நாளை(13/8/2021) ஆடி வெள்ளியில் இப்படி வீட்டில் விளக்கு ஏற்றினால் பிரிந்த தம்பதியர் கூட ஒன்று சேர்ந்து விடுவார்கள்! குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி நிம்மதி கிடைக்கும்.

durgai-kuthu-vilakku
- Advertisement -

ஒரு மனிதனுக்கு எது தேவையோ இல்லையோ ஆனால் நிம்மதி என்பது எல்லோருக்கும் இப்பொழுது தேவையான ஒன்றாக இருக்கிறது. குடும்பத்தில் பிரச்சனை, உறவுகளுக்குள் பிரச்சனை, அலுவலகத்தில் பிரச்சனை என்று சதா ஏதாவது ஒரு பிரச்சினையை சந்தித்துக் கொண்டிருக்கும் நமக்கு நிம்மதி கிடைப்பது என்பதே அதிசயம் ஆகிப் போய்விட்டது. நிம்மதியைத் தேடி அலைபவர்கள் தான் இந்த உலகில் ஏராளமானோர் இருக்கின்றனர். இந்த நிம்மதி கிடைக்க ஆடி மாத கடைசி வெள்ளியான நாளை அம்பாளை நினைத்து மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நாளை எப்படி வழிபாடுகள் செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

kuthu-vilakku

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையான நாளை அம்பாளுக்கு முறையான வழிபாடுகள் செய்து வந்தால் எத்தகைய மன கவலைகளும் அகலும் என்பது நம்பிக்கை. மேலும் அவளுடைய பரிபூரண அருள் பெற்றுக் கொண்டால் இல்லத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பிரிந்த கணவன், மனைவி கூட ஒன்று சேர்வதற்கு நாளைய நாளை தவறவிடாமல் அம்பாள் வழிபாடு செய்யுங்கள். ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் இப்படி அம்பாளை நினைத்து நெய் விளக்கேற்றி வழிபாடு செய்து வருவது எல்லோரும் செய்துவரும் ஒன்று தான்.

- Advertisement -

எனினும் கடைசி வெள்ளிக் கிழமையான நாளை இப்படி பூஜை செய்ய நிறைய நன்மைகள் நடக்கும். வழக்கம் போல ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபாடு செய்வது நல்லது. மேலும் வீட்டில் அம்பாள் படத்திற்கு முன்பு 5 முக குத்து விளக்கு ஏற்றி அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி ஐந்து முகத்திலும் ஐந்து திரி இட்டு தீபம் ஏற்றுங்கள். உங்கள் அருகில் இருப்பவர்கள் அல்லது உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்களில் சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழையுங்கள்.

Thamboolam

அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பூ, பழம் ஆகிய தாம்பூலம் வைத்து குடிக்க தண்ணீர் கொடுத்து, அம்பாளுக்கு வைத்த நைவேத்திய சர்க்கரை பொங்கலையும் சாப்பிட கொடுத்து வழி அனுப்புங்கள். மேலும் இன்றைய நாளில் உக்ர தெய்வங்கள் என்கிற காளி, மகா காளி, துர்கா தேவி ஆகிய அம்மனை வழிபடுவது இன்னும் சிறப்பான பலன்களைக் கொடுக்கும். நாளை ஆடி வெள்ளியில் ராகு கால வேளையில் துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபடுவது சிறந்த பலனை தரும்.

- Advertisement -

ஆனால் துர்க்கைக்கு விளக்கு ஏற்றும் பொழுது வீட்டில் வைத்து எலுமிச்சை தீபம் ஏற்றக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எனவே அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள துர்க்கை சன்னதியில் இரண்டு எலுமிச்சை மூடிகளில் முறையாக மந்திரம் உச்சரித்து தீபம் ஏற்றுங்கள். எப்படி துர்கைக்கு தீபம் ஏற்றுவது? என்ன மந்திரம் சொல்லுவது? என்பதையும் தெரிந்து கொண்டு ஏற்றுவது சிறப்பு.

Durgai Amman

துர்க்கைக்கு சிகப்பு நிறம் என்பது மிகவும் உகந்தது எனவே சிகப்பு நிற வஸ்த்திரத்தை வாங்கிக் கொடுக்கலாம். மேலும் கடைசி ஆடி வெள்ளிக் கிழமையில் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு. அதே போல கனகதாரா ஸ்தோத்திரம் படிக்கலாம். உங்களை விட வயதில் மூத்த சுமங்கலிப் பெண்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வது தாலி பாக்கியத்தை நீடித்து நிலைக்கச் செய்யும். அதே போல சுமங்கலிப் பெண்கள் கணவனிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளலாம். இத்தகைய மகிமைகள் வாய்ந்த கடைசி ஆடி வெள்ளியை அம்பிகையை துதிக்க மறக்காதீர்கள்.

- Advertisement -