வீட்டில் ஒரு பொட்டு தங்கம் கூட இல்லாமல் அனைத்தும் அடகு கடையில் இருக்கிறதா? அப்போ சிவபெருமானை நினைத்து இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். விரைவிலேயே அனைத்து நகைகளும் உங்கள் வீடு வந்து சேரும்.

jewel loan
- Advertisement -

பணத்தை பல வழிகளில் சேமிக்கலாம். அதில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக நாம் சேமிப்பது தங்க நகையில்தான். தங்கத்தில் முதலீடு செய்து தங்க நகைகளாக வீட்டில் வைத்திருந்தால் நம்முடைய அவசிய, அவசர தேவைக்கு அந்த தங்க நகைகளை வைத்து பணமாக நம்மால் பெற முடியும் என்ற காரணத்தினாலேயே பலரும் பணத்தை சேமித்து நகையாக வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். அப்படி வைக்கப்பட்ட தங்க நகைகள் வீடு திரும்பாமல் அடகு கடையிலேயே இருக்கும் பட்சத்தில் சிவபெருமானை எப்படி வழிபட்டால் அனைத்து நகைகளும் வீடு திரும்பும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தங்கத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் குபேர பகவானும், மகாலட்சுமி தாயாரும்தான். இவர்கள் இருவருக்கும் செல்வத்தை அருளக்கூடியவர் தான் ஐஸ்வரேஸ்வரர். ஐஸ்வரேஸ்வரரை நம் முறையாக வழிபட்டால் அவர் நமக்கு செல்வங்கள் அனைத்தையும் தருவார். அவ்வாறு செல்வங்களை தருபவர் அடகு கடையில் இருக்கும் நகைகளை திருப்பி தருவதற்குரிய வழிமுறைகளையும் நமக்கு காட்டுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படிப்பட்ட ஐஸ்வரேஸ்வரரை எந்த நாளில் எப்படி வழிபட வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டிற்கு நமக்கு சில தங்க நாணயங்கள் தேவைப்படும். தங்க நாணயங்கள் இல்லாதவர்கள் வெள்ளி நாணயங்களை உபயோகப்படுத்தலாம். வெள்ளி நாணயங்களும் இல்லாதவர்கள் ஒரே அளவில் இருக்கக்கூடிய ஒரு ரூபாய் நாணயங்களை உபயோகப்படுத்தலாம். இந்த நாணயத்தை உப்பு கலந்த நீரில் நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த நாணயங்களை ஒரு வெண்கல கிண்ணத்தில் போட வேண்டும். வேறு எந்த கிண்ணத்தையும் உபயோகப்படுத்தக் கூடாது.

இந்த வழிபாட்டை நாம் சிவபெருமானுக்கு உரிய நாளான பிரதோஷ நாளன்று தான் செய்ய வேண்டும். அதுவும் பிரதோஷ வேலையில் தான் செய்ய வேண்டும். முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டு அவருக்கு அருகம்புல்லை வைத்து வணங்க வேண்டும். பிறகு வீட்டில் இருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். சிவலிங்கம் இல்லாதவர்கள் பானலிங்கத்தை வாங்கி வந்து அதற்கு அபிஷேகம் செய்யலாம். அபிஷேகம் செய்த பிறகு மலர்களாலும் வில்வ இலையாலும் சிவபெருமானின் மந்திரங்களை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக நாம் ஏற்கனவே வெண்கல கிண்ணத்தில் வைத்திருக்கும் அந்த நாணயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளால் அந்த நாணயங்களை எடுத்து மறுபடியும் திரும்ப அதே கிண்ணத்தில் போட வேண்டும். இதன் முக்கியமான சாராம்சம் என்னவென்றால் அந்த நாணயங்களின் சத்தமே. இவ்வாறு நாம் 27, 54, 108 முறை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது “ஓம் ஐஸ்வரேஸ்வரரே நமஹ” என்று கூற வேண்டும். மேலும் இவ்வாறு நாம் மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நம் வாயில் ஏலக்காய் அல்லது கிராம்பு இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துக்கொண்டு உச்சரித்தால் மந்திரத்தின் முழு பலனையும் நம்மால் அடைய முடியும்.

இதையும் படிக்கலாமே: ஒரு ஸ்பூன் வெந்தயம் இருந்தால் போதும் நீங்க நினைச்சதெல்லாம் நடக்கிறதுக்குரிய பணத்தை அள்ள அள்ள கொடுத்துக்கொண்டே இருக்கும்.

இப்படி நாம் ஒவ்வொரு பிரதோஷ நாளென்றும் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் சிவபெருமான் நம்முடைய நகையை திருப்புவதற்குரிய பண வரவை நமக்கு ஏற்படுத்தித் தருவார். நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை மேற்கொண்டு பலன் அடையுங்கள்.

- Advertisement -