நீங்கள் நினைக்கும் காரியம் நடக்காமல் தடைபட்டு வருவதற்கு காரணம் புரியவில்லையா? அப்படியென்றால் உடனே உங்கள் வீட்டில் செய்ய வேண்டிய மூன்று எளிய பரிகாரங்கள் இதோ உங்களுக்காக

vilakku-uppu-lakshmi
- Advertisement -

ஒரு சிலருக்கு நல்ல வருமானம் இருக்கும், வீட்டில் கணவன், மனைவி உறவும் சுமுகமாக இருக்கும், பிள்ளைகளும் பெற்றோர்களின் விருப்பப்படி நடந்து கொள்வார்கள், உறவினர்களிடமும் நல்ல சுமுகமான உறவு முறை இருந்து வரும், அக்கம் பக்கத்து வீட்டாரும் நல்ல முறையில் பழகி வருவார்கள், தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும், இவ்வாறு இனிமையான வாழ்க்கை இருந்த போதிலும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தை துவங்குவதாக இருந்தால் அது நினைக்கும் நேரத்தில் நடக்க முடியாமல் தடைபட்டுக் கொண்டிருக்கும். இதற்கு என்ன காரணம் என்று யோசித்தால் அதற்கு பதில் கிடைப்பதில்லை. இவ்வாறான பிரச்சனைகளுக்கான தீர்வை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

husbund-and-wife

இப்படி வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வித மகிழ்ச்சிகளும் வந்து கொண்டிருக்கும் பொழுது வாழ்க்கையை சற்று முன்னேற்றி செல்ல சில காரியங்களை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அவற்றை செய்ய முடியாத அளவிற்கு எங்கிருந்தோ பல தடைகள் உருவாகிக் கொண்டே வரும். இதற்கு காரணம் நமக்குப் புரியாத, கண்ணுக்கு தெரியாத கண் திருஷ்டியாக கூட இருக்கலாம்.

- Advertisement -

வீட்டில் ஐஸ்வர்யம் பெருகவும், லட்சுமி கடாட்சம் உண்டாகவும், கண் திருஷ்டி விலகவும் இந்த உப்பு பரிகாரத்தை செய்து வந்தாலே போதும். அதற்கு முதலில் ஒரு மண் உருளியில் கல் உப்பைக் நிறைத்துக்கொள்ள வேண்டும். அதன் மீது சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இந்த உப்பின் மீது பதினோரு மிளகுகளை அடுக்கி வைக்க வேண்டும். இதனை வீட்டின் வரவேற்பு அறையில் மற்றவர்கள் கண் படும் வகையில் எங்கு வேண்டுமானாலும் வைத்து விடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து காணப்படும்.

mahalakshmi

மகாலட்சுமியை தன்வசப்படுத்தும் சக்தி உப்பிற்கு இருக்கிறது. இந்த உப்பின் வசிய தன்மையை அதிகரிக்க சமையலறையில் இருக்கும் உப்பு ஜாடியில் உப்பை நிறைத்துக் கொண்டு, அதனுள் சிறிய துண்டு வசம்பை நுழைத்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வசம்பின் வசிய தன்மையால் உப்பின் நேர்மறை சக்தி அதிகரிக்கிறது. இதனால் வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறி எப்போதும் நேர்மறை அதிர்வுகள் மட்டுமே வீட்டில் நிறைந்து காணப்படும்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் சிறிதளவு உப்புடன் சிறிய துண்டு வசம்பு சேர்த்து ஒரு மஞ்சள் துணியில் கட்டிக் கொண்டு, அதனை வாசற்படியில் கட்டுவதன் மூலம் வீட்டிற்குள் நுழையாமல் இருக்கவும், ஸ்ரீதேவி எப்பொழுதும் நமது வீட்டிற்குள் நிரந்தரமாக வாசம் செய்வதற்கும் துணைபுரிகிறது.

uppu

வெள்ளிக்கிழமை தோறும் புதியதாக உப்பு வாங்கி வீட்டில் வைப்பது பலரின் வழக்கமாகும். அவ்வாறு வாங்கி வரும் உப்பினை ஒரு சிறிய கண்ணாடிக் குடுவையில் சிறிதளவு கொட்டிக் கொண்டு, அதனுள் ஐந்து ரூபாய் அல்லது ஒரு ரூபாய் நாணயத்தை புதைத்து வைக்க வேண்டும். அதன் பின்னர் வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி இறைவனை வணங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நமது மனதில் நினைக்கும் காரியத்திற்க்கு ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகிவிடும். அதுமட்டுமல்லாமல் வீட்டில் எப்பொழுதும் ஐஸ்வர்யம் பெருகிக் கொண்டே இருக்கும்.

- Advertisement -