கையாலாகாதவனை கூட, செல்வந்தராக மாற வைக்கும் ஆலமர விழுது பரிகாரம். திறமை இல்லாதவனுக்கு கூட வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படும்.

cash7
- Advertisement -

சில பேருக்கு திறமையே இருக்காது. அதிர்ஷ்டம் அவனை வாழ்வில் கை தூக்கி விடும். சில பேருக்கு இயற்கையாகவே நல்ல அறிவும் திறமையும் இருக்கும். ஆனால் வாழ்வில் முன்னேறுவதற்கான வழி இருக்காது. இப்படி இரண்டு பிரிவினரும் இந்த பரிகாரத்தை செய்யலாம். செல்வந்தராக மாற வேண்டும் இந்த உலகத்தையே கட்டி ஆள முடியவில்லை என்றால் கூட, நம்முடைய தொழிலில், நமக்கென ஒரு பத்து பேரை வைத்து ஒரு சின்ன சாம்ராஜ்யத்தை கட்டி ஆள்வதற்கு இந்த பரிகாரம் கை கொடுக்கும். தான் மட்டும் வாழ கூடாது. தன்னிடம் 10 பேர் வேலை செய்ய வேண்டும். பத்து பேருக்கு சம்பளம் கொடுத்து, நாமும் தொழிலில் வெற்றி பெற வேண்டும். அந்த பத்து பேருடைய குடும்பத்தில் அடுப்பு எறிய நாம் ஒரு காரணமாக இருக்க வேண்டும் என்று கூட நினைப்பார்கள். இப்படிப்பட்டவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

செல்வந்தர்களாக மாற சூட்சம பரிகாரம்:
ஆலமர விழுது கட்டாயம் இந்த பரிகாரத்திற்கு தேவை. ஆலமரத்துக்கு கீழே தொங்கும் விழுதிலிருந்து ஒரு சிறிய துண்டை வெட்டி, வீட்டிற்கு கொண்டு வாருங்கள். இரண்டிலிருந்து மூன்று இன்ச் அந்த ஆலமர விழுது துண்டு கிடைத்தால் போதும். பிறகு சுத்தமான பச்சரிசி நமக்கு தேவை. மஞ்சள் நூல் தேவை.

- Advertisement -

ஒரு சிறிய மூடி போட்ட டப்பா எடுத்துக் கொள்ளுங்கள். சில்வர் பிளாஸ்டிக் கண்ணாடி எதுவாக இருந்தாலும் சரி. அது நிரம்ப பச்சரிசியை போட்டுக் கொள்ளுங்கள். பச்சரிசியை சுத்தம் செய்து போட்டுக் கொள்ள வேண்டும். கல் மண் தூசி எதுவும் இருக்கக் கூடாது. இந்த ஆலமர விழுதில் மஞ்சள் நூலை முழுமையாக சுற்றி, அந்த விழுதை அப்படியே பச்சரிசிக்குள் புதைத்து மூடி போட்டு விடுங்கள். இதை கல்லாப்பெட்டியில் வைக்கலாம். தொழில் செய்யும் இடத்தில் வைக்கலாம். வீட்டிலும் வைக்கலாம். இந்த தயார் செய்த பச்சரிசி ஆலமர விழுது சேர்ந்த பாட்டில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.

தொழிலில் ஏகப்பட்ட பிரச்சனை உள்ளது. தொழிலை நடத்தி செல்லவே முடியவில்லை, லாபம் வரவில்லை என்றால், இந்த பரிகாரத்தை தொழில் செய்யும் இடத்தில் செய்து கொள்ளுங்கள். சின்ன சின்ன மல்லிகை கடை, டைலர் கடை, தள்ளுவண்டி கடையில் கூட இந்த பாட்டிலை வைக்கலாம். வீட்டில் பண பிரச்சனை உள்ளது. கடன் தொல்லை உள்ளது. வருமானம் வரவில்லை என்றாலும் இந்த பரிகாரத்தை வீட்டில் செய்து வைக்கலாம்.

- Advertisement -

நாள் கிழமை நல்ல நேரம் எதுவுமே பார்க்க தேவையில்லை. காலையில் 5 மணியிலிருந்து 6 மணிக்குள் சூரிய உதயத்திற்கு முன்பு இந்த பரிகாரத்தை என்றைக்கு வேண்டும் என்றாலும் செய்து வைத்துக் கொள்ளலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை இதற்கு உள்ளே இருக்கும் பொருட்களை மாற்ற வேண்டும். பச்சரிசியில் வண்டு வரவில்லை என்றால் ஒரு வருடம் கழித்து கூட உள்ளே இருக்கும் பொருட்களை மாற்றிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அரிசியை காக்கை குருவிகளுக்கு இரையாக வையுங்கள் மற்ற பொருட்களை கால்படாத இடத்தில் போடுங்கள். மகாலட்சுமி கடாட்சத்திற்கு இந்த பரிகாரம் ரொம்ப ரொம்ப நல்ல நன்மையை தரக்கூடியது.

இதையும் படிக்கலாமே: தப்பி தவறி கூட இந்த நாளில் கடன் வாங்கிடாதீங்க. அட்டை போல கடன் உங்களை வந்து ஒட்டிக் கொள்ளும்.

நம்பிக்கையோடு செய்து பாருங்கள் பச்சரிசியும் மஞ்சள் நிற நூலும் ஆல விழுதும் ஒன்றாக சேரும்போது, உங்களுக்கு கிடைக்காத நன்மைகள் கூட கிடைக்கும். இது ஒரு ஆன்மிகம் சார்ந்த எளிமையான தாந்திரீக பரிகாரம். நிச்சயம் வாழ்வில் வெற்றி அடைய முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -