நீங்கள் துரதிர்ஷ்டசாலிகள் என்ற தாழ்வு மனப்பான்மை உங்களுக்குள் உள்ளதா? வருடத்திற்கு 1 நாள் இப்படி குளித்தால் போதும். நீங்கள் தான் இந்த உலகத்தின் முதல் அதிர்ஷ்டசாலி.

bathing1
- Advertisement -

சில பேருக்கு தான் ஒரு துரதிர்ஷ்டசாலி என்ற எண்ணம் அவர்களுடைய மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும். காரணம், இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் எந்த ஒரு சந்தோஷத்தையும் அனுபவித்து இருக்க மாட்டார்கள். இந்த உலகத்தில் பிறந்ததற்கான அர்த்தமே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதாவது ‘நான் இந்த உலகத்துல் பிறந்ததே வேஸ்ட்ன்னு’ சொல்வாங்க இல்லயா. அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருவார்கள். அடுத்தவர்களும் இப்படிப்பட்டவர்களை பார்த்து துரதிர்ஷ்டசாலிகள், அதிர்ஷ்டம் கெட்டவர்கள், ராசி இல்லாதவர்கள் என்ற பட்டத்தை வாரி வழங்குவார்கள்.

வாழ்க்கையில் இப்படிப்பட்ட பிரச்சனை உங்களுக்கு இருந்தால், வருடத்தில் ஒரு சனிக்கிழமை இந்தக் குளியலை குளித்து பாருங்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கை, உடைய நிலமை மாறும். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த அரளிப்பூ குளியலைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

சனிக்கிழமை காலையில் எப்போதும் போல நீங்கள் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட வேண்டும். கடைக்கு சென்று செவ்வரளி பூவை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். சனிக்கிழமை அன்று இந்த பூவை காசு கொடுத்து வாங்க வேண்டும். சனிக்கிழமை அன்று இந்த பூ உங்களுக்கு கிடைக்காது என்பவர்கள், முன்கூட்டியே கூட வாங்கி பிரிட்ஜில் வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. அல்லது உங்கள் வீட்டின் அருகில் செவ்வரளி பூ செடி இருந்தால், சனிக்கிழமை அன்று அந்த செடியில் இருந்து பறித்துக் கொள்ளலாம்.

சனிக்கிழமை மதியம் தான் இந்த குளியல் பரிகாரத்தை செய்ய வேண்டும். குளிக்கின்ற தண்ணீரை பட்கெட்டில் தயார் செய்துவிட்டு, அரளிப்பூவை அந்த தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். சனிக்கிழமை அன்று மதியம் 1 மணிக்கு இந்தத் தண்ணீரில் நீங்கள் தலைக்கு குளிக்க வேண்டும். ஒரு மணிக்கு தலைக்கு குளிக்க வேண்டும் என்றால், 12.50 க்கு அல்லது 12.45 இந்த பூவை தண்ணீரில் போட்டுக் கொள்ளலாம். (பச்சைத் தண்ணீரில் இந்த குளியல் மேற்கொள்வது நல்லது. முடியாதவர்கள் உடல் நிலை சரியாக இல்லாதவர்கள், வெதுவெதுப்பான தண்ணீரிலும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.)

- Advertisement -

இந்தக் குளியல் நாம் பரிகாரத்திற்கு மேற்கொள்ளக்கூடிய குளியல். சோப்பு ஷாம்பு போட்டு எல்லாம் குளிக்க கூடாது. கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து இந்த தண்ணீரை தலையில் எடுத்து பூவுடன் ஊற்றிக் கொள்ளவேண்டும். குளித்து முடித்துவிட்டு வந்த பிறகு குளியலறையில் இருக்கும் பூவை எடுத்து சுத்தப்படுத்தி குப்பை கூடையில் போட்டுக் கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

வருடத்திற்கு ஒருமுறை அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை இந்தக் குளியலை குளித்து வந்தால் நாமும் அதிர்ஷ்டசாலிகள் ஆக மாறலாம். நம் வாழ்க்கையில் நல்லது நடக்கும். நாமும் அடுத்தவர்களுக்கு நல்லது செய்யலாம். நம்மைப் பார்த்து நாலு பேர், இவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லும் அளவிற்கு வாழ்ந்து காட்டலாம். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த சுலபமான பரிகாரங்களில் இதுவும் ஒன்று. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த குளியல் பரிகாரத்தை முயற்சி செய்து பார்த்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -