இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் டெஸ்ட் துவக்க ஆட்டக்காரராக இருந்தவர்கள் ராகுல், விஜய் மற்றும் பிரிதிவி ஷா ஆகியோர் இந்த தொடருக்காக தேர்ந்தெடுக்க பட்டார்கள். ஆனால், தொடர் துவங்குவதற்கு முன்பே காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து பிரிதிவி ஷா விலக நேர்ந்தது.
அதன் பிறகு பெர்த் மற்றும் அடிலெய்டு போன்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் ராகுல் சிறப்பாக விளையாட தவறினர். எனவே மீதமிருந்த 2 டெஸ்ட் போட்டிக்காக மாயங்க் அகர்வால் இந்திய அணிக்கு தேர்வானார். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை விளையாடியதால் அவர் இந்திய அணிக்கு தேர்வானார்.
இந்நிலையில் அகர்வால் அளித்த பேட்டியில் : இந்திய அணியில் இன்று பேட்ஸ்மேனாக இருப்பது என் வாழ்வில் ஏற்பட்ட விப்பதாகவே கருதுகிறேன். நான் சிறுவயதிலிருந்தே விமானத்தை ஓட்டும் பைலட்டாக வேண்டும் என்பது ஆசை. ஆனால், காலப்போக்கில் கிரிக்கெட் விளையாட துவங்கி கிரிக்கெட்டின் மீது அளவு கடந்த விருப்பம் ஏற்பட்டது. அதன் காரணமாக கிரிக்கெட் நன்றாக பயிற்சி செய்து விளையாடி இன்று இந்திய அணிக்காக விளையாடும் அளவிற்கு உயர்ந்துள்ளேன் என்று கூறினார்.
The Mayank Agarwal story
From fascination for aeroplanes to playing for India, @mayankcricket on his journey to earn the Test whites
▶️▶️https://t.co/EsPUUK0dCs #AUSvIND pic.twitter.com/5tYP4G9xIP
— BCCI (@BCCI) January 4, 2019
அகர்வால் இந்த தொடரில் தான் அறிமுகம் ஆனார். அதுவும் முதல் போட்டியே வெளிநாட்டு தொடர் அதிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் போட்டியில் முறையே 76,42 என அணிக்கு தேவையான துவக்கத்தினை கொடுத்து வெற்றிபெற வைத்தார். சிட்னி டெஸ்டிலும் முதல் இன்னிங்சில் 77 ரன்கள் அடித்து சதத்தை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே :
Cricket news Tamil | மெக்ராத் பவுண்டேஷனுக்கு தங்களது உதவியை செய்த இந்திய அணி
மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்