ஆன்மீகத்தில் பெண்கள் செய்யக்கூடாத தவறுகள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்

women
- Advertisement -

ஆன்மீகம் என்பது பெண்கள் ஆண்கள் இருவருக்கும் பொதுவான விஷயம் தான். ஆனால் ஒரு வீட்டின் மகாலஷ்மி என்று அழைக்கப்படுபவர் பெண். ஆண்களை விட பெண்களுக்கே அந்த வீட்டின் முன்னேற்றத்தில் அதிக பங்கு இருக்கிறது. இவ்வாறு ஒரு குடும்பத்தின் ஆணிவேரான பெண்களுக்ககென்று இருக்கின்ற கடமைகள் பலவாகும். எனவே இவர்கள் செய்யும் ஒவ்வொரு சிறு சிறுவிஷயங்களளின் பாதிப்பும் அவர்களின் குடும்பத்திலே பிரதிபலிப்பை உண்டாக்கும். அவை நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் சரி. அவ்வாறு ஒரு சில பெண்கள் தனக்கும் தெரியாமல் செய்யும் சிறு தவறுகளால் அவர்களின் குடும்பத்திற்கு வரும் பாதிப்புகளைப் பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

muruga

காலை எழுந்தவுடன் பெண்கள் முதலில் செய்யும் ஒரு காரியம் வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் இடுவது. இவ்வாறு கோலமிடும் பொழுது தெற்கு திசை நோக்கி நின்றுகொண்டு கோலமிட கூடாது. அது போல அமர்ந்து கொண்டும், முட்டிபோட்டுக் கொண்டும் கோலமிடுதல் என்பது அதிர்ஷ்டத்தை நம்மிடமிருந்து குறைக்கும் செயலாகும்.

- Advertisement -

திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிந்து கொள்வது என்பது நமது வழக்கமாகும். ஆனால் ஃபேஷன் என்ற பெயரில் ஒரு காலில் ஒரு விரலையும் தாண்டி இரண்டு மூன்று விரல்களில் மெட்டி அணிந்து கொள்கிறார்கள். அவ்வாறு செய்வது குடும்பத்திற்கு கஷ்டத்தை உண்டு செய்யும். தேவையில்லாத பிரச்சினைகளை கொண்டு வரும்.

women1

திருமணமான பெண்கள் நெற்றி வகுடில் குங்குமம் பொட்டு வைக்கும் போது கிழக்கு திசை நோக்கி பார்த்தவாறு குங்கும பொட்டை வைக்க வேண்டும். திருமணமாகாத பெண்களும் கிழக்கு திசை நோக்கி பார்த்து நெற்றியில் இரு புருவங்களுக்கும் இடையில் குங்குமம் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அமாவாசை தினத்தன்று வாசலில் கோலம் இடக்கூடாது. அமாவாசை விரதம் முடிந்து, பூஜை செய்து முடித்த பின்னர் மாலை வேளையில் வாசல் தெளித்து கோலம் போட்டு மகாலஷ்மியை வரவேற்கலாம். அடுத்ததாக வெள்ளிக் கிழமை நாட்களில் கசப்பு சுவை மிக்க பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு செய்வதால் பாவம் வந்து சேரும் என்று கூறப்படுகிறது.

amavasai

கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கும் பொழுது பெண்கள் கால்களை மடக்கி மண்டியிட்டு தலையின் நெற்றிப் பகுதி தரையில் படுமாறு வணங்கவேண்டும். அவ்வாறு பெருமாள் கோவிலில் பிரசாதமாக கொடுக்கும் துளசியை தலையில் வைத்து அழகு பார்க்க கூடாது. அவற்றை பிரசாதமாக உட்கொள்ள வேண்டும்.

கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி விட்டு அங்கு அமர்ந்து தேவையில்லாத கதைகள் பேசக்கூடாது. அதுமட்டுமல்லாமல் நமது பிரச்சனைகளை நினைத்துக் கொண்டும் இருக்க கூடாது. கடவுளின் திருநாமத்தையோ அல்லது ஏதாவது ஒரு மந்திரத்தையோ உச்சரித்துக் கொண்டு இருக்க வேண்டும்.

ayyar-malai-kovil

அதுபோல பலரும் தெய்வத்தின் விக்ரகத்தை கைகளால் தொட்டு வணங்குவார்கள். அவ்வாறு செய்வது நமக்கு தோஷத்தை மட்டுமே கொடுக்கும். பூஜை செய்யும் பூசாரியை தவிர மற்றவர்கள் விக்கிரகத்தை தொட்டு வணங்குதல் என்பது கூடாது. இவ்வாறு நமக்கும் தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளை சரி செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கூறி இப்பதிவை இத்துடன் முடித்துக் கொள்கிறோம்.

- Advertisement -