நீங்கள் இப்படி இருந்தால் உங்களுக்கு தகுந்த மனைவியும், அடங்காபிடாரியாக மாற வாய்ப்பு உண்டு தெரியுமா? ஆண்களே உஷார்!

couple-fight-astro
- Advertisement -

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கூறுவார்கள். இது இறைவன் கொடுத்த வரம் மட்டுமல்ல, உங்களுடைய குணத்தை பொறுத்தும் மாறுபடுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் இந்த விஷயங்கள் எல்லாம் இருந்தால் தகுந்த மனைவி கூட அடங்காப்பிடாரியாக விஸ்வரூபம் எடுப்பார்களாம். நீங்கள் இப்படி இருந்தாலும், உங்க மனைவி உங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்கள். அப்படியான சில ஜோதிட குறிப்பு இரகசியங்களைத் தான் இந்த பதிவில் இனி பார்க்க இருக்கிறோம்.

ஒரு ஆணினுடைய ஜாதகத்தை பொறுத்தே, அவனுடைய மனைவி அவனுக்கு அமைகிறாள். சில சமயங்களில் கிரக மாற்றத்தினாலும் உங்களுடைய மனைவியின் குண நலன்களில் மாற்றங்கள் நிகழும். ஒரு குடும்பத்தில் தலைவன் ஸ்தானத்தில் இருக்க கூடிய ஒரு ஆணினுடைய ஜாதகம் தான் முக்கியமாக இருக்கிறது. அதை பொறுத்தே மனைவி, குழந்தைகளுடைய வாழ்க்கையும் அமைந்துள்ளது.

- Advertisement -

அசுப கிரகங்களாக இருக்கக்கூடிய செவ்வாய், சனி, ராகு ஆகிய இந்த மூன்று கிரகங்களும் சுக்ரனுடன் இணைந்திருக்கக் கூடாது. அப்படி சுக்கிர பகவானுடன் இவர்கள் இணைந்து உங்களுடைய ஜாதகத்தில் இருந்தால், உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மனைவியும், ‘நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது?’ என்கிற மனநிலைக்கு மாறிவிடுவார். ஏழாம் அதிபதியுடன் சேர்ந்து இருந்தாலும், பார்க்கக்கூடிய அமைப்பாக இருந்தாலும் கூட மனைவி உங்களுடைய சொல் பேச்சு கேட்க தவறுவார்.

ஜாதக ரீதியாக மட்டுமல்லாமல் ஒரு ஆண் தன்னுடைய மனைவியை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பது தான் சிறந்த தம்பதியர்களுக்கான அடையாளமாக இருக்கிறது. மற்றவர்களை விட நீங்களே அவர்களை நன்கு அறிந்தவராக இருக்கிறீர், எனவே மற்றவர்கள் உங்கள் மனைவியை தவறாக நினைத்தாலும், அவள் அப்படி அல்ல என்பதை நீங்கள் தான் எடுத்து சொல்ல வேண்டும். அந்த இடத்தில் தான் உங்கள் மீது அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கிறது. இதில் நீங்கள் கோட்டை விட்டுவிட்டால், பிறகு அவர்கள் உங்களுக்கு கண்டிப்பாக அடங்கவே மாட்டார்.

- Advertisement -

எந்த இடத்திலும் தன்னுடைய பிள்ளையை தாய், தந்தையர் விட்டுக் கொடுப்பது இல்லை! அதே போல மனைவி கணவனையும், கணவன் மனைவியையும் சிறு சிறு பிரச்சனைகளுக்காகவும், சிறு சிறு தவறுகளுக்காகவும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது. இப்படி செய்தாலே எந்த மனைவியும் கணவனுக்கு மரியாதை கொடுத்து அடங்கி நடப்பார்கள். மாமியார், நாத்தனார் என்று சிலரிடம் கோபமாக நடந்து கொண்டாலும், கணவன் தான் அந்த இடத்தில் அவளும் நம்மை போல தான்! வெளியில் படபடவென்று பேசுவாளே தவிர, உள்ளே ஒன்றும் வைத்துக் கொள்ள மாட்டாள். சிறிது நேரத்தில் மறந்து விடுவாள் என்று புரிய வைக்க வேண்டும். இல்லை என்றால் சிறு தீப்பொறி கூட, காட்டுத் தீயாய் பரவி குடும்பத்தை அழித்துவிடக் கூடிய அபாயம் உண்டாகிவிடும்.

இதையும் படிக்கலாமே:
இந்த வார ராசிபலன் 13/03/2023 முதல் 19/03/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

மனைவிமார்களும் புகுந்த இடத்தில் அனுசரித்து தான் செல்ல வேண்டும். பிறந்த வீட்டாரை போலவே புகுந்த வீட்டாரையும் அன்புடன் நடத்தலாம், ஆனால் அதே அன்பு பதிலுக்கு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடையும் பொழுது தான் பிரச்சனைகளும் உண்டாகிறது. எதிர்பாராமல் நீங்கள் செலுத்தும் அன்பு நீங்கள் எதிர் பார்ப்பதை அவர்களிடமிருந்து உங்களுக்கு எளிதாக பெற்று தரும். ஜாதகம் எப்படி இருந்தாலும், கணவன் மனைவிக்குள் இருக்கும் இந்த புரிதல் தான் அடங்கி இருக்க வேண்டுமா? அல்லது அடங்காப்பிடாரியாக இருக்க வேண்டுமா? என்பதை தீர்மானிக்கிறது.

- Advertisement -