இன்று ஆடி வெள்ளி! நின்ற இடத்திலிருந்தே இந்த மந்திரத்தை ஒரு முறை படிச்சிடுங்க. வராகி அம்மனின் அருளும் ஆசீர்வாதமும் முழுமையாக கிடைக்கும்.

Varahi-amman
- Advertisement -

அதர்வண வேதங்களின் தலைவி, ஏழு லோகங்களுக்கும் காவல் படை தலைவி, எட்டு திசைகளை காக்கும் காவல் தெய்வங்களின் ஆயுதங்களை தன் கையில் ஒட்டு மொத்தமாக வைத்திருக்கும் தேவி, அவள் தான் வராகி அம்மன். உக்கிரமான ரூபத்தை கொண்ட இவளின் உள்ளம் குழந்தை உள்ளம்முங்க. இவளை நம்பி வந்த பக்தர்களை, ஒரு தூசி கூட அண்ட விட மாட்டாள். அந்த அளவுக்கு பத்திரமாக காப்பாள். இந்த தாயை நாம் வணங்க வேண்டும் என்றால், வாராகி உபாசகர்களின் அனுமதியை பெற வேண்டுமா. வாராகி உபாசகர்களின் அனுமதியை பெறாமல் நாம் வாராகி அன்னையை வழங்கக் கூடாதா. இந்த கேள்வி பல பக்தர்களின் மனதில் இருக்கிறது. உங்களுடைய மனதில் இந்த சந்தேகம் இருக்கிறதா.

கடவுளை வணங்குவதற்கு மனிதர்களுடைய அனுமதி தேவை கிடையாது. உங்களுக்கு வாராகி அன்னையின் மீது பக்தியும் அன்பும் நம்பிக்கையும் இருந்தால் போதும். அவளை வழிபாடு செய்யலாம். அடுத்தவர்களுக்கு கெட்டுதல் நினைப்பவர்களை வாராகித் தாய்க்கு பிடிக்காது. பொய்யாக நடிப்பவர்களை வாராகி தாய்க்கு பிடிக்காது. ஆகவே போலியான பக்தியோடு நீங்கள் வாராகி தாயே நெருங்காதீர்கள்.

- Advertisement -

சரி, இன்று ஆடி வெள்ளிக்கிழமை. அம்மனின் அருள் ஆசியை பெறுவதற்கு ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்று கூட சொல்லலாம். இந்த நாளில் ஒரு சிலருக்கு அம்மன் வழிபாடு செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கும். ஒரு சிலருக்கு வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கும். அவர்கள் எல்லாரும் அம்மனின் அருள் ஆசையை முழுமையாக பெற்று இருப்பீர்கள்.

ஆனால், வழிபாடு செய்யாமலும், விளக்கு ஏற்றாமலும், பூஜை செய்யாமலும் அம்மனின் அருள் ஆசியை பெற முடியுமே. அதற்கான வழி இந்த மந்திரத்தை உச்சரிப்பது. இன்று நீங்கள் அந்த வாராகி தாயின் அருள் ஆசியை முழுமையாக பெற வேண்டும் என்றால், இருந்த இடத்தில் இருந்து வாராகி அன்னையை மனதார உண்மையாக பக்தியோடு அன்போடு நினைத்து, இந்த மந்திரத்தை உச்சரித்து விடுங்கள். எல்லா விதத்திலும் உங்களுக்கு நன்மையே நடக்கும்.

- Advertisement -

ஆடி வெள்ளி அன்று உச்சரிக்க வேண்டிய வாராகி மந்திரம்:
கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகா வாராஹி
பத்மபாதம் நமோஸ்துதே
வாராஹி வாராஹி வாராஹி பாஹிமாம்.

இதையும் படிக்கலாமே: நிலை வாசலுக்கு வெளியே நின்று கொண்டு சுக்கிரனை நினைத்து இதை மட்டும் தூவினால் வீட்டிற்குள் நீங்கள் வருவதற்கு முன்பே பணம் வீட்டுக்குள் வந்து குவிய தொடங்கி விடும்.

இந்த மந்திரத்தை இன்று நீங்கள் எந்த இடத்தில் இருந்து உச்சரித்து உங்களுடைய வேண்டுதலை வாராகித் தாயின் பாதங்களில் வைத்தாலும் சரி அது சீக்கிரம் நிறைவேறிவிடும். இந்த மந்திரத்தை பூஜையின் போது உச்சரிக்கலாமா. தாராளமாக உச்சரிக்கலாம். ஆடி வெள்ளி அல்லாமல் மற்ற வெள்ளிக்கிழமைகளில் கூட இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். பஞ்சமி திதி பூஜையிலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இந்த மந்திரத்தை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உச்சரித்து வாராகி அம்மனுக்கு பூஜை செய்யும் போது இன்னும் பல மடங்கு பலன் கிடைக்கும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -