இன்று ஆவணி மாத வளர்பிறை சோமவார பிரதோஷம்! வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய ஈசனை நினைத்து இந்த ஒரு வரி மந்திரத்தை சொன்னாலே போதும்.

sivan
- Advertisement -

அந்த சிவபெருமானின் அனுகிரகம் முழுமையாக நமக்கு கிடைத்து விட்டாலே போதும். வாழ்க்கையில் இந்திரனுக்கு நிகரான செல்வமும் புகழும் கிடைத்துவிடும். அதிலும் ஆவணி மாதம் வந்திருக்கக்கூடிய இந்த வளர்பிறை பிரதோஷமானது திங்கட்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. சிவபெருமானுக்கு உரிய இந்த சோமவார தினத்தில் வந்திருக்கும் பிரதோஷ நாளை யாரும் தவறு விடாதீங்க. வாழ்க்கையில் மென்மேலும் முன்னேற்றம் அடைய, தோல்விகளை எல்லாம் வெற்றியாக மாற்ற, முன் ஜென்ம பாவங்களை நீங்க, சுப காரிய தடைகள் விலக, நினைத்த காரியம் எல்லாம் நல்லபடியாக நடக்க இன்றைய தினம்(28-8-2023) சிவபெருமானின் வழிபாடு நிச்சயம் உங்களுக்கு நல்லதொரு வழியை காட்டும். இன்று சிவபெருமானை எந்த மந்திரத்தை சொல்லி, எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய விரிவான ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

ஆவணி மாதம் வளர்பிறை பிரதோஷ வழிபாடு:
பிரதோஷ நேரம் என்றாலே மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணி வரை. இதற்கு இடைப்பட்ட நேரத்தை தான் பிரதோஷ நேரம் என்று சொல்லுவார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். இந்த நேரத்தில் வீட்டின் அருகில் இருக்கும் சிவன் ஆலயங்களுக்கு சென்று அங்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபாடு செய்வது நமக்கு கோடி புண்ணியத்தை கொடுக்கும். சிவபெருமானின் ஆசிர்வாதத்தையும் முழுமையாக பெற்று தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது தவிர உங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை சிவபெருமானுக்கு வாங்கிக் கொடுக்கலாம். குறிப்பாக உங்கள் கையால் வில்வ இலைகளை சிவபெருமானுக்கு வாங்கிக் கொடுப்பது நல்லது. இன்று மாலை பிரதோஷ நேரத்தில் சிவன் ஆலயத்தில் அமர்ந்து ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொன்னால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் அது விலகிவிடும். இது நம்மில் பல பேருக்கு தெரியும். இருந்தாலும் இன்று பிரதோஷ தினத்தில் இந்த ஐந்து எழுத்து மந்திரத்தை நினைவு கூற வேண்டியது நம்முடைய கடமை அல்லவா.

விரும்பியதை அடைய சிவ மந்திரம்:
விரும்பியதை உடனடியாக அடைவதற்கு, சிவபெருமானிடம் வேண்டிய வரங்களை உடனடியாக பெறுவதற்கு, சீக்கிரம் செல்வந்தர்களாக மாறுவதற்கு இன்னொரு சக்தி வாய்ந்த மந்திரமும் நமக்காக சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதை இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம். ‘ஓம் நமோ பகவதே ருத்ரே’. இதுதாங்க அந்த ஒரு வரி மந்திரம். இந்த மந்திரத்தை பிரதோஷ நேரத்தில் சிவபெருமான் கோவிலில் அமர்ந்து 108 முறை உச்சரிப்பவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

- Advertisement -

சரியாக இன்று மாலை பிரதோஷ நேரமான நான்கு முப்பது மணியிலிருந்து, ஆறு மணிக்குள் இந்த மந்திரத்தை சிவன் பெருமான் ஆலயத்தில் அமர்ந்து உச்சரிக்க வேண்டும். சில பேருக்கு கோவிலுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை இருக்கும். சில பேருக்கு கோவிலுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை இருக்காது. அப்படிப்பட்டவர்கள் பிரதோஷ நேரத்தில் நீங்கள் இருக்கும் இடத்திலேயே அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். 108 முறை உச்சரிப்பதற்கு நேரம் இல்லை என்பவர்கள் வெறும் 3 முறை இந்த மந்திர நாமத்தை உச்சரித்தாலும் கூட உங்களுக்கு உண்டான பலனை அந்த எம்பெருமான் நிச்சயம் கொடுப்பான்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்த இந்த மலரை கொண்டு வந்து இப்படி செய்த பின் பணப்பெட்டியில் வைத்தால் தாயாரே உடன் வந்தமர்ந்து வீட்டில் பணமழையை நிச்சயம் பொழிவார்.

அதேபோல மாதவிடாய் சமயத்தில் இருக்கக்கூடிய பெண்கள் கூட, கோவிலுக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடியே இந்த நாமத்தை மனதார இன்று மாலை பிரதோஷ நேரத்தில் உச்சரிக்கலாம் தவறு கிடையாது. இறைவனின் நாமத்தை சொல்லுவதற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் யாருக்கும் விதிக்கப்படவில்லை. இறைவனின் நாமத்தை சொல்லி அவனை நாம் எந்த சூழ்நிலையிலும், எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் வழிபாடு செய்யலாம். இன்றைய நாள் சிவபெருமானின் அனுகிரகத்தை முழுமையாக பெற்று, வாழ்வில் எல்லா செல்வ வளங்களையும் பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -