குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர விநாயகர் வழிபாடு

fight vinayagar
- Advertisement -

வீடு என்றால் அதில் இன்பம் துன்பம் நல்லது கெட்டது என அனைத்தும் கலந்து தான் இருக்கும். இது சாதாரண விஷயம் தான். ஆனால் ஒரு சில குடும்பத்தில் பார்த்தால் எப்பொழுதும் சண்டையும் சச்சரவுமாகவும் இருக்கும். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தாலே எரிச்சல் அடைவார்கள். ஒருவர் சொல்வதை ஒருவர் காது கொடுத்து கூட கேட்க மாட்டார்கள்.

எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் நீண்டு கொண்டே போகும் இதற்கு காரணம் என்னவென்று அவர்களுக்கே கூட புரியாது. இப்படியான சூழ்நிலையில் இன்று பல குடும்பங்கள் தவிர்த்துக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சனை கணவன் மனைவிக்கு மட்டும் இல்லாமல் குழந்தைகளுடனும், பெற்றோர்களுடனும், சகோதரர்களுடனும் இது போல இருக்கும்.

- Advertisement -

இன்னும் சிலரோ வீட்டிற்கு வெளியில் கூட எப்போதுமே கடுகடுவென்று இருப்பார்கள். எதற்காக இவ்வளவு கோபப்படுகிறார் என்பது அவருக்கும் தெரியாது சுற்றியுள்ளவர்களுக்கும் தெரியாது. இது போன்ற மனநிலை மாற எளிய வழிபாடு உள்ளதாக சொல்லப்படுகிறது அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்வோம்.

பிரச்சனைகள் தீர விநாயகர் வழிபாடு

இந்த வழிபாடு சதுர்த்தி திதியில் செய்ய வேண்டும். சதுர்த்தி திதி அன்று விநாயகர் ஆலயத்திற்கு சென்று அருகம்புல்லை விநாயகரின் தலையில் வைத்து வழிபட வேண்டும். அநேகமான இடங்களில் விநாயகர் கோவில் தனியாகவே இருக்கும். அப்படி இருந்தால் நீங்களே வைத்து வழிபடுங்கள் கோவில் பூசாரி இருந்தால் அவரிடம் கொடுத்து இதை வைக்க சொல்லி அதன் பிறகு வழிபட்டு வாருங்கள்.

- Advertisement -

இந்த வழிபாடு தொடர்ந்து செய்யும் போது உங்களுடைய மனநிலை கிரகநிலை அனைத்தும் மாதிரி குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருப்பீர்கள். உங்களுக்கு வரக் கூடிய பல பிரச்சனைகளை இந்த வழிபாடு தடுத்து நிறுத்தும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது அனைவருக்கும் பொதுவான வழிபாடு. கணவன் மனைவிக்கு உள்ள பிரச்சனை தீர இதே விநாயகர் வழிபாட்டு முறையை வேறு விதமாக செய்ய வேண்டும்

அதற்கு வேம்பு அரசம் இரண்டிலான விநாயகர் சிலைகள் உள்ளது. அதில் ஒரு சிறிய விநாயகர் வாங்கிக் கொள்ளுங்கள். பெரிய விநாயகர் சிலை வைத்தல் அதற்கான வழிபாடுகளும் செய்ய வேண்டும். ஆகையால் சிறிய விநாயகர் சிலை வாங்கி அந்த விநாயகரை தினமும் வழிப்பட்டு வந்தால் கணவன் மனைவிக்கு இடையே உள்ள பிரச்சனைகள் தீரும்.

இதையும் படிக்கலாமே: பணப் பிரச்சனை தீர பரிகாரம்

நம்முடைய சகல பிரச்சனைகளையும் தீரவும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்வும் கணவன் மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கவும் இந்த வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் வழிபடலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -