நாளை, ஆடி மாதம் கடைசி வெள்ளி! அம்மனை மனநிறைவோடு உங்கள் வீட்டிற்குள் இப்படி அழையுங்கள். அம்பாள் விரும்பி உங்கள் வீட்டிற்கு வந்து ஆசிகளை வழங்கி செல்வாள்.

amman2
- Advertisement -

ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு, அலங்காரத்துடன் திருவிழா கோலத்தோடு வழிபாட்டினை நிறைவு செய்து முடித்து இருப்போம். இருப்பினும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான நாளைய தினம் நம்முடைய வீட்டில் அம்மனை நினைத்து எப்படி பூஜித்தால், அம்மன் சந்தோஷமாக நம் வீட்டிற்கு வந்து அருள் ஆசி வழங்குவாள் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாளைய தினம் வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த சிறிய பூஜையை செய்தாலே போதும். அம்மனின் அருளாசியை முழுமையாகப் பெற்று விடலாம்.

நாளைய தினம் பெண்கள் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, குறிப்பாக மஞ்சள் பூசி குளித்துவிட்டு, தலை நிறைய பூ வைத்துகொண்டு, கை நிறைய கண்ணாடி வளையல்களோடு, பார்ப்பதற்கு அம்மனின் மறு உருவம் போல இருக்க வேண்டும். வாசல் தெளித்து கோலம் போட்டு, அந்த அரிசிமா கோலத்தில் சிறிது மஞ்சள் குங்குமத்தை இடவேண்டும்.

- Advertisement -

அதோடு நிலை வாசலுக்கு வந்து நிலைவாசலை ஈரத் துணியைப் போட்டு துடைத்து, மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து, நிலைவாசலை வேப்ப இலைகளால் அலங்காரம் செய்ய வேண்டும். நிலை வாசலுக்கு கீழே இரண்டு பக்கமும் வேப்ப இலைகள் இருக்க வேண்டும். நிலை வாசலுக்கு வேப்ப இலை தோரணங்கள் கட்ட வேண்டும். கொஞ்சம் வேப்ப இலையை கட்டாயமாக பூஜை அறையில் வைக்க வேண்டும்.

அடுத்தபடியாக நிலை வாசலில் இரண்டு பக்கங்களிலும் வைத்த வேப்பிலைகளுக்கும் மேல் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் குங்குமத்தை தடவி வைத்துக்கொள்ளுங்கள். எலுமிச்சம்பழம் பக்கத்தில் ஒரு பூவையும் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

அடுத்தபடியாக பூஜைஅறையில் வைத்துள்ள வேப்பிலைக்கு மேலே ஒரு மண் அகல் தீபத்தை வைத்து அந்த, அந்த விளக்கில் கொஞ்சமாக நல்லெண்ணெய் விட்டு திரி போட்டு தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும். இந்த விளக்குப் பக்கத்தில் கொஞ்சமாக பச்சரிசியில் செய்த அட்சதையை வைத்து விடுங்கள்.

vasthiram-manjal

ஒரு டம்ளர் தண்ணீரில் நிறைவாக வெல்லம் ஏலக்காய் சேர்த்த பானத்தை தயார் செய்து அம்மனுக்கு நிவேதனமாக வைத்து, மனமுருகி அம்பாள் உங்கள் வீட்டிற்கு வருகை தரவேண்டும் என்று வேண்டி உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் வேண்டிக்கொண்ட வேண்டுதலும் கூடிய சீக்கிரமே நிறைவடைய அம்பாளின் அருளாசியும் முழுமையாக கிடைத்துவிடும்.

veppilai-agal-deepam

இந்தப் பூஜையை நாளை காலை வேளையில் செய்ய முடிந்தவர்கள் செய்யலாம். காலை நேரம் இல்லை செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பூஜையைச் செய்து நிறைவு செய்து கொள்ளலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -