கோவிலுக்கு செல்லும் போது அம்மன் பாதத்திலிருந்து இந்த 1 பொருட்கள் கிடைத்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி.

amman2
- Advertisement -

அம்மனின் பாதத்திலிருந்து நம் கைக்கு வரக்கூடிய ஒவ்வொரு பொருளிலும் நேர்மறை ஆற்றல் நிறைந்தாக தான் இருக்கும். அந்த அம்மனின் அருள் இருந்தால் தான் இப்படிப்பட்ட பொருட்கள் எல்லாம் நமக்கு கிடைக்கும். இந்த உலகத்தையே காத்துக் கொண்டிருப்பவள் சக்தி தேவி. அவள் பாதங்களில் வைத்த பொருள் எதுவாக இருந்தாலும் அது நம்முடைய குடும்பத்தை காக்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. எங்களுக்கு பரிகாரம் செய்யவோ, விளக்கு ஏற்றவோ அல்லது வேறு ஏதாவது வழிபாடு செய்யவோ நேரம் இல்லை என்று நினைப்பவர்கள் பின் சொல்லக்கூடிய பரிகார முறைகளை பின்பற்றினாலே போதும். வீட்டில் நல்லது மட்டுமே நடக்கும்.

நிறைய கோவில்களில் அம்மனின் பாதங்களில் மஞ்சளும் குங்குமமும் இட்டு வைத்து இருப்பார்கள், கொட்டியும் சில பேர் இருப்பார்கள். சில பேர் மஞ்சள் குங்குமத்தை தடவியும் வைத்திருப்பார்கள். குருக்களிடம் கேட்டு அந்த மஞ்சள் குங்குமத்தை கொஞ்சமாக வாங்கி வீட்டிற்கு கொண்டுவந்து, திருமணம் ஆகாத பெண்ணின் ஜாதகத்தில் அல்லது ஆண் மகனின் ஜாதகத்தில் வைத்தால் அந்த ஜாதகத்திற்கு சீக்கிரம் திருமணம் நடக்கும்.

- Advertisement -

அந்த குங்குமம் மஞ்சளை நெற்றியிலும் இட்டுக் கொள்ளலாம். தவறு கிடையாது. சில கோவில்களில் அம்மன் பாதங்களில் தாம்பூலம் வைத்திருப்பார்கள். வெற்றிலை பாக்கு வாழைப்பழம் மஞ்சள் வைத்திருப்பாங்க. அந்த தாம்பூலம் நமக்கு கிடைத்தால் மிகமிக அதிர்ஷ்டம். அந்த தாம்பூலத்தை கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விட்டு, அந்த வெற்றிலையில் 2 ஏலகாகாய்களை வைத்து சுருட்டி பண பெட்டியில் வைத்தால் பணம் சேரும்.

அம்மன் பாதங்களில் வைத்து பூஜை செய்த மஞ்சள் கயிறு கிடைத்தால் கூட சிறப்பு. நிறைய பேர் வேண்டுதலுக்காக மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்வார்கள். அந்த மஞ்சள் கயிறை வாங்கி வந்து வீட்டில் இருக்கக்கூடிய பெண் குழந்தைகள், மற்ற குழந்தைகள் கையில் கட்டி வைப்பது மிகவும் நல்லது.

- Advertisement -

அம்மன் பாதங்களில் வைக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தைக் கொண்டு வந்து ஒரு மஞ்சள் துணியில் கட்டி நிலை வாசலில் கட்டி தொங்கவிட்டால் மிகவும் நல்லது. வீட்டிற்குள் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் வராது. விசேஷ காலத்தில் அம்மன் கோவிலில் வேப்ப இலைகள் நிறைய கிடைக்கும். அம்மன் சிலைக்கு அருகில் இருக்கக்கூடிய அந்த வேப்ப இலைகளை சிறிதளவு வீட்டிற்கு கொண்டு வந்து நம் வீட்டு வாசலில் கட்டலாம்.

கொஞ்சம் வேப்ப இலையை உருவி தண்ணீரில் போட்டு அந்த தண்ணீரை நிலை வாசலில் தெளித்து விடுவது மிக மிக நல்லது. கண்ணுக்கு தெரியாத கிருமிகள் அழிவதோடு கண் திருஷ்டி, கெட்ட சக்தியும், அழிந்துபோகும். மேல் சொன்ன சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றுங்கள். நிச்சயம் நமக்கு நல்லது மட்டுமே நடக்கும்.

- Advertisement -