ஞாயிறு அன்று இந்த கீரையை தானம் செய்தால் உங்கள் வாழ்வில் நடக்கும் அதிசயத்தை நீங்களும் தெரிஞ்சிக்கணுமா?

agathi-keerai-navagragam
- Advertisement -

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். ஒருவருக்கு இருக்கும் பிரச்சனை மற்றொருவருக்கு இருப்பதில்லை. ஏதோ உலகத்தில் நாம் தான் கஷ்டப்படுகிறோம். மற்றவர்கள் எல்லாம் நன்றாக தான் இருக்கிறார்கள் என்ற எண்ணமே தவறானது. மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை நிச்சயம் இருக்கும். அது வெளியில் இருக்கும் மூன்றாவது மனிதர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை அவ்வளவுதான். அன்றாட பிரச்சினைகளை சந்திக்கும் உங்களுக்கு சில எளிய பரிகாரம் நிச்சயம் நிவாரணமளிக்கும். ஒரு மனிதனுக்கு பிரச்சனை வருவது நவகிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் இருக்கும் நிலைப்பாடு தான் காரணமாக இருக்கும்.

navagragam

அந்த நவகிரகங்கள் உண்டாக்கக்கூடிய கெடு பலன்களிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள நம் வீட்டில் சாதாரணமாக இந்த வழக்கத்தை கடைப்பிடித்து வந்தாலே போதும். பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நாம் அப்படி என்ன செய்ய வேண்டும்? தோஷங்கள் நீங்க என்ன பரிகாரம் செய்தால் போதுமானது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

உங்களுக்கு ஒரு கஷ்டம் வருகிறது என்றால் அதற்கு நிச்சயம் நவகிரகங்கள் காரணமாக இருக்கும். ஒன்பது கோள்களின் வேலையே நமக்குத் தொல்லை கொடுப்பது தான் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நேரம் நன்றாக இருந்தால் நல்ல பலன்களையும், நன்றாக இல்லை என்றால் கெடு பலன்களையும் தந்து பாடாய் படுத்தி எடுத்துவிடும். இதற்கு நம் அன்றாட வாழ்வில் சில விஷயங்களை கடைப்பிடித்தாலே முக்கால்வாசி பிரச்சினைகளை தடுத்து நிறுத்தியது போல் தான் அர்த்தம்.

vilakku

ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு தனி சிறப்புகள் உண்டு. அதில் முக்கியமாக செவ்வாய், வெள்ளி, ஞாயிறு இந்த கிழமைகள் பரிகாரத்திற்கு உகந்த கிழமைகளாக பார்க்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு விளக்கு ஏற்றி வழிபடுவது நன்மை தரும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அந்த நாட்களில் பெரும்பாலான வீடுகளில் சாம்பார் தான் வைப்பார்கள். அதற்கு என்ன காரணம் தெரியுமா? செவ்வாய், வெள்ளி கிழமைகளில் சாம்பார் வைப்பது தோஷத்தை நீக்கும். துவரம் பருப்பு நவகிரக தோஷத்தை குறைக்கும் ஆற்றல் பெற்றது. இதனால் இந்த கிழமைகளில் துவரம் பருப்பு கொண்டு சமைத்து சாப்பிட்டால் நமக்கு தோஷ நிவர்த்தி கிடைக்கும்.

- Advertisement -

அதேபோல் வெள்ளிக்கிழமையில் பைரவருக்கு உகந்த மொச்சைக் கொட்டையை சமையலில் பயன்படுத்தினால் எந்த விதமான கஷ்டங்கள் உங்களுக்கு இருந்தாலும் அதிலிருந்து மிகப் பெரிய பிரச்சினைகள் உருவாவதை தடுத்துக் கொள்ள முடியும். இதெல்லாம் சூட்சம குறிப்புகளாக அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை இருந்து வருகிறது. அதனால் வெள்ளிக்கிழமை அன்று மொச்சை பயறை சமையலில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக கொள்ளுங்கள்.

mochai

நமக்கு பிரச்சனை வருவது நவகிரகங்கள் மட்டும் காரணம் அல்ல. வேறு ஒரு முக்கிய காரணமும் உண்டு. அதுதான் பித்ரு தோஷம் என்பார்கள். நம் முன்னோர்களுக்கு நம் மீது ஏதாவது குறை இருந்தால் வீட்டில் நிச்சயம் பிரச்சனைகள் இருக்கும். பித்ரு பரிகாரங்களை முறைப்படி நீங்கள் செய்ய தவறினால் உங்கள் வாழ்வில் அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒரு பிரச்சனை முடிந்தால் அடுத்த பிரச்சனை தயாராக நிற்கும். இதற்கு பித்ரு தோஷம் காரணமாக இருக்கலாம். இந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய ஞாயிற்றுக்கிழமைகளில் அகத்திக்கீரையை பசுமாட்டிற்கு தானம் செய்து வாருங்கள்.

- Advertisement -

agathi-keerai-dhanam

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்று காலையிலேயே பசுமாட்டிற்கு அகத்திக் கீரையை கொடுத்து விடுங்கள். இது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் இதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் ஏராளமானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஞாயிறு அன்று நீங்கள் பசு மாட்டிற்கு தானம் கொடுக்க முடியவில்லை என்றால் திங்கள் கிழமை கொடுக்கலாம் தவறில்லை. ஆனால் வாரம் ஒரு முறை இது போல் அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு தானம் கொடுப்பதால் குடும்பத்தில் இதுவரை எதிர்பாராத மாற்றங்கள் நிகழும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த பரிகாரமாக இந்த பரிகாரம் சாஸ்திர குறிப்புகள் கூறுகின்றன. இதற்காக சனிக்கிழமை அன்றே நீங்கள் அகத்திக்கீரையை வாங்கி வைத்து விடுவது நல்லது. ஒரு முறை முயற்சி செய்து தான் பாருங்கள். உங்கள் வாழ்க்கையிலும் மாற்றம் கட்டாயம் நிகழும்.

இதையும் படிக்கலாமே
ஆடி மாதம், தினம்தோறும் அம்மன் வழிபாட்டை இந்த முறையில் செய்து பாருங்கள்! எப்படிப்பட்ட கஷ்டத்திற்கும் கட்டாயம் ஒரு தீர்வு கிடைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -