நவகிரகங்களின் அருளை பெற உதவும் பரிகாரம்

navagraham
- Advertisement -

பிறப்பு முதல் இறப்பு வரை ஒருவருக்கு நடக்கக்கூடிய நன்மைகளையும் தீமைகளையும் கணிப்பது ஜாதகம் ஆகும். அந்த ஜாதகம் நவகிரகங்களின் அடிப்படையில் தான் கணிக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. அப்படிப்பட்ட நவக்கிரகங்கள் ஒருவருக்கு நன்மையை செய்யும் பொழுது அவர்களின் வாழ்க்கையில் நன்மைகள் ஏற்படும். தீமையை செய்யும் போது தீமைகள் ஏற்படும் என்பதும் அறிந்ததே. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நவகிரகங்களின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

நவகிரகங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சக்திகள் இருக்கின்றன. ஒரு கிரகத்தின் அருள் பரிபூரணமாக ஒருவருக்கு கிடைக்கும்பொழுது அந்த கிரகத்தால் ஏற்படக்கூடிய நன்மைகள் அனைத்தையும் அவர் அனுபவிப்பார். அதேபோல் தான் ஒவ்வொரு கிரகத்தின் அருளையும் நாம் பரிபூரணமாக பெற்றால் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளையும் நம்மால் பெற முடியும்.

- Advertisement -

இதற்கு மிகவும் எளிமையான முறையில் ஒரு பரிகாரத்தை நாம் மேற்கொள்ளலாம். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு கொட்டாங்குச்சி தேவைப்படும். இது தேங்காயிலிருந்து பெறப்படுகிறது என்பது நமக்கு தெரியும். தேங்காய் மிகவும் உன்னதமான ஒரு பொருளாக நம்முடைய ஆன்மீகத்தில் கருதப்படுகிறது. தேங்காய் இல்லாத பூஜைகளோ யாகங்களோ கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் அற்புதமான தன்மை கொண்ட தேங்காயை அனைத்து தெய்வங்களுக்கும் நாம் நெய்வேத்தியமாக படைக்கிறோம்.

இந்த தேங்காயிலிருந்து பெறப்படும் சிரட்டை என்று சொல்லக்கூடிய கொட்டாங்குச்சியை வைத்து தான் நவகிரகங்களின் அருளையும் நாம் பெறப் போகிறோம். இந்த கொட்டாங்குச்சியில் நவகிரகங்களின் அருளை பெறுவதற்காக நவ தானியங்களை போட வேண்டும். பிறகு அதன் மேல் 108 கிராம்பை வைக்க வேண்டும். இவ்வாறு நாம் வைக்கும் பொழுது அந்த கிராம்பு நவகிரகங்களின் அருளை ஈர்த்து நமக்கு தரும்.

- Advertisement -

இந்த சிரட்டையை நாம் நம் வீட்டின் பூஜையறையிலும் வைக்கலாம் அல்லது ஹாலிலும் வைக்கலாம். இதை மாதத்திற்கு ஒருமுறை மாற்றினாலே போதும். பழைய நவதானியங்களையும் கிராம்பையும் கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதிதாக வாங்கி வைக்க வேண்டும். கிராம்பிற்கு ஒருவித ஈர்ப்பு சக்தி இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கிராம்பை நாம் எந்த பொருளுடன் சேர்த்து வைக்கிறமோ அந்த பொருள் பன்மடங்கு நமக்கு பெருகும் என்பதால் தான் பணத்துடனும் நகையுடனும் கிராம்பை நாம் சேர்த்து வைக்கிறோம்.

அப்படிப்பட்ட ஆகர்சன சக்தியை கொண்ட கிராம்பை நவதானியங்களில் நாம் வைக்கும் பொழுது நவகிரகங்களின் பரிபூரணமான அருளை கிராம்பு நமக்கு பெற்றுத் தரும். மேலும் நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்தும் அது நம்மை விலக்கி வைக்கும்.

இதையும் படிக்கலாமே: நம்மையும் நம் வீட்டையும் தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்ற இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் போதும்.

இந்த எளிமையான பரிகாரத்தை நாம் நம்முடைய வீட்டில் நவகிரகங்களின் அருளை பரிபூரணமாக பெற வேண்டும் என்ற முழு நம்பிக்கையுடன் செய்தால் கண்டிப்பான முறையில் நவகிரகங்களின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -