அம்மாவின் வடிவாக அருளும் ஸ்ரீ சாயி – சாய் பாபா பாடல்

Sai baba
- Advertisement -

அம்மாவின் வடிவாக அருளும் ஸ்ரீ சாயி என்று தொடங்கும் அற்புதமான சாய் பாபா பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த பாடல் வரிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அன்னையும் இறைவனும் ஒன்று எந்த தத்துவத்தை சொல்லும் இந்த பாடல் நிச்சயம் சாய் பக்தர்களுக்கு பிடிக்கும். சாய் பாவின் அருளை பெறுவோம், பேரின்ப கடலில் திழைப்போம்.

சாய் பாபா பாடல் வரிகள்:
அம்மாவின் வடிவாக அருளும் ஸ்ரீ சாயி
கருவாக்கி வைத்தென்னை தாங்கிய ஸ்ரீ சாயி
உயிராய் உணர்வாய் எனை உன்னுள் நிறைவாய்
உடலும் மனமும் அறிவும் தந்த சீரடி சாயி
சரணம் சரணம் சீரடி சாயி
அபயம் அபயம் துவாரகா மாயி

- Advertisement -

கர்மவினை தொடர்ந்ததனால் ஜனன பந்தம் தந்து
உன் கருவறையில் வைத்தவனே ஸ்ரீ குரு சாயி
அம்மா உன் மடிமீது நாள் தோறுமே
நான் கண்ட பேரின்பம் இது போதுமே
ஆயிரம் ஜென்மத்து வசனம் விட்டேன்
பூரணம் தரும் சாயி
அரவணைத்து அருள வேண்டும் ஸ்ரீ குரு சாயி
அரவணைத்து அருள வேண்டும் சீரடி சாயி
சரணம் சரணம் சீரடி சாயி
அபயம் அபயம் துவாரகா மாயி

எங்கிருந்தோ எனை எடுத்து உயிர் அமுதம் ஊட்டி
உன் கருணை என்னும் பால் கொடுத்த தாயே குருநாதா
அம்மா உன் மகனுக்கு எது வேண்டுமோ
அந்தந்த காலத்தில் தந்தாயே நீ
காத்திடும் அம்மா காலடி கிடந்தேன் ஆனந்த இது சாயி
மகனெனக்கு போதும் இந்த பேரருள் சாயி
உன் மகனெனக்கு போதும் இந்த பேரருள் சாயி
சரணம் சரணம் சீரடி சாயி
அபயம் அபயம் துவாரகா மாயி

- Advertisement -

இதையும் பார்க்கலாமே:
சாயி சரணம் பாபா சரணம் – சாய் பாபா பாடல்

இது போன்று மேலும் பல சாய் பாபா பாடல்கள் மற்றும் சாய் பாபா பாடல் வரிகள் பலவும் அறிந்திட தெய்வீகம் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

- Advertisement -