ஆறுமுகனின் இந்த மந்திரத்தை சொன்னால் பிறகு வாழ்க்கையில் ஏறுமுகம் தான்.

murugan3
- Advertisement -

மனிதர்களாக பிறப்பெடுத்திருக்கும் இந்த பிறவியில், ஒரு மனிதனுக்கு எப்போது எந்த நேரத்தில், யாரிடமிருந்து, ஞானோதயம் பிறக்கும் என்று சொல்லவே முடியாது. நேற்று வரை தறுதலையாக திரிந்து கொண்டிருந்தவன் இன்று திடீரென்று முருக பக்தனாக மாறுவான். சிவ பக்தனாக மாறுவான், அல்லது ஏதோ ஒரு தெய்வத்தை வழிபடக்கூடிய வாய்ப்பு அவனுக்கு கிடைத்து விடும்.

அன்றிலிருந்து அவனுடைய வாழ்க்கை தலைகீழாக மாறி நல்வழி வரும். இதெல்லாம் வாழ்க்கையில் நடக்கும் ஒரு அதிசய மாற்றம். கடவுள் நடத்தும் விளையாட்டு. இப்படி யாருக்கு எந்த நேரத்தில், என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாது. அது போல தான், உங்களுக்கும் இன்று ஒரு ஆன்மீகம் சார்ந்த பதிவு. இந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்கியவுடன் அந்த முருகப்பெருமானின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும். வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவனுடைய வாழ்க்கை ஏறுமுகத்தில் செல்லும்.

- Advertisement -

கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் முருகப்பெருமானை நீங்கள் எப்படி வழிபாடு செய்தாலும், உங்களுக்கு அவன், அருள் ஆசியை கொடுத்து விடுவான். அதிலும் இந்த சஷ்டி விரத நாட்கள் இருக்கு பாருங்க. அது ரொம்ப ரொம்ப சக்தி வாய்ந்த நாட்கள். ஏழு நாள் சஷ்டி விரதத்தின் போது கடுமையான விரதத்தை இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்து என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும் என்று சொல்லுவார்கள்.

அதிலும் குறிப்பாக சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை. குழந்தை பாக்கியம் என்று மட்டும் கிடையாது. வாழ்க்கையில் முன்னேற, தொழில் வியாபாரத்தில் லாபம் பெற, சொத்து சுகம் வாங்க, செல்வ வளம் பெறுக இப்படி குடும்ப நலனுக்காகவும் நாம் சஷ்டி விரதத்தை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

இந்த வருட கந்த சஷ்டி விரதம் ஆனது நவம்பர் 13ஆம் தேதியே தொடங்கி விட்டது. நவம்பர் 18ஆம் தேதி முருகனுக்கு சூரா சம்ஹாரம். நவம்பர் 19ஆம் தேதி முருகனுக்கு திருக்கல்யாணம் நடக்கும். அதோடு சஷ்டி விரதம் நிறைவு பெறும். தொடர்ந்து ஏழு நாள் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட நவம்பர் 18ஆம் தேதி சஷ்டி விரதத்தின் இறுதி நாள் விரதத்தை மேற்கொள்வார்கள்.

நீங்கள் சஷ்டி விரதம் இருப்பவர்கள் ஆக இருந்தாலும் சரி, சஷ்டி விரதமே இல்லை என்றாலும் சரி, மனம் உருகி முருகனின் இந்த மந்திரத்தை, இந்த சஷ்டி நாட்களில்  சொல்லிப் பாருங்கள். வாழ்க்கையில் நீங்கள் நம்ப முடியாத நல்லதெல்லாம் நடக்க தொடங்கி விடும். ஆறுமுகனை நம்பி வாழ்க்கையில் ஏறுமுகத்தில் செல்ல வேண்டும் என்பவர்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரம் இதோ.

- Advertisement -

ஆறுமுகன் மந்திரம்:

ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்

கஷ்டத்தில் இருப்பவர்களுக்காக முருகப்பெருமான் நேரில் வந்து இந்த வரத்தை தந்ததாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கஷ்டங்கள் தீர இந்த பதிவை படித்த பிறகு, சுத்தபத்தமாக குளிச்சிட்டு முருகப்பெருமானுக்கு ஒரு விளக்கு ஏற்றி, கோவிலுக்கு போய் இந்த மந்திரத்தை சொன்னாலும் சரி, வீட்டில் இருந்து இந்த மந்திரத்தை சொன்னாலும் சரி கணக்கு கிடையாது. எத்தனை முறை மந்திரத்தை சொன்னாலும் உங்களுக்கு அவ்வளவு நன்மைகள் தான். வேறு சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.

இதையும் படிக்கலாமே: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்க ஸ்வஸ்திக் பரிகாரம்

சில பேர் கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான ஆறாவது நாள் மட்டும் விரதத்தை மேற்கொள்வார்கள். அன்றைய தினம் தேவை என்பவர்களும் இந்த மந்திரத்தை உச்சரித்து முருகப்பெருமானை வழிபாடு செய்யலாம். ‘ஓம் சரவணபவ’ ‘ஓம் முருகா’ என்ற மந்திரத்தை சொல்லி இன்றைய ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -