தப்பி தவறி கூட இந்த நாளில் கடன் வாங்கிடாதீங்க. அட்டை போல கடன் உங்களை வந்து ஒட்டிக் கொள்ளும்.

kadan
- Advertisement -

சில பேர் மீளவே முடியாத கடன் சுமையில் போய் சிக்கிக் கொள்வார்கள். கையில் நிறைய காசு வரும். வருமானம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். ஆனால், ஏனோ தெரியாது. நாம் வாங்கிய கடனை மட்டும் அடக்க முடியாமல் வட்டிக்கு மேல் வட்டியை கட்டிக் கொண்டு வருவோம். கடன் தொடர்கதை போல நீளும். இப்படி கடன் பிரச்சனை நம்மை தொடர்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒரு காரணத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த நட்சத்திரம் வரக்கூடிய நாளில் நீங்கள் கடன் வாங்கினால் உங்களை கடன் நிச்சயம் அட்டை போல் ஒட்டிக் கொள்ளத்தான் செய்யும். அந்த கடன் பிரச்சனையில் இருந்து மீளுவதற்குள் போதும் போதும் என ஆகிவிடும். எந்த நாளில் கடனை வாங்கவே கூடாது. கடனை சீக்கிரம் திருப்பி தருவதற்கு ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் இந்த இரண்டு குறிப்புகளையும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தொடர்கதை போல நீளும் கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர:
கடன் வாங்கும் போது நாள் கிழமை நல்ல நேரம் பார்த்து வாங்குவது ரொம்ப ரொம்ப நல்லது. குறிப்பாக அஸ்தம் நட்சத்திரம் வரக்கூடிய நாளில் கடன் வாங்கவே கூடாது. அஸ்தம் நட்சத்திரம் இருந்தால், அந்த நாள் நீங்கள் வாங்கக்கூடிய கடன் உங்களை தொடர்கதை போல ஒட்டிக் கொள்ளும். ஆகவே கடன் வாங்குவதற்கு முன்பு காலண்டரில் அன்றைய நட்சத்திரத்தை ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். அவசரத்திற்கு மருத்துவ செலவு, உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை, என்றால் இதையெல்லாம் பார்க்க முடியாது. பிரச்சனை என்றால் பரிகாரத்திற்கு விதிவிலக்கு.

- Advertisement -

லோன் வாங்குறீங்க, வட்டிக்கு கடன் வாங்குறீங்க, ஏதோ ஒரு தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் எனும்போது, மட்டும் இந்த அஸ்தம் நட்சத்திரத்தை கவனித்துக் கொள்ளுங்கள் போதும். சரி, ஏதோ ஒரு காரணத்திற்காக கடன் வாங்கி விட்டோம். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகின்றோம். இதை எளிமையான முறையில் தீர்க்க ஒரு எளிமையான பரிகாரம் உண்டா என்று கேட்பவர்களுக்கு இதோ ஒரு எளிமையான பரிகாரம்.

கடன் தீர்க்கும் எளிமையான பரிகாரம்:
16 வாரம் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து, இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சரிசி மாவு சிறிதளவு, நாட்டு சர்க்கரை சிறிதளவு, இரண்டு ஏலக்காய் தட்டி போட்டு கொள்ளவும். ஏலக்காய் பொடி இருந்தாலும், போட்டு இதை கலந்து கொள்ளுங்கள். ஒரு பிரசாதம் போல உங்களுக்கு மாவு கிடைத்திருக்கும் அல்லவா.

- Advertisement -

அதை அப்படியே கொண்டு போய் பிள்ளையாருக்கு வைத்து, நிவேதனம் செய்யுங்கள். செய்த இந்த நிவேதனத்தை கொண்டு வந்து எறும்புகளுக்கு தானமாக உங்கள் கையால் போடுங்கள். இந்த பரிகாரத்தை செய்யும் போது மனதார உங்களுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று விநாயகரிடமும் மகாலட்சுமியிடமும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: 6 பலன்களை தரக்கூடிய ஒரு வழிபாடு. இதை வீட்டிலேயே மிக எளிமையாக மாதத்தில் ஒரே ஒருமுறை கூட செய்தால் போதும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் குடும்பத்தில் வளர்ச்சியும் நிச்சயம் உண்டு.

நிச்சயமாக எவ்வளவு பெரிய கடன் பிரச்சினையாக இருந்தாலும், இந்த 16 வாரங்களில் படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை உங்களால் உணர முடியும். நீண்ட நாட்களாக திருப்பித் தர முடியாத கடன் பிரச்சனையில் இருந்து கூட வெளிவந்துவிடலாம். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் முழு மனதோடு நாம் செய்யக்கூடிய பரிகாரம், நமக்கு முழுமையான பலனை கொடுக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -