி மாத வெள்ளிக்கிழமை வரை தானே காத்திருக்க வேண்டும். அவ்வளவு பாசிட்டி எனர்ஜி நிரம்பிய இந்த நன்னாளில் நம்முடைய வீட்டில் செய்யப் போகும் ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

குடும்ப கஷ்டம் தீர, வருமானம் பெற, கடன் பிரச்சனையிலிருந்து தப்பிக்க, வீட்டுப் பெண்களின் கையால் செய்யக்கூடிய ஆன்மீகம் சொல்லும் அந்த தாந்திரீக பரிகாரம் என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் பதிவை தொடர்ந்து படியுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -

ஆடி கடைசி வெள்ளி ஐஸ்வர்யம் பெருக வீட்டு பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு முதலில் தேவையான பொருள் ஒரு வசம்பு, 1 ரூபாய் நாணயம், மஞ்சள் நிற துணி. எடுத்து வைத்திருக்கும் மஞ்சள் நிற துணியில் வசம்பையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்து முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். நாளைய தினம் ஆடி வெள்ளி என்பதால், வீடு சுத்தபத்தமாக ஐஸ்வர்ய கடாட்சத்தோடு லட்சணமாக இருக்கும். அதாவது பூஜை அறையில் அலங்காரங்கள் எல்லாம் அமோகமாக நடந்திருக்கும். விளக்கு ஏற்றி வெள்ளிக்கிழமை பூஜையை வழக்கம் போல செய்யுங்கள். நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த முடிச்சை அப்படியே மகாலட்சுமியின் பாதங்களில் வைத்து விடுங்கள். மனம் உருகி உங்கள் குடும்ப கஷ்டம் தீர வேண்டும் என்று முழு நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

பிரார்த்தனை முடிந்ததும் கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து விடுங்கள். நமஸ்காரம் செஞ்சுக்கோங்க. இந்த பூஜையை வீட்டு பெண்கள் கையால் தான் செய்ய வேண்டும். இந்த முடிச்சை வீட்டு பெண்களின் கையால் எடுத்துக் கொண்டு போய் உங்கள் வீட்டு சமையல் அறையில் கல் உப்பு ஜாடையில் புதைத்து வைக்க வேண்டும். முடிச்சை உப்பு ஜாடிக்குள் வைத்து விடுங்கள். மேலே நீங்கள் வாங்கிய புது உப்பை கொட்டி விடுங்கள். அவ்வளவுதான்.

- Advertisement -

உப்பு ஜாடிக்குள் இந்த முடிச்சு இருப்பது யாருக்கும் தெரியாது. அந்த அம்பாளின் அருள் ஆசியாலும், அந்த மகாலட்சுமியின் அருள் ஆசியாலும் உங்களுடைய வீட்டில் பணம் வசியம் ஆவதற்காக செய்யக்கூடிய தாந்திரீக பரிகாரம் இது. உங்கள் வீட்டில் எப்போதும் பணம் தங்க வேண்டும். எப்போதும் வருமானம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டு பீரோவில் அமர்ந்திருக்கிறார், என்று நேர்மறை ஆற்றலோடு இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

வீட்டில் கஷ்டம், கடன் இருக்குது, பணம் இல்லை என்று நெகட்டிவ்வாக, இந்த பரிகாரத்தை செய்யும் போது ஒரு துளி கூட நினைக்கவே கூடாது. அதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை ஒரு வருடத்திற்கு மாற்ற வேண்டாம். அப்படியே இருக்கலாம். அடுத்த வருடம் வரை வசம்பு கெட்டுப் போகாது. உப்பை மட்டும் நீங்கள் மாற்றிக் கொண்டே இருங்கள்.

- Advertisement -

அடுத்த வருடம் ஒரு ரூபாய் நாணயத்தை கோவில் உண்டியலில் போட்டுவிட்டு வசம்பை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். சரி, இந்த பரிகாரத்தை செய்யக்கூடிய நேரம் எந்த நேரமாக இருக்க வேண்டும். கட்டாயம் நாளைக்கு நீங்க இதை சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டும். (ஒருவேளை வீட்டு பெண்களால் பூஜை செய்ய முடியாத சூழ்நிலை என்னும் பட்சத்தில், உங்கள் வீட்டில் இருக்கும் இன்னொருவரை இந்த பரிகாரத்தை செய்ய சொல்லலாம் தவறு கிடையாது).

இதையும் படிக்கலாமே: உடல் சோர்வும், தூக்கமும் உங்களை எந்த வேலையையும் சரியாக செய்ய விடாமல் தடுக்குதா? மூன்று நாட்கள் தொடர்ந்து இந்த தண்ணீரில் குளித்தால் போதும். பிறகு நீங்கள் எறும்பு போல சுறுசுறுப்பா வேலை செய்ய தொடங்கிடுவீங்க.

வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியிலிருந்து 7.00, மதியம் 1.00 மணியிலிருந்து 2.00, இரவு 8.00 மணியிலிருந்து 9.00 இந்த மூன்று மணி நேரத்திற்குள் இந்த பரிகாரத்தை செய்யும் போது தான் பரிகாரத்திற்கு உண்டான பலனை முழுமையாக நம்மால் பெற முடியும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -