நினைத்தது நடக்க அகஸ்தியர் மந்திரம்

suriyan agasthiyar manthiram
- Advertisement -

ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்க்கையில் பல விதமான கனவுகள் லட்சியங்கள் எதிர்பார்ப்புகள் வைத்திருப்பார்கள். அது நிறைவேற வேண்டும் என்று தான் அனுதினமும் ஆசைப்படுவார்கள். அதன் வெளிப்பாடு தான் ஆலயம் செல்வது வழிபாடுகளை மேற் கொள்வது. ஏன் தினம் தினம் நாம் பாடுபட்டு உழைப்பதும் கூட நம்முடைய கனவு லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ளத் தானே.

நம்முடைய கனவுகளையும் லட்சியங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள உதவும் என்கிற நம்பிக்கையில் தானே ஒவ்வொருவரும் இறைவனை நம்பி செயகிறோம். நாம் நினைத்தவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் அற்புதமான மந்திர வழிபாடுகளும் உள்ளது. அவற்றில் ஒரு மந்திர முறையை பற்றி தான் மந்திரம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

நினைத்தது நடக்க அகத்தியர் மந்திரம்

நம்முடைய வழிபாட்டு முறைகளில் எப்போதுமே மந்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. எந்த ஒரு வேண்டுதலையும் நாமாக மனதில் நினைத்து சொல்வதை காட்டிலும் மந்திரங்களின் வாயிலாக சொல்லும் போது அதற்கென தனி பலன் உண்டு. அதே போல தான் நாம் வழிபடும் நாட்களும். இதனால் தான் தெய்வ வழிபாடுகளை கூட குறிப்பிட்ட நாள் திதிகளில் செய்கிறோம்.

அந்த வகையில் இன்று வளர்பிறை சப்தமி திதி. சப்தமி என்றால் ஏழு என்று அர்த்தம். அமாவாசை பௌர்ணமி தினங்களுக்கு அடுத்து ஏழாவது நாள் இந்த சப்தமி திதி வரும். இந்த திதியானது சூரிய பகவானுக்கு உகந்ததாக சொல்லப்படுகிறது. இன்றைய நாளில் சூரிய பகவானை நாம் வழிபடும்போது நம்முடைய எண்ணங்கள் பூர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

அத்துடன் அகத்தியர் நமக்கு அருளிய அற்புதமான இந்த மந்திரத்தை சொல்லலாம்.இந்த வழிபாடு செய்வதற்கு நாளை தினம் காலை மாலை என உங்களுக்கு உகந்த நேரத்தில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ராகு காலம், எமகண்டம் மற்றும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த மந்திர வழிபாட்டை செய்வதற்கு உங்கள் வீட்டில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த தீபத்திற்கு முன்பாக ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் வடக்கு நோக்கி அமருங்கள் தீபம் கிழக்கு நோக்கி எரியட்டும். கண்களை மூடி மனதார உங்களுடைய வேண்டுதல் எதுவோ அது நிறைவேற வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள். அடுத்து கீழ் வரும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

ஓம் ஸ்ரீ அகஸ்திராய நமஹ

என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். இந்த மந்திர வழிபாட்டை முடித்த பிறகு உங்கள் அருகில் இருக்கும் தண்ணீரை பிரசாதமாக நீங்களும் உங்கள் வீட்டில் இருப்பார்வகளும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: கெட்ட சக்திகள் விலகி ஓட அனுமன் மந்திரம்

வாழ்க்கையில் நீங்கள் நினைத்தவை யாவும் நிறைவேறவும், வெற்றி மேல் வெற்றி பெறவும் இந்த மந்திர வழிபாடு துணை புரியும் என்று சொல்லப்படுகிறது நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -