கண் திருஷ்டி விலக ஆகாச கருட கிழங்கு பரிகாரம்

kan thirustri
- Advertisement -

கண் திருஷ்டி என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்படக்கூடிய ஒன்றுதான். அதை நாம் முறையாக பரிகாரங்களை செய்து சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் குடும்பத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல், கஷ்டங்களும், கோபதாபங்களும், சண்டை சச்சரவுகளும் அதிகமாக நிலவும். இந்த கண் திருஷ்டியை நீக்குவதற்கு பல பரிகாரங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ஆகாச கருடன் கிழங்கு. இந்த கிழங்கை வாங்கி வாசலில் கட்டினால் கண் திருஷ்டி எதுவும் அண்டாது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த கிழங்கை எந்த நாளில் எப்படி வாங்கி கட்டினால் கண் திருஷ்டி விலகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கண் திருஷ்டி விலகுவதற்கு நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பல பொருட்களை நம் வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுவோம். கற்றாழை, படிகாரம், எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய் இப்படி கண் திருஷ்டியை போக்குவதற்கு பல பொருட்களை நாம் வாசலில் கட்டி விடுவோம். அவற்றுள் ஒன்றுதான் ஆகாச கருடன் கிழங்கு. ஆகாச கருட கிழங்கு என்பது ஒரு வகையான கிழங்கு.

- Advertisement -

இதை நாம் கயிற்றில் கட்டி நிலை வாசலில் கட்டும் பொழுது அதற்குரிய சக்தியால் வீட்டில் தீய சக்திகள் எதுவும் அண்டாது. கண் திருஷ்டிகள் அனைத்தும் விலகும் என்று கூறப்படுகிறது. இதை பலபேரும் வாங்கி தங்கள் இல்லங்களில் கட்டி இருக்கிறார்கள். அப்படி கட்டும்பொழுது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அந்த வழிமுறைகளை பின்பற்றினால் தான் முழுமையாக பலனை பெற முடியும்.

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான வழிமுறைகள் இருக்கிறது அல்லவா? அந்த வழிமுறைகளை தெரிந்து கொண்டு பின்பற்றினால் தான் நம்மால் முழுமையான பலனை பெற முடியும். அந்த வகையில் இந்த ஆகாச கருடன் கிழங்கை எப்படி வீட்டு வாசலில் கட்ட வேண்டும் என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்வோம். எந்த நாள் வேண்டுமானாலும் இந்த ஆகாச கருடன் கிழங்கை நாம் வாங்கி வரலாம். ஆனால் நிலை வாசலில் கட்ட வேண்டும் என்றால் அது அமாவாசை முடிந்த மூன்றாம் பிறையான வளர்பிறை அன்றுதான் வாசலில் கட்ட வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு கட்டுவதற்கு முன்பாக இந்த கிழங்கை மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு அந்த கிழங்கு முழுவதும் மஞ்சளை பூச வேண்டும். பிறகு 27 குங்கும பொட்டுகளை அந்த கிழங்கை சுற்றி வைக்க வேண்டும். இந்த வழிமுறைகளை செய்த பிறகு தான் வீட்டு வாசலில் இந்தக் கிழங்கை கட்டி தொங்கவிட வேண்டும். இப்படி செய்தால் மட்டும்தான் வீட்டில் இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தும் முழுமையாக விலகும். மேற்கொண்டு எந்த வித தீய சக்திகளும் வீட்டிற்குள் அண்டாது.

அது மட்டுமல்லாமல் அன்றாடம் நாம் பூஜை செய்யும் பொழுது இந்த கிழங்கிற்கும் ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம் என்று அனைத்தையும் காட்டி தெய்வத்திற்கு இணையாக பாவித்து வணங்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: காலியாக இருக்கும் வீடு, கடைக்கு ஆட்கள் வர பரிகாரம்

ஆகாச கருட கிழங்கை பார்த்தோம், வாங்கினோம், கட்டினோம் என்று இல்லாமல் அதற்குரிய வழிமுறைகளை முறையாக பின்பற்றினால் கண்டிப்பான முறையில் அதற்குரிய பலனை நம்மால் அடைய முடியும்.

- Advertisement -