அனைத்து தோஷ பரிகாரங்கள்

All dosha pariharam in Tamil
- Advertisement -

ஒருவரின் ஜாதகத்தில் அவர் முற்பிறவியிலோ அல்லது இப்பிறவியிலோ செய்கின்ற செயல்களைப் பொறுத்து அவருக்கு தோஷங்கள் ஏற்படக்கூடும் என ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக ஒருவருக்கு தோஷங்கள் ஏன் ஏற்படுகின்றது? ஜோதிடத்தில் கூறப்படுகின்ற தோஷங்கள் என்னென்ன? அந்த தோஷங்களுக்குரிய தோஷ பரிகாரங்கள் என்ன? என்பது குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

வஞ்சித தோஷம்

வஞ்சித தோஷம் என்பது உடலின்பம் தொடர்பான படங்கள், புத்தகங்களை படிப்பதாலும், ஏதாவது ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ நினைத்து மனதில் தவறான எண்ணத்தை கொண்டிருப்பதாலும், எந்நேரமும் காம சிந்தனைகளில் மூழ்கி இருப்பதாலும், உடல் நரம்புகளில் அதிக சூடு ஏற்பட்டு, பல வகையான வியாதிகள் உருவாக வழி வகுக்கும் தோஷமே வஞ்சித தோஷம் எனப்படுகிறது. இந்த வஞ்சித தோஷம் இருப்பவர்கள் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் தனது உடன் பிறந்த சகோதரிகளுக்கு தேவையான உதவிகளை செய்து, அவர்களை வணங்கி ஆசிகளை பெற வேண்டும். உடன் பிறந்த சகோதரிகள் இல்லாதவர்கள் ஏழைப் பெண்களுக்கு உதவிகளை செய்து, அவர்களின் ஆசிகளை பெற வேண்டும். பெண்களாக இருக்கும் பட்சத்தில் தங்களின் உடன்பிறந்த சகோதரர்களின் ஆசிகளை பெற வேண்டும். சகோதரர்களே இல்லாதவர்கள் ஏழைகள், மாற்றுத்திறனாளி ஆண்களுக்கு உதவிகளை செய்து அவர்களின் ஆசியைப் பெற வேண்டும்.

- Advertisement -

பந்த தோஷம்

பந்த தோஷம் என்பது நமது நெருக்கமான மற்றும் தூரத்து உறவுகளுக்கு நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்கின்ற துரோகத்தாலும், அத்தகைய உறவுகளை அவமரியாதை செய்வதாலும் நமக்கு ஏற்படுகின்ற ஒரு தோஷம் ஆகும். இந்த பந்து தோஷம் நீங்க நமது நெருக்கமான அத்தை, மாமா, பெரியப்பா, சித்தப்பா போன்ற உறவினர்களுக்கு பிறந்த பெண் / ஆண் குழந்தைகளுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்வதும் தானங்களை செய்வதாலும் இந்த பந்த தோஷம் விலகி வாழ்வில் நன்மையான பலன்கள் ஏற்படும்.

கல்பித தோஷம்

தன்னை விரும்பாத ஒரு நபரை கட்டாயப்படுத்தி மிரட்டி, தன்னை விரும்ப வற்புறுத்துவதாலும், தவறான உறவுமுறை என தெரிந்தும் அவர்கள் மீது விருப்பம் கொண்டு பழகுவதாலும் ஒருவருக்கு கல்பித தோஷம் ஏற்படுகிறது. கல்பித தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்களாக இருப்பின் தங்களை விட வயதில் மூத்த பெண்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்து, அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும். கல்பித தோஷத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களை விட வயதில் மூத்த ஆண்களின் ஆசிகளை பெறுவதால் கற்பித்த தோஷம் நீங்கும்.

- Advertisement -

வந்தூலக தோஷம்

இந்த வந்து உலக தோஷம் என்பது பெரும்பாலும் ஆண்களை பீடிக்கின்ற ஒரு தோஷம் ஆகும். காரணம் நமது இந்திய நாட்டின் கலாச்சார வழக்கப்படி திருமணம் செய்து கொள்ள இருக்கின்ற ஆண் மற்றும் பெண்களாகிய இருவரில் பெண்ணின் வயது ஆணின் வயதை விட குறைவாக இருக்க வேண்டும் என்பது சாஸ்திரங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதே நேரம் ஆணின் வயதை காட்டிலும் அதிகம் உள்ள பெண்ணை ஆண் மணப்பதை தவிர்க்க வேண்டும் என அதே சாஸ்திரங்கள் திட்ட வட்டமாக வலியுறுத்துகின்றன. எனினும் ஒரு சில ஆண்கள் தங்களை விட வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இப்படி வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்து அதனால் இந்த வந்தூலக தோஷம் பீடித்த ஆண்கள் வயதான தம்பதிகளுக்கு தங்களால் என்ற தான, தர்மங்களை செய்வதன் மூலம் வந்தூலக தோஷம் நீங்கும் என சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.

இதையும் படிக்கலாமே: செவ்வாய் தோஷம் பரிகாரம் கோயில்

பிரணகால தோஷம்

தற்காலத்தில் பலருக்கும் இந்த பிரணகால தோஷம் ஏற்படுவதாக ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் திருமண வயதை அடைந்த பெண் அல்லது ஆண் ஜாதகத்தை கொண்டு திருமண பொருத்தம் பார்க்காமல் அவரின் செல்வம், புகழ், அழகு, பதவி போன்றவற்றை மட்டுமே பார்த்து திருமணம் செய்பவர்களுக்கு, இந்த பிரணகால தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் ஏற்படுகின்ற நபர்கள், அவர்களது திருமண வாழ்வில் பல வித சங்கடங்களை சந்திப்பதும், மனதளவில் விரக்தி நிலையில் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகின்றது. இந்த பிரணக்கால தோஷம் ( All dosha pariharam in Tamil ) நீங்க விரும்புபவர்கள் ஆதரவற்றோர் இல்லங்களில் வாழ்கின்ற பெண்களுக்கு தங்களால் இயன்ற தானங்களை செய்வதால் இந்த தோஷத்தின் பாதிப்பு நீங்கி வாழ்க்கை சிறக்கும்.

- Advertisement -