முகப்பருவுக்கு மேல ஒரு சொட்டு இதை மட்டும் தடவுங்க. மூன்றே நாட்களில் முகப்பரு வந்த தடம் தெரியாமல் காணாமல் போகுதா இல்லையான்னு பாருங்க.

face10
- Advertisement -

கண்ண மூடிகிட்டு சரும பிரச்சனை இருக்கும் யார் வேண்டுமென்றாலும், இந்த ரெமிடியை முயற்சி செய்து பார்க்கலாம். எனக்கு முகப்பரு இருக்கு. அல்லது முகப்பரு வந்து போயிருச்சு, அந்த இடத்தில் தழும்பு மட்டும் ரொம்ப நாட்களாக மறையாமல் இருக்கிறது. இதை மறைய வைக்க ஆயிர கணக்கில் பணம் செலவு செய்து பார்த்து விட்டோம். ஆயிரக்கணக்கில் கிரீமும் வாங்கி போட்டு விட்டோம். ஆனால் அந்தத் தழும்பும் முகப்பருவும் மறையவில்லை என்பவர்கள் இந்த குறிப்பை கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள். மூன்றே நாட்களில் உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும்.

முகப்பரு நீங்க அழகு குறிப்பு:
இந்த குறிப்புக்கு நமக்கு தேவை பச்சரிசி. அது ரேஷன் பச்சரிசியாக இருந்தாலும், நீங்கள் பயன்படுத்தலாம். நான்கு டேபிள் ஸ்பூன் பச்சரிசியை ஒரு கிண்ணத்தில் போட்டு, 3 முறை சுத்தமாக கழுவி விடுங்கள். பிறகு அந்த அரிசி மூழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி, இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். ஊறவைத்த தண்ணீரோடு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.

- Advertisement -

அரைத்த இந்த விழுதை வடிகட்டிக் கொள்ளுங்கள். வடிகட்டிய பின்பு கோலம் போடும் மாவு போல ஒரு மாவு உங்களுக்கு கிடைத்திருக்கும். அதை அப்படியே ஒரு கிண்ணத்தில் ஊற்றி, மூடி போட்டு அசைக்காமல் ஒரு ஓரமாக வைத்து விடுங்கள். ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ கழித்து பார்த்தால் அந்த அரிசி மாவில் இருக்கும் தண்ணீர் எல்லாம் மேலே தெளிந்து வந்துவிடும். அடியில் திக்காக அரிசி மாவு நைசாக இருக்கும். மேலே தெளிந்த நீரை அப்படியே வடித்து எடுத்து விடுங்கள். அடியில் இருக்கும் அந்த திக்கான அரிசி பேஸ்ட் தான் நமக்கு தேவை.

இதை தான் அழகு குறிப்புக்கு பயன்படுத்த போகின்றோம். இதை எடுத்து ஒரு கண்டெய்னரில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் ஏழு நாட்கள் வரை கெட்டுப்போகாது. தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஒரு சொட்டு இந்த வெள்ளை அரிசி மாவு பேஸ்ட் எடுத்து முகப்பரு இருக்கும் இடத்தில் புள்ளி புள்ளியாக வச்சிடுங்க. அவ்வளவுதான். அந்த பேஸ்ட் காய்ந்ததும் தூங்க போலாம்.

- Advertisement -

மறுநாள் காலை எப்போதும் போல முகத்தை கழுவிக்கொள்ளலாம். மூன்று நாள் இரவு இதை மட்டும் செஞ்சு பாருங்க. நாலாவது நாள் உங்கள் முகத்தில் இருக்கும் மாற்றத்தை நீங்களே உணருவீர்கள். எனக்கு இரண்டு கன்னம் முழுவதும் இந்த பிரச்சனை இருக்கிறது என்றால் இரண்டு கன்னத்தின் மேலும் முழுமையாக இந்த பேக்கை தடவலாம் தவறு கிடையாது.

முகப்பரு உள்ளவர்களும் இதைப் போடலாம். முகப்பரு வந்து போய் அந்த இடத்தில் தழும்பு இருப்பவர்களும் இதை பயன்படுத்தலாம். செம்ம ரிசல்ட் கிடைக்கும். மூன்று நாட்களில் பாதி அளவு தான் போயிருக்கிறது என்றால் மீண்டும் ஒரு மூன்று நாட்கள் சேர்த்து இந்த குறிப்பை பின்பற்றினால் வேலை முடிந்தது. அந்த தழும்பு கண்ணுக்கே தெரியாமல், அடையாளம் தெரியாமல் உங்களுடைய சருமம் அழகாக மாறிவிடும்.

இதையும் படிக்கலாமே: இனி பங்க்ஷன் போறதுக்காக பார்லர் சென்று ஆயிரக் கணக்கில் பணத்தை செலவு செய்ய வேண்டாம். பத்து ரூபாய் செலவு பண்ணா போதும் பத்தே நிமிஷத்துல அழகு தேவதையாக ஜொலிக்கலாம்.

அதேபோல நிறைய பேருக்கு கண்ணுக்கு கீழே கருவளையம் இருக்கும். அந்த இடத்திலும் இந்த அரிசி மாவு பேக்கை தொடர்ந்து ஒரு ஒரு மாதம் வரை தடவி வந்தால் உங்கள் கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் படிப்படியாக குறைய தொடங்கும். அழகு குறிப்பு தேவை என்பவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -