உடல் சோர்வும், தூக்கமும் உங்களை எந்த வேலையையும் சரியாக செய்ய விடாமல் தடுக்குதா? மூன்று நாட்கள் தொடர்ந்து இந்த தண்ணீரில் குளித்தால் போதும். பிறகு நீங்கள் எறும்பு போல சுறுசுறுப்பா வேலை செய்ய தொடங்கிடுவீங்க.

women
- Advertisement -

சோம்பேறித்தனம். இது உங்களுக்கு வாழ்க்கையில் தோல்வியை மட்டும் தான் கொடுக்கும். நேரத்தை கடந்து நீங்கள் செய்யும் வேலை எதற்கும் பிரயோஜனப்படாது. என்ன செய்வது. உடல் அசதி, அடித்துப் போட்டது போல இருக்குது. இரவு நல்லா தான் தூங்குறோம். ஆனால், காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு அன்றாட வேலையை துவங்கினால், மீண்டும் தூக்கம் வருகிறது. சுறுசுறுப்பாக உருப்படியாக ஒரு வேலையையும் செய்ய முடியவில்லை என்று கஷ்டப்படுபவர்களுக்காக இந்த குறிப்பு.

சில பெண்களுக்கு வீட்டு வேலையை கூட செய்ய முடியாது. வீட்டை கூட்டி சுத்தம் செய்ய முடியாது. சமைக்க முடியாது. சோர்ந்து சோர்ந்து போய் அமர்ந்து கொள்வார்கள். சில ஆண்களால் வீட்டில் இருந்து கிளம்பி வெளியே சென்று அன்றாடம் செய்யக்கூடிய அலுவலக வேலையை கூட செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். கடை வைத்திருப்பவர்களாக இருந்தால் அந்த கடையில் அமர்ந்து வியாபாரம் செய்ய முடியாது. இடுப்பு நிற்காது. சோர்வாக இருப்பார்கள். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் எதனால் வருகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட என்ன தீர்வு. ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிமையான பரிகாரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

உடல் சோர்வு நீங்க பரிகாரம்:
இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் வருவதற்கு ஒரு காரணம் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் இருக்கக்கூடிய பிரச்சினையாக இருக்கலாம். அது என்ன என்பதை மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அதற்கான ட்ரீட்மென்ட் எடுத்துக்கோங்க. மருந்து மாத்திரை சாப்பிட்டாச்சு. பார்க்காத டாக்டர் இல்லை, எடுக்காத டெஸ்ட் இல்லை, ஆனால் உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை, என்பவர்கள் கட்டாயம் இப்படிப்பட்ட சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்.

உடல் சோர்வு வருவதற்கு காரணம் கண் திருஷ்டி, கெட்ட சக்தியின் ஆதிக்கமாக இருக்கலாம். இதை நீங்கள் நம்பினாலும் சரி நம்ப வில்லை என்றாலும் சரி, ‘மந்திரம் கால், மதி முக்கால்’ என்பதன் பழமொழிக்கு இணங்க இந்த பரிகாரத்தையும் கொஞ்சம் செய்து பாருங்கள். முக்கால் பங்கு உங்கள் உழைப்பு இருக்கட்டும். கால்பந்து இந்த மந்திரமும் வேலை செய்யும் போது தான் நம் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசும்.

- Advertisement -

ஏதோ ஒரு காரணத்தினால் உங்கள் ஆராசக்தி செயலிழக்கப்பட்டு, உங்களுடைய உடம்பில் சோம்பேறித்தனம் வந்து குடியேறிவிட்டது. இதை தான் ஆன்மீகத்தில் மூதேவி அடைந்து விட்டால் என்று சொல்லுவார்கள். அதை விளக்க நாம் ஒரு சின்ன பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.

வசம்பு நாட்டு மருந்து கடைகளில் விற்கும். மஞ்சள் கொம்பு. மஞ்சளும் நாட்டு மருந்து கடைகளில் விற்கும். அதாவது முகத்திற்கு பூசுகின்ற மஞ்சள் என்று கேட்டு வாங்கிக் கொண்டால் அவர்கள் கொடுப்பார்கள். இந்த இரண்டு பொருட்களையும் நெருப்பில் நன்றாக கருக வைக்க வேண்டும். ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து அந்த நெருப்பில் இரண்டையும் சுட்டுக் கொண்டால் போதும். இரண்டு பொருட்களும் கருகிவிடும் அல்லவா. அந்த கருப்பு நிறத்தை பொடி செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இரண்டு பொடியையும் ஒன்றாக கலந்து ஸ்டோர் செஞ்சு வச்சுக்கலாம். தினமும் நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் ஒரே 1 ஸ்பூன் அளவு இந்த இரண்டு பொடியையும் சேர்த்து கலந்து, அந்த தண்ணீரில் தலைக்கு குளித்து விட வேண்டும். மூன்று நாள் இப்படி குளித்தால் உங்கள் உடம்பை பிடித்த தரித்திரம் பீடை அதாவது அந்த சோம்பேறித்தனமானது விலகி நீங்கள் சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கி விடுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: தினம் தினம் பண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த ஒரு வரி துளசி மந்திரத்தை குளிக்கும் போது ஜெபித்து வந்தாலே போதும். பணம் இல்லை என்ற வார்த்தை கூட உங்கள் வாயிலிருந்து வரவே வராது.

உங்களுடைய ஆரா சக்தியானது புதுப்பிக்கப்படும். நம்பிக்கையின் அடிப்படையில் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் சோம்பேறித்தனத்திலிருந்து விடுபட்டு சுறுசுறுப்பாக வேலை செய்யலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -