அணையா தீப வழிபாடு

amman4
- Advertisement -

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கிறது. கஷ்டமே இல்லாத குடும்பத்தை பார்க்க முடியாது. ஆனால் ஒரு சில குடும்பத்தில் மட்டும் இந்த கஷ்டத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். பல வருடங்களாக ஒரு கஷ்டத்தை நினைத்து வீட்டில் இருப்பவர்கள் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

தீராத துயரம் அப்படின்னு சொல்லுவாங்க அல்லவா அப்படி ஒரு கஷ்டம் சில குடும்பங்களில் இருக்கும். உதாரணத்திற்கு குடும்பத்தில் இருக்கக்கூடிய யாரோ ஒருவர் தொலைந்து போயிருப்பாங்க. அவங்க இருக்காங்களா செத்துட்டாங்களா, அப்படின்னு கூட குடும்பத்திற்கு தெரியாது. இது வீட்டில் இருப்பவர்களுக்கு பெரிய அளவில் வேதனையை கொடுக்கும்.

- Advertisement -

சில குடும்பத்தில் எல்லாம் வீட்டில் இருந்த நபர் யாரிடமும் சொல்லாமல் குடும்பத்தை விட்டு ஓடி போயிருப்பாங்க. அதாவது குடும்பமே வேண்டாம் என்று எங்கேயோ கண் மறைவாக சென்று இருப்பார்கள். அவர்களை இழந்த குடும்பம் கஷ்டத்தில் தத்தளித்து வரும். அந்த நபரை கண்டுபிடிக்கவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இப்படி உங்கள் குடும்பத்தில் இருக்கும் திக்குத் தெரியாத பிரச்சனைகளை தீர்த்து வைக்கக்கூடிய அம்பாள் வழிபாட்டை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

அணையா விளக்கு பரிகாரம்

உங்களுடைய வீட்டில், விளக்கு 11 நாட்கள் அணியாமல் எரிய வேண்டும். இதுதான் இந்த அணையா விளக்கு பரிகாரம். வீட்டில் இருக்கும் பெண்கள் தான் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். உங்கள் மனதில் இருக்கும் கஷ்டம் தீர வேண்டும் என்று ஒரு வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை தொடங்குங்கள். கொஞ்சம் பெரிய மண் அகல் விளக்கு வாங்கிக்கோங்க. அதில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி, பராசக்தியை லலிதாம்பிகையை வணங்க வேண்டும்.

- Advertisement -

எல்லா பெண் தெய்வங்களும் அம்பாள் சொரூபம் தான். நீங்கள் உங்களுடைய மனதில் எந்த பெண் தெய்வத்தை நினைத்து இந்த வழிபாட்டை தொடங்கினாலும் சரி. நீங்கள் வெள்ளிக்கிழமை ஏற்றிய விளக்கு அடுத்த 11 நாளும் அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அணையா விளக்கு வீட்டில் எறிந்து கொண்டே இருக்க போகின்றது. அந்த விளக்கு ஏற்றி வைத்திருக்கக் கூடிய இடத்திற்கு பக்கத்திலேயே நீங்கள் ஒரு சுத்தமான விரிப்பு விரித்து இரவில் தூங்க வேண்டும்.

தினமும் அம்பாளை நினைத்து பூஜை அறையில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். ‘ஓம் சக்தி’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி குங்கும அர்ச்சனை செய்யுங்கள். 11 நாட்களும் உங்களுடைய பிரார்த்தனையை அம்பாளிடம் குங்கும அர்ச்சனை செய்து கற்பூர ஆரத்தி காண்பித்து சொல்லுங்கள். இந்த பூஜையை அம்பாள் உடனடியாக ஏற்றுக்கொள்வாள்.

- Advertisement -

ஏதாவது ஒரு ரூபத்தில் அம்பாள் உங்களுக்கு உதவி செய்ய உங்கள் வீடு தேடி வந்து விடுவாள். பதினோரு நாள் கழித்து அணையா விளக்கு வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். 11 நாட்களிலேயே உங்கள் தீராத துன்பம் தீரும். ஒரு வேலை 11 நாட்களில் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறவில்லை என்றால் அடுத்தடுத்த நாளிலும் வீட்டில் தினமும் விளக்கு ஏற்றி அம்பாளை மனதார நினைத்து அம்பாளுக்கு அர்ச்சனை செய்த குங்குமத்தை தினமும் நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்.

நிச்சயமாக 48 நாட்களுக்குள் உங்கள் மனதில் இருக்கும் அந்த கஷ்டத்தை அம்பாள் சரி செய்து வைத்துவிடுவாள். இது ஒரு அதிசக்தி வாய்ந்த பரிகாரம். நம்பிக்கையோடு செய்யணும். 11 நாள் அந்த விளக்கை அணியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் உங்களால் இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியும். இதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கு என்பவர்கள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

இதையும் படிக்கலாமே: நிறைவேறாத ஆசையை நிறைவேற்றி தரும் சக்தி சக்கரம்

தீரா கஷ்டத்தில் சிக்கி இருப்பவர்களுக்கு அதிலிருந்து மீண்டு வர இந்த பரிகாரம் ஒரு வரப் பிரசாதம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -