ராகுவை சரி செய்யும் தேங்காய் பரிகாரம்

ragu
- Advertisement -

நிறைய பேருக்கு இப்போது ஜோதிடத்தில் விழிப்புணர்வு இருக்கிறது. ஜோதிடம் என்றால் என்ன. நம்முடைய வாழ்க்கையில் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்கள். அப்படி இருக்கும்போது இந்த சனிபகவான், ராகு கேது, இவர்களை பார்க்கும்போதே அவர்களுக்கு ஒரு பயம்.

இவர்கள் நமக்கு கெடுதல் தான் செய்வார்கள் என்று. அப்படியே மிரண்டு போய் இருக்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது. ராகு பகவான் கேது பகவான் சனிபகவான் இப்படி எல்லா கிரகங்களும் நமக்கு நன்மை செய்யக்கூடியவை தான். நம்முடைய கர்ம வினைக்கு ஏற்ப தான் இவர்கள் நம்முடைய ஜாதக கட்டத்தில் அமர்ந்து கொண்டு நமக்கு நன்மை தீமைகளை கொடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

ஆகவே, இவர்களை கண்டு பயப்படுவதை விட்டுவிட்டு நேர்மையாக வாழ்வது எப்படி. அடுத்தவர்களை ஏமாற்றாமல் வாழ்வது எப்படி என்பதை பற்றி சிந்திக்க தொடங்கினாலே போதும். வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம்.

ராகுதோஷம் நீங்க பரிகாரம்

சரிங்க, எனக்கு இதெல்லாம் திருப்தி கிடையாது. என்னுடைய ஜாதக கட்டத்தில் ராகு சரியில்லை. வாழ்க்கையில் தொடர் தோல்விகள் தொடர் கஷ்டங்கள். இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டே இருக்கின்றார். பெரிய அளவில் காசு செலவாக கூடாது. ஆனால் பரிகாரமும் பெரிய அளவில் பலன் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்தால் எனக்கு நன்மை நடக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களுக்காக ஆன்மீகத்தில் ஒரு பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. புதன்கிழமை ஒரு தேங்காய் வாங்கிக்கோங்க. 1/2 கிலோ கருப்பு உளுந்து வேண்டும் என்றாலும், வாங்கிக்கோங்க. குறைந்தபட்சம் 1/2 கிலோ இருக்க வேண்டும்.

அதற்கு மேலே கருப்பு உளுந்து வாங்கினாலும் தவறு கிடையாது. இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த இரண்டு பொருட்களையும் உங்க உள்ளங்கையில் வச்சுக்கோங்க. குலதெய்வத்தையும் துர்க்கா தேவியையும், ராகு பகவானையும் மனதார நினைத்து வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்கள் எல்லாம் குறைய வேண்டும். தவறு செய்திருந்தால் மன்னிக்க வேண்டும்.

- Advertisement -

கர்ம வினைகள் குறைய வேண்டும். செய்த பாவத்திற்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று மனம் உருகி வேண்டி, இனி வரக்கூடிய காலகட்டம் என்னுடைய வாழ்க்கையில் சிறப்பாக அமைய, உங்களது ஆசீர்வாதம் வேண்டும் என்று அனைவரையும் வணங்கி இந்த இரண்டு பொருட்களை தலைமாட்டில் வைத்து படுத்து தூங்குங்கள். புதன்கிழமை இரவு மட்டும் கொஞ்சம் மெத்தையில் படுக்க வேண்டாம்.

தலையணை வைத்து படுக்க வேண்டாம். சுத்தமாக கழுவிய பாயை விரித்து தலைக்கு மேல் பக்கத்தில் இந்த இரண்டு பொருட்களையும் வைத்து, தூங்குங்க. புதன்கிழமை இரவு இப்படி தூங்கிவிட்டு, வியாழக்கிழமை காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு இந்த இரண்டு பொருட்களை ஒரு தாம்பூல தட்டில் வைத்து, வெற்றிலை பாக்கு வைத்து உங்களால் முடிந்த ஒரு தட்சணையை வைத்து, அப்படியே பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு போய், அந்த கோவிலில் இருக்கும் ஒரு அர்ச்சகருக்கு இந்த பொருட்களை தானமாக கொடுத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தொட்ட காரியம் எல்லாம் வெற்றி அடைய பரிகாரம்.

அவ்வளவு தான். இதே போல ஏழு வாரம் செய்தால் உங்களுக்கு ராகுவால் உண்டாக்கப்படும் கஷ்டங்கள் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. எளிமையான இந்த தானத்தை செய்து அனைவரும் பலன் பெற, ஆண்டவனை வேண்டி ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -