நிலை வாசலுக்கு வெளியே நின்று கொண்டு சுக்கிரனை நினைத்து இதை மட்டும் தூவினால் வீட்டிற்குள் நீங்கள் வருவதற்கு முன்பே பணம் வீட்டுக்குள் வந்து குவிய தொடங்கி விடும்.

mahalashmi nilaivasal
- Advertisement -

பண வரவு தாராளமாக இருக்க வேண்டுமெனில் நாம் நிச்சயமாக பாடுபட வேண்டும். அத்துடன் மகாலட்சுமி தாயாரின் பரிபூரண ஆசீர்வாதமும் இருக்கும் போது பண வரவு தாராளமாக இருக்கும் இது அனைவரும் அறிந்ததே. அந்த பணப் பெருக்கத்தை தாராளமாக்கிக் கொள்ள நாம் எத்தனை தான் பாடுபட்டாலும் பணமானது நம்மிடம் தங்கவும் பெருகவும் நமக்கு நிச்சயம் அதற்கான யோகம் வேண்டும். இந்த யோகத்தை எப்படி பெறுவது என்பது பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

ஒருவருக்கு சுக்கிர திசை நடக்க தொடங்கி விட்டால் அவர்கள் தொட்ட காரியமெல்லாம் துலங்கும். அதிலும் குறிப்பாக பண விஷயத்தில் அவர்கள் எதை செய்தாலும் அது ஜெயமாக முடிந்து பண மழையில் நனைவார்கள் என்றே சொல்லலாம். ஆகையால் தான் பெரும்பாலும் திடீரென பணவரவு ஏற்பட்டவர்களை பார்த்து அவர்களுக்கு என்ன சுக்கிர திசை அடித்து விட்டது என்று சொல்லும் வழக்கம் நம்முள் இருக்கிறது. அப்படியான சுக்கிர பகவானையே நம் வீட்டிற்குள் அழைத்து விட்டால் பணவரவிற்கான பிரச்சனை என்பது நமக்கு வரவே வராது. அதற்கான எளிய ஒரு பரிகாரத்தை தான் இப்பொழுது இதில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

சுக்கிர யோகத்தைப் பெற பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு நமக்கு இலவங்கப்பட்டை பொடி மட்டும் தான் தேவை. இதற்கென புதிதாக சுருள் இலவங்கப்பட்டையை வாங்கி வந்து அதை மிக்ஸி ஜாரில் சின்னதாக உடைத்து போட்டு தூள் செய்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொருளுக்கு சுக்கிர வசியம் அதிகமாக உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்போது உங்கள் கையில் ரூபாய் நோட்டு எடுத்துக் கொள்ளுங்கள் முடிந்த வரையில் அதிக மதிப்பு உள்ள ரூபாய் நோட்டு எடுத்துக் கொள்ளலாம். 500 ரூபாய் தாளாக இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களிடம் இல்லை என்றால் நினைப்பவர்கள் எந்த பணம் இருந்தாலும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த ரூபாய் நோட்டையும் லவங்க பட்டையும் எடுத்துக் கொண்டு உங்கள் வீட்டின் நிலை வாசலுக்கு வெளியே சென்று விடுங்கள். அடுத்து எடுத்து வந்து இருக்கும் இலவங்க பொடியை ரூபாய் நோட்டின் மேல் வைத்து நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளே பார்த்தவாறு நின்று கொண்டு இந்த ரூபாய் நோட்டில் உள்ள லவங்கப்பொடியை வீட்டிற்குள் போகும் படி ஊதி விட வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் பணம் ஆனது மகாலட்சுமி தாயார் என் அம்சம் பொருந்தியது. அது மட்டும் இன்றி இலவங்கப் பொடி சுக்கிர பகவானின் அருள் கொண்டது. இதை இரண்டையும் ஒன்றாக சேர்த்து நீங்கள் இப்படி செய்யும் போது இவர்களை உங்கள் வீட்டிற்குள் வர வைப்பதற்கான ஒரு முறையாகவே பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்கள் வாழ்வில் பணவரவிற்கான தடைகள் அனைத்தையும் நீங்கி பணம் வருவதற்கான வாய்ப்புகள் பெருகும்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருளை மறக்காமல் கொண்டு செல்லுங்கள். நீங்கள் திரும்பி வரும் போது குலதெய்வம் நிச்சயம் உங்களுடனே வீட்டுக்கு வந்து விடும்.

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் செய்யலாம் அல்லது அமாவாசை பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களில் செய்யலாம். உங்கள் வசதிக்கேற்ப இதை செய்து கொள்ளுங்கள். இதை இத்தனை நாட்கள் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இதுஸபோல செய்து கொள்ளுங்கள். உங்கள் வீடு எப்பவும் சுக்கிர யோகத்துடன் இருக்கும். இந்த எளிய தாந்த்ரீக பரிகார முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் இதை செய்து பலன் அடையலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -