ஆலமரம் போல உங்கள் தொழிலும் பிரம்மாண்டமாக விரிவடைந்து லாபத்தை பெற வேண்டுமா? இந்த 4 தவறை மட்டும் நீங்கள் செய்யவே கூடாது.

cash2
- Advertisement -

சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், தொழிலை ஆரம்பிப்பதற்கு முன்பு முதலில் செய்யவே கூடாதா தவறு என்னென்ன என்பதைப் பற்றியும், தொடங்கிய தொழிலை லாபகரமாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல செய்யக்கூடிய தாந்த்ரீக பரிகாரத்தை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நமக்கு எந்த அளவுக்கு வேகம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.

சரி நீங்கள் புதியதாக தொழில் தொடங்க போறீங்க. இந்த நான்கு தவறுகளை செய்யாதீங்க. (1) ஆர்வக்கோளாறின் மூலமாக அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து சொந்த தொழிலை தொடங்கக்கூடாது. (2) அடுத்தவன் இந்த தொழிலை செய்து பணக்காரனாகி விட்டான். அதே தொழிலை நான் செய்து பணக்காரன் ஆகிவிடுவேன் என்றும் முட்டாள்தனமாக யோசித்து, அடுத்தவன் செய்து கொண்டிருக்கும் அந்த தொழிலை நாம் தொடங்கக்கூடாது.

- Advertisement -

(3) சில பேர் வாய்சவடால் விட்டுக் கொண்டே இருப்பார்கள். என்னிடம் சூப்பர் ஐடியா இருக்கு இது ஒர்க் அவுட் ஆச்சுன்னா நான் பெரிய தொழிலதிபர் ஆயிடுவேன். என்னவளே வேற அப்படின்னு பேச்சில் கர்வத்தை காட்டுவார்கள். ஆனால் அந்த ஐடியாவை செயல்படுத்தும் அளவுக்கு உங்களுக்கு திறமையும் தகுதியும் இருக்கா என்பதையும் நீங்கள் சிந்திக்க வேண்டும். (4) எனக்கு ஒரு சப்போர்ட் இருந்திருந்தால், என் அப்பா எனக்கு இவ்வளவு பணம் தந்திருந்தால் நான் தொழில் தொடங்கி முன்னேறி இருப்பேன். என்னிடம் முதலீடு செய்ய பணம் இல்லை என்ற பேச்சை நீங்கள் பேசக்கூடாது. உங்களிடம் எது அதிகமாக இருக்கிறது, அதை முதலீட்டாக போட்டு தொழிலை ஆரம்பியுங்கள். உழைப்பு, அறிவு, திறமை, விடா முயற்சி, இவை அனைத்துமே தொழிலுக்கு தேவையான முதலீடு தான். என்னங்க இதையெல்லாம் சரின்னு பட்டா நீங்க பின்பற்றலாம்.

அடுத்து தாந்திரிக ரீதியான பரிகாரத்திற்கு வருவோம். ஆலமரம் போல் உங்களுடைய தொழில் விரிவடைய வேண்டும் என்றால் உங்களுக்கு ஆலமர விழுதும், ஆலமர மண்ணும் தேவை. ஆலமரத்துக்கு அடியில் இருக்கும் மண்ணை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். ஆலமர விழுதிலிருந்து ஒரு சிறிய துண்டை கிள்ளி எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டிற்கு கொண்டு வந்து ஒரு மஞ்சள் துணியில் ஆலமர மண்ணை வைத்து, அதில் ஆள விழுதை வைத்து அதில் கொஞ்சமாக மஞ்சள் தூள் போட்டு சிறிய முடிச்சாக கட்டி பூஜை அறையில் வைத்து குல தெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யக்கூடிய தொழில் ஓஹோவென செல்ல வேண்டும் என்று. (எந்தக் கிழமையில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.)

- Advertisement -

இந்த முடிச்சை கொண்டு போய் அப்படியே தொழில் செய்யும் இடத்தில் வைத்து விடுங்கள். நிச்சயமாக உங்கள் தொழிலில் இருக்கக்கூடிய முடக்கத்தை சரி செய்து நிறைய லாபத்தை ஈட்டி தரக்கூடிய வேலையை இந்த ஆலமர பரிகாரம் பார்த்துக் கொள்ளும். (மளிகை கடை வைத்திருப்பவர்கள், டைலர் தொழில் செய்பவர்கள், பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள், தள்ளுவண்டி கடையில் தொழில் செய்பவர்கள் முதல், பெரிய தொழிற்சாலை அலுவலகம் நடத்துபவர்கள் வரை இந்த பரிகாரத்தை செய்யலாம்.)

உங்கள் தொழில் முன்னேறுவதற்கு என்ன முயற்சிகள் எடுக்க வேண்டுமோ அதை நீங்கள் தொடர்ந்து செய்து வரும்போது, இந்த பரிகாரம் உங்களுக்கு பல மடங்கு பலனை கொடுக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: சமையலறையில் இந்த தவறுகள் அடிக்கடி நடந்தால், உங்கள் குடும்பத்திற்கு ஏதோ ஒரு பணக்கஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம்.

இந்த முடிச்சுக்கு உள்ளே இருக்கும் மண்ணை வருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும். ஆலமரத்தை அடியிலிருந்து மண்ணை எடுக்கும் போது கொஞ்சம் மேலே இருக்கும் மண்ணை நகர்த்தி விட்டு, கீழ்ப்பக்கமாக இருக்கக்கூடிய மண்ணாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் காலடிபட்ட மண், எச்சில் துப்பியம்மன், சிறுநீர் கழித்த மண் என்று பரிகாரத்துக்கு பயன்படுத்துவது சரியாக இருக்காது. ஆலமரத்தை சுற்றி இருக்கக்கூடிய மண்ணில் ஒரு நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். அதை தான் நாம் பரிகாரத்திற்கு பயன்படுத்துகிறோம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை தயவு செய்து கொள்வோம்.

- Advertisement -