வெள்ளிக்கிழமை அன்று, இந்த பரிகாரத்தை செய்தால் அடகு வைத்த நகையை சுலபமாக மீட்டு விடலாம்! சுலபமான, சக்திவாய்ந்த பரிகாரம் இது.

mahalashmi
- Advertisement -

கடந்த சில நாட்களாக நமக்கு தொடர்ந்து இருந்துவரும் லாக்டவுன் பிரச்சனையினால், நம்முடைய நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக தான் இருக்கின்றது. இதன் காரணமாக, நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, தங்க நகைகளை அடமானத்தில் வைத்திருப்போம். அந்த நகையை எப்படி மீட்க போகின்றோமோ? என்ற கவலை, நம்மில் பல பேருக்கு கட்டாயம் இருக்கும். நம்முடைய வருமானம் அதிகரிக்கப்பட்டு, நகையை சீக்கிரமே மீட்டெடுக்க வேண்டும் என்றால், நம் வீட்டில் மகாலட்சுமியை வேண்டி என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதற்கு மிகவும் சிரமப்பட தேவையில்லை. அதிக செலவும் ஆகாது.

mahalakshmi

மகாலட்சுமி அம்சம் என்றாலே அது கல் உப்பு தான். இந்த கல் உப்பில் மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய, இன்னும் சில பொருட்களை சேர்த்து, இந்த பரிகாரத்தை செய்யும் பட்சத்தில், அதற்கான பலனை நம்மால் உடனடியாக பெறமுடியும் என்று நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் இப்படிப்பட்ட பரிகாரங்கள் எல்லாம், பெரிய அளவில் செய்யப்பட்டு வந்தன. காலத்திற்கு ஏற்ப, அந்த பரிகார முறைகள் எல்லாமே, சுலபமான முறையில் மாற்றப்பட்டு இருக்கின்றது, என்பதையும் இந்த இடத்தில் நினைவு கொள்ள வேண்டும். அப்படி ஒரு பரிகாரம் தான் இந்த பரிகாரமும் கூட.

- Advertisement -

வீட்டில் இருக்கக்கூடிய உப்பை வைத்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம். வெள்ளிக்கிழமை அன்று, கடையிலிருந்து சென்று, புது உப்பை வாங்கி வரவேண்டும். ஒரு கண்ணாடி டம்ளரிலோ அல்லது கண்ணாடி பௌலிலோ அல்லது பீங்கான் ஜாடியாக இருந்தாலும் சரி தான், உங்கள் வீட்டில் எது இருக்கிறதோ, அதை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். பீங்கான், கண்ணாடி இந்த இரண்டினால் செய்யப்பட்ட பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

salt1

உங்கள் வீட்டு பூஜை அறையில் அலங்காரத்தை முடித்துவிட்டு, தீபம் ஏற்றி வைத்துவிட்டு, பூஜை அறையிலேயே அமர்ந்து, இந்த பரிகாரத்தை செய்ய தொடங்குங்கள். முதலில் தயாராக வைத்திருக்கும் கண்ணாடி டம்ளரில், புதியதாக வாங்கிய உப்பைக் கொட்டி நிரப்பிக்கொள்ள வேண்டும். உப்பின் மேல் மஞ்சள் பொடியை தூவ வேண்டும். குங்குமத்தையும் துருவிக் கொள்ளுங்கள். இரண்டு சிட்டிகை அளவு விரல்களால் எடுத்து தூவி விட்டால் போதும். மூன்றாவதாக பச்சரிசியால் செய்த அட்சதையை தூவி விடுங்கள். இறுதியாக அதன்மேல் ஒரு எலுமிச்சை பழத்தை வைக்கப் போகின்றோம்.

- Advertisement -

இந்த எலுமிச்சை பழத்தை வைப்பிற்கு முன்பாக, உங்கள் வீட்டில் மகாலட்சுமி திருவுருவப்படம் இருக்கும் அல்லவா? அந்தப் படத்தின் முன்பு, மகா லட்சுமி தாயாரின் பாதத்தை தொட்டு, உங்களுக்கு வருமானம் அதிகரிக்க வேண்டும். கஷ்டங்கள் தீர வேண்டும். அடமானத்தில் இருக்கக்கூடிய நகை சீக்கிரமே மீட்டெடுக்க வேண்டும், என்று வேண்டிக் கொண்டு, அந்த எலுமிச்சை பழத்தை உப்பின் மேல் வைத்து விடுங்கள். பரிகாரம் முடிந்தது.

lemon1

நினைவில் கொள்ள வேண்டியது, பரிகாரத்தை செய்யும் போது மனதில் மகாலட்சுமியை வேண்டிக்கொள்ள வேண்டும். எலுமிச்சை பழத்தை கட்டாயம் மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் தொட்டு எடுக்கவேண்டும் என்பது மட்டும் குறிப்பிடத்தக்கது. சரி, தயார் செய்து வைத்திருக்கும் இந்த கண்ணாடி தம்ளரை எங்கு வைப்பது என்ற சந்தேகம் இருக்கும் அல்லவா?

- Advertisement -

poojai arai

சிறிது நேரம் அது உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்கட்டும். அதன்பின்பு, அந்த டம்ப்ளரை எடுத்து நீங்கள் நகை வைக்கும் பெட்டிக்கு பக்கத்தில் வைக்க வேண்டும். உங்கள் வீட்டு பீரோ பக்கத்திலும் வைத்துக்கொள்ளலாம். நகை வைக்கும் அலமாரி இருந்தால், அந்த அலமாரிக்கு பக்கத்திலும் வைத்துக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால், மூன்று நாட்கள் கழித்து, திங்கள்கிழமை இந்த பொருட்களை எல்லாம் ஓடும் தண்ணீரில் கொட்டி விடலாம். முடியாதவர்கள் ஒரு கவரில் கொட்டி கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.(வெள்ளிக்கிழமை காலையில் இந்த பரிகாரத்தை செய்வதாக இருந்தால்,  10 மணிக்கு முன்பாக பூஜையை முடித்து விடுங்கள். மாலை பரிகாரத்தை செய்வதாக இருந்தால் 6 மணிக்கு மேல் 8 மணிக்குள் பூஜையை முடித்துக் கொள்ளுங்கள்.)

mahalakshmi

இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்யும்போதே உங்களுக்கு நல்ல பலன்கிடைத்து விட்டால், அடுத்த வாரம் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்களுக்கு மன திருப்தி ஏற்பட்டு, இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் வீட்டில் நிம்மதி இருப்பதாக உணர்ந்தால், தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை, தொடர்ந்து செய்யலாம் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த சாமி படங்களை எல்லாம் மற்றவர்களுக்கு பரிசாக கொடுப்பதால் உங்களுக்கு என்ன நடக்கும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -