பெண்கள் செய்ய வேண்டிய அங்காள பரமேஸ்வரி வழிபாடு

paranesgwari
- Advertisement -

இந்த வழிபாடு பிரத்தியேகமாக பெண்களுக்காக சொல்லப்பட்டது. மன கஷ்டத்தில் இருக்கும் பெண்கள், பணக்கஷ்டத்தில் இருக்கும் பெண்கள், குடும்ப கஷ்டத்தில் இருக்கும் பெண்கள், திருமணமாகாத பெண்கள் என்று இந்த வழிபாட்டை யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். ஒன்பது வியாழக்கிழமையை உங்கள் கோரிக்கையை அம்பாளிடம் இந்த முறையில் வைத்து பாருங்கள்.

உங்களுடைய அந்த பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும். இந்த வழிபாடு வெறும் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்துக்காக மட்டுமல்ல. பணத்தைத் தாண்டி பெண்களுக்கு இன்னும் பல கஷ்டங்கள் இருக்கிறது. அந்த பிரச்சனையையும் சரி செய்யும் சக்தி இந்த வழிபாட்டுக்கு உண்டு. வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த அங்காள பரமேஸ்வரி அம்பாள் வழிபாட்டை வீட்டில் எப்படி செய்வது என்று பார்த்து விடுவோம்.

- Advertisement -

அங்காள பரமேஸ்வரி அம்மன் வழிபாடு செய்முறை

இந்த வழிபாட்டு முறைக்கு நமக்கு நிச்சயம் அங்காள பரமேஸ்வரியின் திருவுருவப்படம் தேவை. அதை சின்னதாக ஒரு அட்டையில் பூஜையறையில் ஒட்டி வைத்தாலும் சரிதான். வியாழக்கிழமை காலை எழுந்து சுத்தபட்டமாக குளித்து விடுங்கள். பூஜை அறையில் அங்காள பரமேஸ்வரிக்கு சிவப்பு நிற அரளி பூ போடலாம் அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் பூக்களை போட்டு ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். குலதெய்வத்தையும் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

வியாழக்கிழமை அந்த அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். 108 முறை ‘ஓம் அங்காள ஈஸ்வரி தாயே போற்றி, ஓம் அங்காள ஈஸ்வரி தாயே துணை’ என்ற இந்த இரண்டு மந்திரத்தை மாற்றி மாற்றி சொல்லுங்கள். இரண்டு மந்திரத்தையும் சேர்த்து உங்களால் எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறை உச்சரிக்கலாம்.

- Advertisement -

கணக்கு என்பது உங்களுடைய விருப்பம் தான். ஒற்றைப்படையில் எத்தனை முறை சொன்னாலும் சரி. இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு மனம் உருகி அங்காள ஈஸ்வரி தாயை வேண்டிக் கொள்ளுங்கள். அர்ச்சனை செய்த குங்குமத்தை பெண்கள் தினம்தோறும் நெற்றியில் வைக்கணும்.

வியாழக்கிழமை அங்காள பரமேஸ்வரி வழிபாட்டை வீட்டில் செய்பவர்களுக்கு அவ்வளவு நன்மை நடக்கும். உங்கள் கஷ்டம் உங்கள் கோரிக்கை எதுவோ, ஒரு கோரிக்கையாக வைத்து ஒன்பது வாரமும் அங்காளீஸ்வரியை வணங்கி வழிபாடு செய்து வர அந்த கஷ்டம் நிச்சயம் தீரும் என்பது நம்பிக்கை. வழிபாட்டை முடித்துவிட்டு கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: ராகுவை சரி செய்யும் தேங்காய் பரிகாரம்

குறிப்பாக பெண்களுக்கு இந்த வழிபாடு சொல்லப்பட்டுள்ளது. கஷ்டத்தில் இருக்கும் பெண்கள் இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பின்பற்றி பாருங்கள். நிச்சயம் உங்களின் போராட்டமான வாழ்க்கைக்கு நிம்மதி கிடைக்கும் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -