தலைமுடி 2 மடங்கு அதிகரிக்கவும், நரைமுடி கருமையாக மாறவும் இந்த ஒரு எண்ணெய் போதும். வெறும் மூன்றே மாதத்தில் உங்கள் தலையில் கொத்துக்கொத்தாக முடி இருக்கும்.

hair growth tips tamil
- Advertisement -

இக்காலத்தில் தலை முடி பிரச்சனை இல்லாதவர்களை காண்பதே அரிதாகி விட்டது. அந்த அளவிற்கு எல்லோருக்கும் முடி கொட்டுவது அல்லது முடி நரைப்பது இப்படி ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துகொண்டே இருக்கிறது. இதற்காக நாம் பலவிதமான கெமிக்கல் நிறைந்த எண்ணெயை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் மீதம் இருக்கும் முடியும் அதானால் கொட்டுமே தவிர நமது பிரச்சனை சரியாகியபாடு இருக்காது. இந்த தலைமுடி பிரச்சனைக்கு சிறந்த ஒரு தீர்வாக இருக்கிறது விளக்கெண்ணெய். இதை எப்படி பயன்படுத்தினால் தலைமுடி பிரச்சனை தீரும் என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் பார்ப்போம்.

ஆமணனுக்கு விதைகளில் இருந்து கிடைக்கப்பதே விளக்கெண்ணெய். இதை ஆமணக்கு எண்ணெய் என்றும் கூறுவதுண்டு. சற்று கெட்டியாக இருக்கும் இந்த எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையும் கொண்டதாக இருக்கும். ஆனால் தலைமுடிக்கு இது அவ்வளவு நல்லது. நமது தலையில் ரத்தஓட்டத்தை அதிகப்படுத்தி முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய சக்தி இதற்க்கு உண்டு.

- Advertisement -

முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெ பயன்படுத்தும் முறை:
விளக்கெண்ணெயை அப்படியே பயன்படுத்துவதற்கு பதிலாக அதனுடன் தேங்காய் எண்ணெய் அல்லது வேப்பெண்ணை சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் நல்ல பயனை பெற முடியும். விளக்கெண்ணெயை தலையில் தேய்த்துக்கொண்டு நாம் வெளியில் எங்கும் செல்ல முடியாது. காரணம் அதில் பிசுபிசுப்பு தன்மை அதிகம். ஆகையால் அதை குளிப்பதற்கு முன்பு பயன்படுத்தலாம்.

முதலில் நமது தலைக்கு தேவையான அளவு விளக்கெண்ணெய் எடுத்துக்கொண்டு அதில் 2 துளிகள் வேப்பெண்ணை சேர்த்து தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அரைமணி நேரம் ஒரு சூடான துணியை கொண்டு உங்கள் தலைமுடியை மூடி வைத்துவிட்டு பிறகு குளிக்கலாம்.

- Advertisement -

அடுத்தபடியாக விளக்கெண்ணை மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெயை சம அளவில் எடுத்துக்கொண்டு அதை தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து அரைமணிநேரம் ஊறவிட்டு குளிக்கலாம். இப்படி விக்கெண்ணையோடு தேங்காய் எண்ணெய் அல்லது வேப்பெண்ணை சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வர தலைமுடி வளர்ச்சி அதிகரிக்க துவங்கும்.

இதையும் படிக்கலாமே: இனி முடி வளரவே வளராதுன்னு முடிவு செய்தவர்கள் கற்றாழையை வாரத்தில் இரண்டு முறை மட்டும் இப்படி ட்ரை பண்ணி பாருங்க.

நரைமுடி நீங்க விளக்கெண்ணெய்:
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் 5 மிளகு எடுத்துக்கொண்டு அதை நன்கு பொடியாகி, அதில் 300 மில்லி விளக்கெண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும். வார விடுமுறை நாட்களில் இந்த எண்ணெயை தலைக்கு தடவி நாள் முழுக்க விட்டு குளிக்க வேண்டும். நீங்கள் தினமும் தலைக்கு குளிப்பவர் என்றால் இரவில் கூட இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தூங்குவதற்கு முன்பு தலைக்கு தேய்த்துவிட்டு அடுத்தநாள் காலை தலைக்கு குளிக்கலாம். இதன் மூலம் இளநரையானது நீங்கும்.

- Advertisement -