ஒரு ஸ்பூன் வெந்தயம் இருந்தால் போதும் நீங்க நினைச்சதெல்லாம் நடக்கிறதுக்குரிய பணத்தை அள்ள அள்ள கொடுத்துக்கொண்டே இருக்கும்.

fenugreek
- Advertisement -

பணத்தை யார் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். அதை எந்த அளவிற்கு சம்பாதிக்கிறோம், எப்படி சம்பாதிக்கிறோம், மேலும் சம்பாதித்த பணத்தை வைத்து என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். நியாயமான வழியில் நாம் சம்பாதிக்கும் பணமே நம்மிடம் நிலையாக இருக்கும். மேலும் அவ்வாறு நியாயமான முறையில் நாம் பணத்தை சம்பாதித்தாலும் அதை நல்ல முறையில் சேமித்து வைத்து நல்ல செயல்களுக்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதற்கு நமக்கு நவகிரகங்களின் அருளும் தேவை. அதிலும் குறிப்பாக சுக்கிர பகவானின் அருளைப் போலவே புதன் பகவானின் அருளும் தேவைப்படும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நினைத்தது நடக்க வெந்தயத்தை வைத்து எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக நம்முடைய பண தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நமக்கு சுக்கிர பகவானின் அருள் தேவைப்படும். சுக்கிர பகவானின் அருள் இருந்தால் நமக்கு பணம் சேரும் என்றாலும் நியாயமான வழியில் நம்முடைய சுய உழைப்பில் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு புதன் பகவானின் அருளும் கண்டிப்பாக தேவை. புதன் பகவான் என்பவர் ஞானத்தை வழங்க கூடியவராக திகழப்படுபவர். அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்தால் சுகமான வாழ்க்கையை வாழ முடியும்.

- Advertisement -

அப்படிப்பட்ட புதன் பகவானுக்குரிய தானியமாகவும் அதே சமயம் தன ஆகர்ஷன தானியமாகவும் திகழக்கூடியது தான் வெந்தயம். வெந்தயத்தை முறையாக பயன்படுத்தினோம் என்றால் நாம் கேட்டது அனைத்தையும் நம்மால் பெற முடியும். எப்படி ஒருவரின் இல்லத்தில் உப்பு குறைவில்லாமல் இருக்க வேண்டுமோ அதே போல் தான் வெந்தயமும் அதிகமாக இருக்க வேண்டும். வெந்தயம் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு வீட்டில் பணமும், நகையும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

புதன் பகவானுக்குரிய கிழமையான புதன்கிழமை அன்று புதன் ஹோரையில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து நாம் பணம் வைத்திருக்கும் பணப்பெட்டியிலோ அல்லது நகை வைத்திருக்கும் நகை பெட்டியிலோ போட வேண்டும். இவ்வாறு போடுவதன் மூலம் புதன் பகவானின் அருள் அங்கு பரிபூரணமாக கிடைத்து பணமும், நகையும் சேர்ந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நம்முடைய வேண்டுதல் என்னவோ அதை எழுத வேண்டும். ஒரே ஒரு வேண்டுதலை தான் எழுத வேண்டும். எழுதிவிட்டு ஒரு ஸ்பூன் அளவு வெந்தயத்தை அந்த பேப்பரில் வைத்து பேப்பரை நன்றாக மடித்து சாமி அறையில் வைத்து விட வேண்டும். அன்றாடம் நாம் பூஜை செய்யும் பொழுது அதையும் தொட்டு வணங்கி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் செய்து வர வேண்டும். 49 வது நாள் இந்த பேப்பரை எடுத்து அதில் இருக்கும் வெந்தயத்தை காய்ப்படாத இடத்தில் அதாவது பூந்தொட்டியில் போட்டுவிட்டு பேப்பரையும் அங்கேயே போட்டு விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாம் என்ன எழுதினோமோ அது நியாயமான கோரிக்கையாக இருப்பின் அது நடைபெறுவதற்கு புதன் பகவான் நமக்கு அருள் செய்வார்.

மேலும் மாத சம்பளம் வாங்குபவர்கள் சம்பளம் வாங்கிய உடனே உப்பை வாங்க வேண்டும் என்று அனைவரும் சொல்வார்கள். அதே போல் நம்முடைய சம்பள பணத்திலிருந்து நூறு ரூபாயாவது எடுத்து வெந்தயம் இருக்கும் டப்பாவில் வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய வருமானம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

இதையும் படிக்கலாமே: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சொந்த வீட்டில் குடியேற வாடகை பணத்தை கொடுக்கும் முன் இப்படி செய்து விட்டு கொடுத்துப் பாருங்கள் அடுத்த வாடகை பணத்தை கொடுப்பதற்குள்ளாகவே சொந்த வீடு வாங்கும் யோகம் உங்களை தேடி வரும்.

நம் அனைவரின் சமையலறையில் இருக்கக்கூடிய இந்த வெந்தயத்தை வைத்து புதன் பகவானை மனதார வேண்டி இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது கை நிறைய பணத்தையும், நினைத்ததை நடத்தக்கூடிய ஆற்றலையும் பெற முடியும்.

- Advertisement -