வியாழக்கிழமை இந்த தண்ணீரில் முகம் கழுவினால், அடகு வைத்த நகையை சீக்கிரம் மீட்டு எடுக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நகையை மீட்க முடியாமல் தடுக்கும் தரித்திரத்தை விளக்க எளிய பரிகாரம்.

mahalakshmi-selvam-gold-coins
- Advertisement -

நாம் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளில், வரும் தடைகளை தான் தரித்திரம் என்று சொல்லுவார்கள். அந்த தரித்திரம் நம்மை விட்டு விலகி விட்டால், முயற்சியில் வெற்றி நம் பக்கம் வந்துவிடும். ஈசியாக பணத்தை சேமித்து, அடகு வைத்த நகைகளை எல்லாம் திரும்பவும் மீட்டு விடலாம். ரொம்ப நாட்களாக வட்டிகட்டி மீட்க முடியாமல் அடகு கடையில் இருக்கும் நகையை மீட்பதற்கு உண்டான ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். தொடர்ந்து வியாழக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து வருபவர்களுடைய வீட்டில் இருக்கும் தங்கம், நிரந்தரமாக தங்கும். வெளியே தங்கிக் கொண்டிருக்கும் தங்கத்தையும், கொண்டு வந்து நிரந்தரமாக வீட்டில் தங்க வைக்கக் கூடிய வேலையை இந்த எளிமையான பரிகாரம் செய்யும்.

அடகு வைத்த நகையை மீட்டெடுக்க வியாழக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு சுத்தமான தண்ணீர், சுத்தமான பன்னீர், சின்ன தங்க நாணயம், கஸ்தூரி மஞ்சள் இந்த பொருட்கள் எல்லாம் தேவை. தங்க நாணயம் உங்களுடைய வீட்டில் இருந்தால் அதை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம். அப்படி இல்லையென்றால் நீங்கள் பயன்படுத்தும் மோதிரம், சின்ன கம்பல், மூக்குத்தி, சின்ன திருகாணி இருந்தால் கூட அதை இந்த பரிகாரத்திற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

ஆனால் ஒரு கிராமில் அல்லது அரை கிராமில் மகாலட்சுமியின் படம் போட்ட தங்க காயினை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தினால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வியாழக்கிழமை மாலை விளக்கேற்றும் நேரத்தில் 1 டம்ளரில் பாதி அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். பாதி அதில் பன்னீரை ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.

இதில் ஒரே ஒரு சின்ன துண்டு கஸ்தூரி மஞ்சள் கிழங்கை போடவும். எடுத்து வைத்திருக்கும் தங்க காசு அல்லது தங்க நகையை இதில் போட்டுவிட்டு இதை மகாலட்சுமியின் திருவுருவப்படத்திற்கு முன்பு வைத்து மனம் உருகி உங்களுடைய பிரச்சனையை சொல்ல வேண்டும்.

- Advertisement -

அடமானம் வைத்த நகையை சீக்கிரம் மீட்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பூஜை அறையில் இந்த தண்ணீர் அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலை வெள்ளிக்கிழமை குளித்து முடித்துவிட்டு உங்களுடைய முகத்தை மட்டும் இந்த தண்ணீரை எடுத்து தெளித்தபடி முகம் கழுவிக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கோடிக் கடனும் காணாமல் போக இந்த ஆடி அமாவாசை பரிகாரத்தை இன்று மாலை நேரத்தை தவற விடாமல் பயன்படுத்திக் செய்து விடுங்கள். கடனை அடைக்க இது போன்றதொரு வாய்ப்பு இனி கிடைக்காது.

இதை தொடர்ந்து 11 வியாழக்கிழமைகள் செய்து வந்தாலே உங்கள் நகையை மீட்பதற்கு உண்டான நல்லதொரு வழியை அந்த மகாலட்சுமி தேவி காட்டிக்கொடுப்பாள் என்பது நம்பிக்கை. கஸ்தூரி மஞ்சள் தூள் பயன்படுத்துவதை விட, கஸ்தூரி மஞ்சள் கிழங்கை பரிகாரத்திற்கு பயன்படுத்துங்கள். மேலே சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த குறிப்பில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -