அம்மனை நினைத்து இந்த இலையை உங்கள் கையால் பூஜை அறையில் வைத்து என்ன வரம் கேட்டாலும் அது உடனே நடக்கும்.

amman3
- Advertisement -

நாம் வேண்டி கேட்கக்கூடிய வரங்களை வாரி வழங்கக் கூடிய சக்தி கொண்டவள் தான் அம்பாள். இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அது இந்த உலகத்தின் தாயான சக்தி தேவியின் மூலமாகத்தான். குலதெய்வ வழிபாட்டிற்கு பிறகு, ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெண்களும் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அம்மன் வழிபாடு பெண்களுக்கு அருள் ஆசியை வழங்குவதோடு, பெண்களுக்கு மன தைரியத்தையும் உறுதியையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை. ஏனென்றால் ஒவ்வொரு பெண்களுமே சக்தி தேவியின் ஸ்ரூபமாக இந்த பூமியில் அவதரித்தவர்கள் தான். சரி வேண்டுதலை நிறைவேற்ற, வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் தீர, வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சி நடக்க, நோய் நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்வைப் பெற, அம்மன் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது என்பதை பற்றிய ஒரு சின்ன குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இந்த பரிகாரத்தை நிறைந்த பௌர்ணமி தினமான நாளைய தினம் செய்யலாம். தவறு கிடையாது. அம்மனுக்கு நிறைந்த பௌர்ணமி நாள் ரொம்ப ரொம்ப விசேஷம். ஒருவேளை நாளைய தினம் செய்ய முடியாதவர்கள், வரப் போகின்ற ஆடி மாத வெள்ளிக்கிழமை அன்று செய்யலாம். ஆடி மாதம் முதல் தேதியில் செய்யலாம். ஆடி மாத செவ்வாய் கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்று உங்களுக்கு எந்த நாள் சௌகரியப்படுகிறதோ அந்த நாளில் செய்யுங்கள்.

- Advertisement -

இந்த பூஜையை நாளை செய்வதாக இருந்தால் இன்றே ஒரு வேப்ப மரத்தில் இருந்து கொஞ்சமாக வேப்ப இலைகளை கொண்டு வந்து வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பெண்கள் காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு நிலை வாசலில் கோலம் போட்டுவிட்டு பூஜை அறைக்கு வந்து தீபம் ஏற்றி வைத்துவிட்டு அம்மன் படத்திற்கு அலங்காரம் செய்து விடுங்கள். முடிந்தால் மஞ்சள் புடவை கட்டிக்கொண்டு இந்த பூஜையை செய்யுங்கள்.

சதுர வடிவில் இருக்கும் ஒரு மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு வேப்ப இலைகளை வைத்து விட்டு, ஒரு விரலி மஞ்சள், ஒரு ரூபாய் நாணயம், வைத்து முடிச்சாக கட்டி அம்மனின் பாதங்களில் வைத்து விடுங்கள். உங்கள் வீட்டில் எந்த அம்மனின் திருவுருவப்படம் இருந்தாலும் அந்த அம்மன் பாதங்களில் இதை வைத்து விட வேண்டும். உங்களுடைய வீட்டில் அம்மன் படமே இல்லை என்றாலும் காமாட்சியம்மன் விளக்கு, கஜலட்சுமி அம்மன் விளக்கு இருக்கும் அல்லவா அந்த விளக்குக்கு பக்கத்தில் இந்த முடிச்சை வைத்துவிட்டு பூஜை அறையில் அமர்ந்து உங்களுடைய வேண்டுதலை வையுங்கள். எந்த வேண்டுதலாக இருந்தாலும் பரவாயில்லை. அது உங்களுடைய கஷ்டத்தை பொருத்தது.

- Advertisement -

ஐந்து நிமிடங்கள் மனதார உங்களுடைய பிரார்த்தனையை செய்து விட்டு இந்த முடிச்சை பணம் வைக்கும் பெட்டியிலும் வைக்கலாம். அப்படி இல்லை என்றால் பூஜை அறையிலும் வைத்துக் கொள்ளலாம். ஐந்து நாட்கள் இந்த முடிச்சு அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கட்டும்.

ஐந்தாவது நாள் இந்த முடிச்சை பிரித்து காய்ந்த வேப்ப இலைகளை வேப்ப இலைகளை பொடி செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்த பொடியை நெற்றி இழித்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது தண்ணீரில் இருந்த பொடியை கலந்து வீட்டின் மூளை முடுக்குகளில் தெளிக்கலாம். அம்மனின் அருள் நிறைந்த வேப்ப இலைகள் அது.

மஞ்சள் கிழங்கை இழைத்து பெண்கள் முகத்தில் பூசிக்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த ஒரு ரூபாய் நாணயத்தை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு அம்மன் உண்டியலில் சேர்த்து விட்டு. உங்கள் பெயரைச் சொல்லி அம்பாளிடம் அர்ச்சனை செய்து கொண்டு வீடு திரும்புங்கள். அந்த இடத்திலும் உங்களுடைய வேண்டுதலை அம்பாளின் பாதங்களில் வைத்து விடுங்கள். இந்த சின்ன பரிகாரத்தை செய்தால் உங்களுடைய நிறைவேறாத வேண்டுதலும் சீக்கிரம் நிறைவேறும். முயற்சி செய்து பாருங்கள். அம்பாள் உங்களை கைவிடமாட்டாள் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -