பூஜை அறையில் அம்மன் படத்திற்கு முன்பு கட்டாயம் வைக்க வேண்டிய பொருட்கள். இதை செய்தாலே போதும் வீட்டில் சுபகாரிய தடை விலகும்.

amman-vilaku
- Advertisement -

வீட்டில் சுபகாரிய தடை உள்ளது. வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைக்கு திருமணம் நடக்கவில்லை. ஆண் பிள்ளைக்கு திருமணம் நடக்கவில்லை. திருமண வயதை கடந்தும் நல்ல வரன் அமையாமல் தட்டிக் கழித்துக் கொண்டே செல்கிறது என்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். திருமணம் நடந்து கணவன் மனைவிக்குள் சண்டை நிம்மதியான இல்லற வாழ்க்கை இல்லை என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். குழந்தை பாக்கியம் இல்லை என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நல்லதொரு பலன் கிடைக்கும். பொதுவாகவே ஒரு வீடு என்று இருந்தால் அந்த வீட்டு பூஜை அறையில் நிச்சயமாக அம்மனின் திருவுருவப்படம் இருக்கும்.

எந்த அம்மனின் திருவுருவப்படம் இருந்தாலும் பரவாயில்லை. அந்த அம்மனின் திரு உருவப்படத்திற்கு முன்பு இந்த பொருட்களை வைக்க வேண்டும். உங்களுடைய வீட்டில் அம்மன் படமே இல்லை என்றாலும் நிச்சயமாக லட்சுமி தேவியின் படம் இருக்கும். அந்த படத்திற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு சிறிய தாம்பூல தட்டில் மஞ்சள் கயிறு, அதாவது மஞ்சள் கொம்பு கட்டி தாலு கயிறு  இருக்கும் அல்லவா அது 1, நான்கு கண்ணாடி வளையல்கள், இதனுடன் மஞ்சள் குங்குமம் வைத்து அப்படியே அம்மனின் பாதங்களின் முன்பு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

- Advertisement -

அம்மனின் பாதங்களில் இந்த பொருட்கள் எல்லாம் ஒரு சேர இருக்க இதன் மேலே ஒரு பூவையும் வைத்து விடுங்கள். அதன் பின்பு ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு தினந்தோறும் அம்மனை மனதார வழிபாடு செய்து வரும் போது வீட்டில் இருக்கக்கூடிய சுப காரியத்தடை விலகும். திருமணமான சுமங்கலி பெண்கள் தினம் தோறும் இந்த மேல் சொன்ன வழிபாடு செய்தால் தீர்க்க சுமங்கலி பிரார்த்தம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை இந்த தட்டில் இருக்கக்கூடிய பொருட்களை எல்லாம் மாற்ற வேண்டும். அதாவது வளையல்களை எடுத்து யாருக்காவது தானம் கொடுக்கலாம். அல்லது வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் கையில் போட்டுக் கொள்ளச் சொல்லலாம். அந்த தட்டில் இருக்கும் தாலிக்கயிறை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது அம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று அந்த கோவிலில் இருக்கக்கூடிய மரத்தில் கட்டி விட்டு வரலாம். மஞ்சள் குங்குமத்தை தினமும் வெற்றியில் இட்டுக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இவ்வாறு மங்களத்தைக் கொடுக்கக்கூடிய பொருட்களை பூஜை அறையில் வைத்து தினம்தோறும் வழிபாடு செய்வதன் மூலம் நம் வீட்டிற்கு சுபிட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை முடிந்தால். 11 வளையல், 21 வளயல் என்ற கணக்கில் வளையலை மாலையாக கட்டியும் வீட்டில் இருக்கும் அம்பாலின் திருவுருவப்படத்திற்கு மாலை போடலாம். மிகவும் சிறப்பு வாய்ந்த நல்ல பலனை கொடுக்கும்.

குறிப்பாக இப்போது ஆடி மாதம் என்பதால் அம்மனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம். உங்களால் எப்போதும் பூஜை அறையில் இந்த பொருட்களை எல்லாம் வைத்து பராமரிக்க சிரமம் என்றால், இந்த ஆடி மாதம் ஒரு நாள் இந்த பூஜையை தொடங்கி, தொடர்ந்து 11 நாட்கள் தாலி கயிறு வளையல் மஞ்சள் குங்குமம் இந்த பொருட்களை வைத்து பூ வைத்து பூஜை செய்து அந்த பொருளை யாரேனும் ஒரு ஏழை பெண்ணுக்கு தானமாக கொடுப்பது சிறந்த பலனை கொடுக்கும். உங்களுக்கு வசதி இருந்தால் இதனுடன் ஒரு புடவை ரவிக்கை துணி வெற்றிலை பாக்கு ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கூட தானம் கொடுக்கலாம் தவறு கிடையாது. மேல் சொன்ன பரிகாரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -