ஆண் குழந்தை பிறக்க பரிகாரம்
குழந்தைகளில் ஆண் – பெண் சமம் என்றாலும், ஒருவரின் வம்சம் தழைக்க உதவுவது ஆண் குழந்தை வாரிசு தான் என நமது தர்மசாஸ்திரங்கள் கூறியுள்ளன. எனவே திருமணமான தம்பதிகள் பலரும் தங்களுக்கு பெண் குழந்தைகள் இருந்தாலும், வம்சத்தை தொடர செய்யும் அடையாளமாக ஒரு ஆண் குழந்தையாவது பிறக்க வேண்டும் என விரும்புகின்றனர். அந்த வகையில் திருமணமான தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறக்க செய்யும் பரிகாரங்கள் ( Aan kulanthai pirakka pariharam in Tamil ) குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆண் குழந்தை பிறக்க பரிகாரம் 1
தங்கள் பரம்பரைக்கு ஆண் குழந்தை வாரிசு வேண்டும் என விரும்பும் தம்பதிகள் ஒவ்வொரு மாதமும் வருகின்ற 2 சஷ்டி திதிகளிலும் முருகப்பெருமானுக்கு சஷ்டி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். சஷ்டி தினத்தன்று தம்பதிகள் இருவரும் காலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு உணவு ஏதும் உண்ணாமல் பூஜையறையில் இருக்கின்ற முருகப்பெருமானின் படம் அல்லது சிறிய அளவிலான விக்கிரகத்திற்கு சந்தனம் குங்குமம் பொட்டிட்டு, வாசமிக்க மலர்களை சாற்றி பால், பழம் நைவேத்தியம் வைத்து, கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற முருகப்பெருமானுக்குரிய மந்திர ஸ்தோத்திரங்களை துதித்து வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் இரவு தம்பதிகள் இருவரும் பால், பழம் மட்டுமே உணவாக உண்ண வேண்டும். இந்த சஷ்டி விரதம் மேற்கொள்கின்ற தினங்களில் தம்பதிகள் இருவரும் உடலின்பம் துய்க்க கூடாது என்பது முக்கிய விதியாகும். மேற்சொன்ன முறையில் சஷ்டி விரதத்தை அனுஷ்டிக்கும் தம்பதிகளுக்கு கூடிய விரைவில் அழகும், அறிவும் மிகுந்த ஆண் குழந்தை வாரிசு பிறக்க முருகப்பெருமான் அருள் புரிவார்.
ஆண் குழந்தை பிறக்க பரிகாரம் 2
கண்ணனை போன்ற அழகு, அறிவு மிகுந்த ஆண் குழந்தை பிறக்க விரும்பும் தம்பதிகள் மாயகண்ணனாகிய கிருஷ்ண பரமாத்மாவிற்கு விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்ய வேண்டும். கிருஷ்ணன் பகவானுக்கு விரதம் இருக்கும் தம்பதிகள் இருவரும் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்ட பிறகு காபி, டீ போன்ற பானங்கள் எழுதும் அருந்தாமல், பசும்பாலில் செய்யப்பட்ட சுத்தமான வெண்ணையை சிறிதளவு பூஜை அறையில் இருக்கும் கிருஷ்ணபகவானின் படத்திற்கோ அல்லது திரு விக்கிரக சிலைக்கு முன்பாகவோ நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து அந்த வெண்ணையை பிரசாதமாக தம்பதிகள் இருவரும் சாப்பிட்ட பிறகே மற்ற காலை உணவுகள், பானங்கள் போன்றவற்றை அருந்த வேண்டும்.
இப்படி 48 நாட்கள் தொடர்ந்து விரதம் இருக்கின்ற தம்பதிகளுக்கு விரைவிலேயே கிருஷ்ண பகவானின் அருளால் ஆண் குழந்தை வாரிசு உண்டாகும். 48 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்கின்ற சமயங்களில் பிறப்பு – இறப்பு தீட்டு, பெண்களின் மாதவிடாய் தீட்டு போன்ற தோஷங்களால் 48 நாட்கள் தொடர்ச்சியாக செய்ய முடியாதவர்கள், அதுவரை இப்பதிகாரத்தை செய்த தினங்களை கணக்கில் கொண்டு மற்ற தினங்களுக்கு இந்த பரிகாரத்தை செய்யலாம்.
Aan kulanthai pirakka pariharam in Tamil
தங்கள் குல விருத்தியாக ஆண் வாரிசு பிறக்க ( Aan kulanthai pirakka pariharam in Tamil ) வேண்டும் என நினைப்பவர்கள் சென்று வழிபட வேண்டிய ஒரு முக்கிய திருத்தலமாக ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருள்மிகு ஆதி ஜெகன்னாத பெருமாள் திருக்கோயில் திகழ்கிறது. கோயிலுக்கு செல்வதற்கு முன்பாக இக்கோயிலுக்கு சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற கடற்கரைக்கு சென்று, தம்பதிகள் இருவரும் தாங்கள் உடுத்தியிருக்கின்ற ஆடைகளுடன் கடலில் மூழ்கி எழுந்த பிறகு, பழைய ஆடைகளை கடற்கரையிலேயே விட்டு விட்டு புத்தாடைகளை அணிந்து, ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
அக்கோயிலின் நிர்வாக அலுவலத்தில் பணம் செலுத்தினால், இக்கோயிலின் பிரசாதமான பாயசம் கோயிலின் மூலவர் தெய்வமான தர்பசயன ராமருக்கு நைவேத்தியம் செய்து, பிறகு இந்த பிரசாத பாயாசம் தம்பதிகள் இருவருக்கும் வழங்கப்படும். அந்த பாயசம் பிரசாதத்தை தம்பதிகள் இருவரும் ராமபிரானை வணங்கி அருந்துவதால் கூடிய விரைவிலேயே அவர்களுக்கு தங்களின் சந்ததியின் புகழை பறைசாற்றும் விதமான ஆண் வாரிசு உண்டாகும். மேற்சொன்ன எந்த ஒரு பரிகாரத்தையும் செய்வதற்கு முன்பாக தங்களின் குலதெய்வ கோயிலுக்கு சென்று, குல தெய்வத்தை வழிபாடு செய்த பிறகு செய்வதால் பரிகாரம் முழுமையான பலன் கொடுக்கும்.