நிறைவேறாத ஆசையை நிறைவேற்றி தரும் சக்தி சக்கரம்

meditation
- Advertisement -

மனதில் நினைத்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு முதலில் தேவைப்படக்கூடிய விஷயம் நம்பிக்கை. உறுதியோடு நம்பிக்கையோடு இருந்தால் மட்டுமே நம்முடைய ஆசைகள் நிறைவேறும். கற்பனைகள் நிஜமாக மாறும். ஆசை இல்லாமல் எந்த மனிதர்களாலும் வாழ முடியாது. உங்களுடைய மனதிலும் நிச்சயமாக நிறைவேறாத ஆசை ஏதாவது ஒன்று இருக்கும்.

உதாரணத்திற்கு, நல்ல வேலை கிடைக்கணும், நிறைய பணம் சம்பாதிக்கணும், சமூகத்தில் நான்கு பேர் மதிக்கும் அளவுக்கு உயர்ந்த நிலையில் வாழ வேண்டும் இப்படி எல்லாம் மனதில் கற்பனைகளும் ஆசைகளும் மட்டும் இருந்தால் அந்த ஆசையை நம்மால் நிறைவேற்றிக் கொள்ளவே முடியாது. அந்த ஆசை நிறைவேருவதற்கான முயற்சிகளை நாம் விடாமல் மேற்கொள்ள வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்தி முன்னேற்றத்தில் மட்டும் நம்முடைய கவனத்தை செலுத்த வேண்டும். கவனத்தை அனாவசியமாக தேவையில்லாத மற்ற விஷயங்களில் சிதற விடக்கூடாது. அதற்கான ஒரு சின்ன பயிற்சி தான் இந்த சக்தி சர்க்கர பயிற்சி.

- Advertisement -

ஆசையை நிறைவேற்றிக் கொள்ள சக்தி சக்கர பயிற்சி

அதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இந்த சக்தி சக்கரத்தை டவுன்லோட் பண்ணி உங்க மொபைல் போன்ல வச்சுக்கோங்க. மேலே இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்தாலே தெரியும் சக்தி சக்கரம் எப்படி இருக்கும் என்று. ஒரு புகைப்படமாக இதை வைத்துக் கொண்டால் போதும். தினமும் இந்த சக்கரத்தை பார்த்து இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். உங்களுடைய வீட்டில் ஒரு சுவற்றில் இந்த சக்கரத்தை பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டி வச்சுக்கோங்க.

30 வினாடிகள் சக்கரத்தின் நடுப்பகுதியை மட்டும் உற்று பாருங்கள். பிறகு கண்களை மூடி மனதை ஒரு நிலைப்படுத்தி, அதன் பிறகு உங்களுடைய ஆசையை இந்த பிரபஞ்சத்திடம் சொல்ல வேண்டும். அந்த ஆசை நிறைவேறி விட்டதாக கற்பனை செய்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நல்ல வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்.

- Advertisement -

அந்த வேலை உங்களுக்கு கிடைத்து விட்டதாகவும், முதல் மாதம் சம்பளம் வாங்கி விட்டதாகவும், அந்த சம்பளத்தை வீட்டுக்கு கொண்டு வந்து பெற்றவர்கள் கையில் கொடுத்து மகிழ்ச்சி அடைவதாகவும் நீங்களே கற்பனை செய்து கொள்ள வேண்டும்.

பிறகு மீண்டும் கண்களை திறந்து இந்த சக்தி சக்கரத்தை பாருங்கள். 30 செகண்ட் சக்கரத்தை பார்த்துவிட்டு, மீண்டும் ஒருமுறை உங்களுடைய ஆசை நிறைவேறி விட்டதாக மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்படி ஒரு பத்து நிமிடம் இந்த சக்கரத்தின் முன்பாக உங்களுடைய வேண்டுதலை வைக்கும்போது நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்.

- Advertisement -

கற்பனையில் உங்களுக்கு கிடைத்த அந்த பெரிய வேலையானது ஒரு சில நாட்களிலேயே நிஜத்திலும் கிடைக்கும். ஆனால் அதற்கான முயற்சியை நீங்கள் இடைவிடாமல் மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சியை எப்போது செய்வது. காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில், சூரிய உதயத்திற்கு முன்பு இந்த பயிற்சியை செய்தால் உங்களுடைய ஆசை விரைவாக நிறைவேறிவிடும். முடியாதவர்கள் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த சக்கரத்தை பார்த்து இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம் தவறு கிடையாது. ஒரு நாளைக்கு ஒருமுறை கட்டாயம் இந்த பயிற்சியை செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சொந்த வீடு அமைய தானம்

ஒரு முறைக்கு மேலே செய்வதற்கு உங்களுக்கு நேரம் இருக்கிறது என்றால் காலை ஒரு முறை, மாலை ஒரு முறை செய்யலாம் தவறு ஒன்றும் கிடையாது. உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி உங்களுடைய ஆசையை நிறைவேற்ற இந்த பயிற்சி நிச்சயம் உதவியாக இருக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -